வழிகாட்டும் வான்மறை – தராவீஹ் சிந்தனை –
17.
அல்லாஹ் மேன்மை படுத்திய பத்ரு ஸஹாபாக்கள்!!!
அல்லாஹ்வின்
மகத்தான கருணையினால் 16
–வது நோன்பை நோற்று, 17 – வது தராவீஹை
நிறைவு செய்து,
17 –வது நோன்பை நோற்கும் ஆவலில் எதிர் பார்த்து
காத்திருக்கின்றோம்.
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் நமது நோன்பையும்,
தராவீஹ் தொழுகையையும் கபூல் செய்தருள்வானாக! எதிர் வரும்
நாட்களில் நோன்பு நோற்கும் ஆற்றலையும், தராவீஹ் தொழும்
பாக்கியத்தையும் நஸீபாக்குவானாக!
இன்றைய தராவீஹ்
தொழுகையில் சூரா அல் அன்கபூத்தின் எஞ்சிய 24 வசனங்களையும், சூரா அர் ரூம்,
சூரா லுக்மான், சூரா அலிஃப்,லாம்,மீம் ஸஜ்தா,
சூரா அல் அஹ்ஸாப் ஆகிய சூராக்கள் நிறைவு செய்யப்பட்டு 191 வசனங்கள் ஓதப்பட்டுள்ளது.
இன்று பத்ருப்
போர் நடைபெற்று வெற்றி வாகை சூடிய நாள். ஹிஜ்ரீ 2 ம் ஆண்டு (கி.பி. 624
மார்ச் 14 ம் தேதி) ரம்லான்
மாதத்தின் 17
ம் நாளன்று வெள்ளிக்கிழமை காலையில் தொடங்கி சூரியன் தன்
சுடரை பாய்ச்சத் தொடங்குவதற்கு முன்பாகவே முடிந்து போன அந்த யுத்தத்த்தின்
நிகழ்வுகளையும் அதன் நாயகர்களான 313 நபித்தோழர்களையும் அந்த
களத்தில் தங்களுடைய உயிர்களை நீத்த தியாகிகளான 14 ஷுஹதாக்களையும் ஒவ்வொரு ஆண்டும் இந்த உம்மத் உலகின் பல பாகங்களிலும் தங்களுடைய
இடங்களில் இருந்தவாறு
ரமலான் 17 ம் நாள் அன்று நினைவு
கூறுகின்றது.
இன்றும் கூட
உம்ராவிற்காக பயணமேற்கொள்கிற புனிதப் பயணிகள் அந்தப் பொட்டல் வெளியில் அதே
தினத்தன்று திரளாக கூடி
ஆயிரத்து நானூற்றி சொச்சம் வருடங்களுக்கு முந்தைய அந்த
நிகழ்வை உணர்வுப்பூர்வமாக நினைவு கூர்ந்து பத்ரு யுத்தத்தில் நபி (ஸல்) அவர்களோடு
மிக உறுதியுடன்,
ஈமானியப் பற்றுடன், இறைக் காதலுடன் கலந்து
கொண்ட அந்த நட்சத்திர அந்தஸ்து கொண்ட நபிதோழர்களுக்கு நன்றி செலுத்தி
வருகிறார்கள்.
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் அந்த நபித்தோழர்களை சங்கை படுத்துவானாக! அவர்களின் பரக்கத்தால் நம் வாழ்வை
வசந்தமாக்குவானாக!
பத்ர் அரசியலா? ஆன்மீகமா?
பத்ரை அரசியலோடு
இணைத்துப் பேசும் வரலாற்று ஆசிரியர்கள் உண்டு. பத்ரை ஆன்மீகத்தோடு இணைத்துப்
பேசுகிற வரலாற்று ஆசிரியர்கள் உண்டு. அரசியலோடும், ஆன்மீகத்தோடும் இரண்டறக் கலந்தது தான் பத்ர் என்றால் அது மிகையாகாது.
அரசியலுக்கான
எத்தனையோ முன்மாதிரிகள் பத்ரிலே நிகழ்ந்திருக்கிறது. ஆன்மீகத்துக்கான எத்தனையோ
முன்மாதிரிகளும் பத்ரிலே உண்டு.
ஒரு தலைவராக ஒரு
வழிகாட்டியாக மாநபி ஸல் அவர்கள் நபித்தோழர்களோடு நின்ற, பேசிய உத்வேகப்படுத்திய, இரண்டறக் கலந்த எத்தனையோ
தருணங்கள் அங்கே உண்டு.
பெயருக்கு தான்
அரீஷ் கூடாரம் போடப்பட்டிருந்தது. ஆனால், யுத்த களத்தில் நபிகளார்
நின்றதோ நபித்தோழர்களோடு,
நபித்தோழர்களின் சிந்தனையோடு.
இப்படி
அரசியலுக்கான முன் மாதிரிகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
இன்னொரு புறம், மூஸா (அலை) அவர்களின் சமூகம் சொன்னது போல நாங்கள் சொல்ல மாட்டோம். நீங்கள்
கடலில் குதிக்கச் சொன்னாலும், நாங்கள் தயாராக
இருக்கிறோம்,
கையிலிருக்கும்
கனிகளைத் தின்று தீர்க்கும் வரை காத்திருப்பதென்பது இவ்வுலகில் நீண்ட காலம்
ஜீவித்திருப்பதைப் போலிருக்கிறது. அதுவரை என்னால் எப்படிப்
பொறுத்துக் கொண்டிருக்க முடியும்’ என்று கூறியவாறு
கையிலிருந்த கனிகளை தூர எறிந்து விட்டு கரத்திலே வாளேந்தி பத்ரு போரிலே உடலை
விட்டு உயிர் பிரியும் வரை போராடி பத்ருப் போரில் முதன் முதலாக ஷஹீதான மிஹ்ஜஹ்
(ரலி) வீர வார்த்தைகள்,
தந்தை கைஸமாப்
பார்த்து என் அருமை தந்தையே! இது சுகப் பிரச்சனை அல்ல. சொர்க்கப் பிரச்சனை.
சொர்க்கம் அல்லாத வேறு விஷயமாக இருப்பின் உங்களுக்காக நான் விட்டுக்
கொடுத்திருப்பேன். இது சொர்க்கத்தையே கூலியாக பெறும் பேராகும். இதில் யாருக்கும்
விட்டு கொடுக்க மாட்டேன் என்று வாதிட்ட ஸஅது (ரலி) அவர்களின் ஷஹீதாகும் வேட்கை,
இங்கே யார்
அபூஜஹ்ல்,
அவன் என் உயிருக்கு உயிரான உயிரினும் மேலான என் ஹபீபை கடுஞ்
சொற்களால் விமர்சிக்கின்றானாமே காட்டுங்கள் அவனை கொன்று விடுகின்றேன் என்று சொன்ன
இளந்தளிர் இருவரின் நபிநேசக் காதல் வார்த்தைகள்,
அல்லாஹ்வின்
மீதும் அவனது தூதரின் மீதும் உள்ளத்தில் இருந்து கொட்டிய இந்த அன்புக்
கட்டுப்படுதலை
ஆன்மீகத்துக்கான முன் மாதிரிகளாக அடுக்கிக் கொண்டே போகலாம்.
உண்மையில் பத்ரு
ஸஹாபாக்கள் இந்த உம்மத்தின் எல்லா காலத்துக்குமான, இந்த உம்மத் சந்திக்கின்ற எல்லா தளத்துக்குமான ஆன்மீகம், அரசியல் என அனைத்துக்குமான முன்மாதிரிகள்.அவர்கள் இல்லாமல் இந்த உம்மத் இல்லை
என்று சொன்னால் அதுவும் மிகையாகாது.
அப்படிப்பட்ட
பத்ரு ஸஹாபாக்களை அல்லாஹ் எப்படி எல்லாம் மேன்மை படுத்தினான் என்பதை இன்றைய
அமர்வில் தராவீஹ் சிந்தனையாக நாம் பார்க்க இருக்கின்றோம்.
பத்ரு
ஸஹாபாக்களை அல்லாஹ் பல்வேறு வகைகளில் மேன்மை படுத்திய நிகழ்வுகள் குர்ஆனிலும், நபிமொழி கிரந்தங்களிலும் நிரம்பக் காணக்கிடைக்கின்றன.
அவைகளில் சிலதை இங்கு காண்போம்..
1.
அவர்களின் பிரார்த்தனைகளை அங்கீகரித்து முன் மாதிரியான உதவியை "பத்ர்
களத்திலேயே" செய்து மான்மை படுத்தினான்..
وَلَقَدْ
نَصَرَكُمُ اللّٰهُ بِبَدْرٍ وَّاَنْـتُمْ اَذِلَّةٌ فَاتَّقُوا اللّٰهَ
لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ
பத்(ருப்போ)ரில்
நீங்கள் (மிகவும் சக்தி) குறைந்தவர்களாக இருந்தபோது, அல்லாஹ் உங்களுக்கு உதவிபுரிந்தான்; ஆகவே, நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
اِذْ
تَقُوْلُ لِلْمُؤْمِنِيْنَ اَلَنْ يَّكْفِيَكُمْ اَنْ يُّمِدَّكُمْ رَبُّكُمْ
بِثَلٰثَةِ اٰلَافٍ مِّنَ الْمَلٰٓٮِٕكَةِ مُنْزَلِيْنَؕ
(நபியே!)
நம்பிக்கையாளர்களிடம்,
"வானிலிருந்து இறக்கப்பட்ட மூவாயிரம் வானவர்களைக் கொண்டு, உங்களுடைய இறைவன் உங்களுக்கு உதவி செய்வது உங்களுக்குப் போதாதா?" என்று நீர் கூறியதை(யும் நினைவு கூர்வீராக)! ( அல்குர்ஆன்: 3: 123, 124 )
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் தான் செய்த உதவியை நினைவு கூறச் சொல்வதோடு பெருமானார் ஸல் அவர்களிடமும்
தான் செய்த உதவியை நினைத்துப் பார்க்கச் சொல்லுமாறு உத்தரவிட்டதோடு அந்த உதவியின்
பின்புலத்தில் இருந்த பேருண்மையை இன்னொரு ஆயத்தில் தெளிவு படுத்தினான்.
اِذْ
تَسْتَغِيْثُوْنَ رَبَّكُمْ فَاسْتَجَابَ لَـكُمْ اَنِّىْ مُمِدُّكُمْ بِاَلْفٍ
مِّنَ الْمَلٰۤٮِٕكَةِ مُرْدِفِيْنَ
(நினைவு கூருங்கள்):
நீங்கள் உங்கள் இறைவனின் உதவியை நாடியபோது: "(அணி அணியாக உங்களைப்) பின்பற்றி
வரக்கூடிய ஓராயிரம் வானவர்களைக் கொண்டு, நிச்சயமாக உங்களுக்கு
நான் உதவி புரிவேன்" என்று அவன் உங்களுக்குப் பதிலளித்தான். ( அல்குர்ஆன்: 8: 9 )
2. பத்ரின் போது வெளிப்படுத்திய அவர்களின் ஈமானிய வலிமையை ஆயத்தை இறக்கி
அல்லாஹ் சங்கை படுத்தினான்.
صدق الصحابة في موالاتهم للمؤمنين، ومعاداتهم
للكافرين، وقد ظهر ذلك في غزوة بدر، عندما قتل عمر بن الخطاب خاله العاص بن هشام
بن المغيرة، ولم يلتفت إلى قرابته منه، وهَمّ أبو بكر بقتل ابنه عبد الرحمن، وقتل
حمزة وعلي وعبيدة بن الحارث أبناء عمهم عتبة وشيبة والوليد بن عتبة،
நபித்தோழர்களின் ஈமானிய வலிமையை, இறை நம்பிக்கையாளர்கள் மீது அவர்கள் வைத்திருந்த பற்றை, இறைவிரோதிகளான இறைமறுப்பாளர்கள் மீது அவர்கள் வெளிப்படுத்திய வெறுப்பை பத்ரிலே
அவர்கள் தங்களுடைய செயல்களால் வெளிப்படுத்திய போது... உமர் (ரலி) அவர்கள் தமது தாயின்
சகோதரர் ஆஸ் இப்னு ஹிஷாமை கொன்றதையும், பின்நாளில் ஒரு நாள்
பத்ருடைய சூழலில் நீ என் எதிரே வந்திருந்தால் மகன் என்று கூட பார்க்காமல் உன்னை
நான் வீழ்த்தி இருப்பேன் என்று தம் மகன் அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்களிடம்
அபூபக்ர் (ரலி) தம் ஈமானிய உணர்வை வெளிப்படுத்தியதையும், ஹம்ஜா (ரலி),
அலீ (ரலி), உபைதா இப்னு ஹாரிஸ் (ரலி)
ஆகியோர் முறையே தமது தந்தையின் சகோதரர்களான உத்பா, ஷைபா,
வலீத் இப்னு உத்பா ஆகியோரை கொன்றதையும் பின்னணியாக வைத்து
சிலாகித்து கூறி பின்நாளில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஒரு ஆயத்தையே இறக்கினான்.
وذلك في المبارزة، قال تعالى:
لا تَجِدُ قَوْماً يُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ
يُوَادُّونَ مَنْ حَادَّ اللَّهَ وَرَسُولَهُ وَلَوْ كَانُوا آبَاءَهُمْ أَوْ
أَبْنَاءَهُمْ أَوْ إِخْوَانَهُمْ أَوْ عَشِيرَتَهُمْ أُوْلَئِكَ كَتَبَ فِي
قُلُوبِهِمْ الإِيمَانَ وَأَيَّدَهُمْ بِرُوحٍ مِنْهُ وَيُدْخِلُهُمْ جَنَّاتٍ
تَجْرِي مِنْ تَحْتِهَا الأَنْهَارُ خَالِدِينَ فِيهَا رَضِيَ اللَّهُ عَنْهُمْ
وَرَضُوا عَنْهُ أُوْلَئِكَ حِزْبُ اللّـهِ أَلا إِنَّ حِزْبَ اللَّهِ هُمْ
الْمُفْلِحُونَ ﴾ [المجادلة:
22].
அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பும் சமூகத்தினர், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பகைத்துக்கொண்டவர்களை நேசிப்பவர்களாக (நபியே!)
நீர் காணமாட்டீர்;
அவர்கள் தங்கள் பெற்றோராயினும் தங்கள் புதல்வர்களாயினும்
தங்கள் சகோதரர்களாயினும் தங்கள் குடும்பத்தினராயினும் சரியே; (ஏனெனில்,)
அத்தகையவர்களின் இதயங்களில், (அல்லாஹ்) நம்பிக்கையை எழுதி(ப் பதித்து) விட்டான்; மேலும்,
அவன் தன்னிடமிருந்து (அருள் என்னும்) ஆன்மாவைக்கொண்டு
பலப்படுத்தியிருக்கிறான்;
சுவர்க்கச் சோலைகளில் அவர்களைப் பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டு இருக்கும்: அவற்றில் அவர்கள் நிரந்தரமாக(த்
தங்கி) இருப்பவர்கள்;
அல்லாஹ் அவர்களைப் பொருந்திக்கொண்டான்; அவர்களும் அவனைப் பொருந்திக்கொண்டார்கள்; அவர்கள்தாம் அல்லாஹ்வின்
கூட்டத்தினர்;
அறிந்து கொள்க! நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர்தாம்
வெற்றி பெறுபவர்கள். ( அல்குர்ஆன்: 58: 22 )
3. பத்ரு ஸஹாபாக்களால் பத்ரில் கலந்து கொண்ட வானவர்களுக்கு கிடைத்த கௌரவம்...
عن
رفاعة بن رافع الزرقي رضي الله عنه قال: جاء جبريل إلى النبي صلى الله عليه وسلم
قال: ما تَعُدُّونَ أهل بدر فيكم؟ قال: «من أفضل المسلمين» أو كلمة نحوها. قال:
وكذلك من شهد بدرا من الملائكة.
[صحيح] - [رواه البخاري]
உபைதுல்லாஹ் பின்
அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:- நபி (ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து, உங்களிடையே பத்ருப் போரில் கலந்து கொண்டவரைப் பற்றி என்ன கருதுகிறீர்கள் என்று
கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (பத்ரில் கலந்து
கொண்டோர்) முஸ்லிம்களில் சிறந்தவர்கள் என்றோ அல்லது அதுபோன்ற வேறொரு வார்த்தையையோ
கூறினார்கள். (உடனே) ஜிப்ரீல் (அலை) அவர்கள், இவ்வாறு தான் வானவர்களில்
பத்ருப் போரில் கலந்து கொண்டவர்கள் (எங்களில் சிறந்தவர்கள் என்று நாங்களும்
கருதுகிறோம்) என்று கூறினார்கள். இந்த ஹதீஸை பத்ருப் போரில் கலந்து கொண்டவரான
ரிஃபஆ பின் ராஃபிஉ அஸ்ஸுரகீ (ரலி) அவர்களிடமிருந்து அவர்களின் புதல்வர் முஆத் பின்
ரிஃபஆ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். ( நூல்: புகாரி )
4. வாழ்விவ் அவர்களின் சின்னச் சின்ன சருகுதல்களை கூட அல்லாஹ் மன்னித்தான்..
عن
عَلِيٍّ رضي الله عنه قَالَ: بَعَثَنِي رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ، أَنَا وَالزُّبَيْرَ وَالْمِقْدَادَ بْنَ الأَسْوَدِ قَالَ:
«انْطَلِقُوا حَتَّى تَأْتُوا رَوْضَةَ خَاخٍ، فَإِنَّ بِهَا ظَعِينَةَ، وَمَعَهَا
كِتَابٌ، فَخُذُوهُ مِنْهَا». فَانْطَلَقْنَا تَعَادَى بِنَا خَيْلُنَا حَتَّى
انْتَهَيْنَا إِلَى الرَّوْضَةِ فَإِذَا نَحْنُ بِالظَّعِينَةِ فَقُلْنَا:
أَخْرِجِي الْكِتَابَ فَقَالَتْ: مَا مَعِي مِنْ كِتَابٍ فَقُلْنَا: لَتُخْرِجَنَّ
الْكِتَابَ أَوْ لَنُلْقِيَنَّ الثِّيَابَ فَأَخْرَجَتْهُ مِنْ عِقَاصِهَا
فَأَتَيْنَا بِهِ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِذَا فِيهِ:
مِنْ حَاطِبِ بْنِ أَبِي بَلْتَعَةَ، إِلَى أُنَاسٍ مِنَ الْمُشْرِكِينَ، مِنْ
أَهْلِ مَكَّةَ، يُخْبِرُهُمْ بِبَعْضِ أَمْرِ رَسولِ اللهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«يَا حَاطِبُ مَا هذَا؟» قَالَ: يَا رَسُولَ اللهِ لاَ تَعْجَلْ عَلَيَّ إِنِّي
كُنْتُ امْرَءًا مُلْصَقًا فِي قُرَيْشٍ، وَلَمْ أَكُنْ مِنْ أَنْفُسِهَا وَكَانَ
مَنْ مَعَكَ مِنَ الْمُهَاجِرِينَ، لَهُمْ قَرَابَاتٌ بِمَكَّةَ يَحْمُونَ بِهَا
أَهْلِيهِمْ وَأَمْوَالهُمْ؛ فَأَحْبَبْتُ، إِذ فَاتَنِي ذَلِكَ مِنَ النَّسَبِ
فِيهِمْ، أَنْ أَتَّخِذَ عِنْدَهُمْ يَدًا يَحْمُونَ بِهَا قَرَابَتِي وَمَا
فَعَلْتُ كُفْرًا وَلاَ ارْتِدَادًا، وَلاَ رِضًا بِالْكُفْرِ بَعْدَ الإِسْلاَمِ.
فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَقَدْ صَدَقَكُمْ».
فَقَالَ عُمَرُ: يَا رَسُولَ اللهِ دَعْنِي أَضْرِبْ عُنُقَ هذَا الْمُنَافِقِ.
قَالَ: «إِنَّهُ قَدْ شَهِدَ بَدْرًا، وَمَا يُدْريكَ لَعَلَّ اللهَ أَنْ يَكُونَ
قَدِ اطَّلَعَ عَلَى أَهْلِ بَدْرٍ، فَقَالَ: اعْمَلُوا مَا شِئْتمْ فَقَدْ
غَفَرْتُ لَكُمْ».
அலி (ரலி) அவர்கள்
அறிவிக்கின்றார்கள்:- நபி ﷺ அவர்கள் என்னையும் ஸுபைர் மற்றும் மிக்தாத் அவர்களையும்
‘நீங்கள் ‘ரவ்ளத்துல் காக்’
எனும் இடம் வரை செல்லுங்கள். ஏனெனில், அங்கு ஒட்டகத்தில் ஒரு பெண் பயணித்துக் கொண்டிருக்கிறாள். அவளிடம் ஒரு கடிதம்
இருக்கிறது. அதை அவளிடமிருந்து பறித்துக் கொண்டு வாருங்கள்” என்று கூறி அனுப்பினார்கள். (அவ்வாறே) நாங்கள் சென்றோம். எங்களைச் சுமந்து
சென்ற எங்கள் குதிரைகள் விரைந்து சென்றன. கடைசியாக, நாங்கள் ‘ரவ்ளா’
எனும் அந்த இடத்தை அடைந்தோம். அங்கு ஒரு பெண்ணைக் கண்டோம்.
நாங்கள் அவளிடம் ‘கடிதத்தை வெளியே எடு”
என்று கூறினோம். அவள், ‘என்னிடம் கடிதம்
எதுவுமில்லை”
என்று கூறினாள். நாங்கள், ‘ஒன்று நீயாகக் கடிதத்தை எடுத்து (கொடுத்து) விடு; இல்லையேல் (உன்) ஆடையை நாங்கள் கழற்றி (சோதனையிட்டு) விடுவோம்” என்று சொன்னோம். உடனே,
அவள் (இடுப்பு வரை நீண்டிருந்த) தன்னுடைய சடையின்
பின்னல்களுக்கிடையேயிருந்து கடிதத்தை வெளியே எடுத்தாள். நாங்கள் அதை மாநபி ﷺ அவர்களிடம் கொண்டு வந்து கொடுத்தோம். அதைப் படித்துப்
போது அதில்,
ஹாத்திப் இப்னு அபீ பல்தஆவிடமிருந்து மக்கா
இணைவைப்பாளர்களின் சிலரின் பெயர் குறிப்பிடப்படு அவர்களின் சமூகத்திற்கு என்று
எழுதத் துவங்கி,
நபி ﷺ
அவர்களின் சில (ரகசியத்) திட்டங்களை (முன்கூட்டியே)
தெரிவித்திருந்ததைக் கண்டோம்.
உடனே, மாநபி ﷺ அவர்கள், ‘ஹாத்திபே! என்ன இது?’
என்று கேட்டார்கள். ஹாத்திப் (ரலி), அவர்கள்,
‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! என் விஷயத்தில் அவரசப்பட்டு
(நடவடிக்கை எடுத்து) விடாதீர்கள். நான் குறைஷிகளில் ஒருவனாக இருக்க வில்லை.
அவர்களைச் சார்ந்து வாழ்ந்தவனாக இருந்து வந்தேன். தங்களுடன் இருக்கும்
முஹாஜிர்களுக்கு அவர்களின் வீட்டாரையும் சொத்துகளையும் பாதுகாப்பதற்கு மக்காவில்
உறவினர்கள் பலர் இருக்கிறார்கள். எனக்கு அவர்களிடையே அத்தகைய உறவினர்கள் (எவரும்)
இல்லாததால் மக்காவாசிகளுக்கு உபகாரம் எதையாவது செய்து, அதன் காரணத்தால் அவர்கள் என் உறவினர்களைக் காப்பாற்ற வேண்டுமென்று
விரும்பினேன். (அதனால் அவர்கள் கேட்டுக் கொண்டபடி இந்தத் தகவலைத் தெரிவித்தேன்.)
நான் சத்திய மார்க்கத்தை நிராகரித்தோ, (இஸ்லாத்தைத்
துறந்து) வேறு மதத்தைத் தழுவுவதற்காகவோ, இஸ்லாத்தைத் தழுவிய பின்
இறைமறுப்பை விரும்பியோ இவ்விதம் செய்ய வில்லை” என்று கூறினார்கள். இதைக்
கேட்டதும் கருணை நபி ﷺ
அவர்கள் ‘இவர் உங்களிடம் உண்மையே பேசினார்” என்று கூறினார்கள்.
அப்போது,
உமர் (ரலி) அவர்கள் இடை மறித்து "அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்களே! இந்த நயவஞ்சகனின் கழுத்தை வெட்டி விட என்னை அனுமதியுங்கள்” என்று கூறினார்கள். அதற்கு மாநபி ﷺ அவர்கள், ‘இவர் பத்ருப்
போரில் கலந்து கொண்டிருக்கிறார். மேலும், உமக்கென்ன தெரியும்? ஒருவேளை அல்லாஹ் பத்ருப் போரில் பங்கெடுத்தவர்களைப் பார்த்து, ‘நீங்கள் விரும்பியதைச் செய்து கொள்ளுங்கள். உங்களை நான் மன்னித்து விட்டேன்’ என்று கூறி விட்டிருக்கலாம்” என்றார்கள். ( நூல்:
புகாரி )
قال ابن
حجر: "وهي بشارة عظيمة لم تقع لغيرهم"
இந்த நபிமொழிக்கு
விளக்கம் தருகிற அல் ஹாஃபிழ் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் நீங்கள் விரும்பியதை செய்து
கொள்ளுங்கள் என்ற வார்த்தை பத்ர் ஸஹாபாக்களைத் தவிர்த்து வேறு யாருக்கும்
சொல்லப்பட வில்லை என்று கூறுகிறார்கள். ( நூல்; ஃபத்ஹுல் பாரி )
5. பத்ரு ஸஹாபாக்கள் நரகம் புக மாட்டார்கள்....
حَدَّثَنَا
قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ
رُمْحٍ، أَخْبَرَنَا اللَّيْثُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ : أَنَّ
عَبْدًا لِحَاطِبٍ جَاءَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَشْكُو حَاطِبًا
فَقَالَ يَا رَسُولَ اللَّهِ لَيَدْخُلَنَّ حَاطِبٌ النَّارَ . فَقَالَ رَسُولُ
اللَّهِ صلى الله عليه وسلم “ كَذَبْتَ لاَ يَدْخُلُهَا فَإِنَّهُ شَهِدَ
بَدْرًا وَالْحُدَيْبِيَةَ ”
ஹாத்திப் (ரலி) அவர்களின் அடிமை ஒருவர் அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்களிடம் வந்து (தம் உரிமையாளர்) ஹாத்திபைப் பற்றி முறையிட்டுவிட்டு, “அல்லாஹ்வின் தூதரே! ஹாத்திப் கட்டாயம் நரகத்திற்குத்தான் செல்வார்” என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நீ தவறாகச் சொல்கின்றாய். அவர் (நரகத்திற்குச்) செல்லமாட்டார்.
ஏனெனில், அவர் பத்ருப் போரிலும் ஹுதைபியாவிலும் கலந்துகொண்டிருக்கின்றார்” என்று சொன்னார்கள். அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)
6. பத்ரு ஷுஹதாக்களின் வாயிலாக அதற்கு பிறகிலிருந்து இந்த உலகத்தின் இறுதி
நாள் வரை ஷஹீதாகும் ஷுஹதாக்களின் அந்தஸ்தை உயர்த்தினான்...
وروي عن
رسول الله - صلى الله عليه وسلم - أنه قال : أكرم الله تعالى الشهداء بخمس كرامات
لم يكرم بها أحدا من الأنبياء ولا أنا أحدها أن جميع الأنبياء قبض أرواحهم ملك
الموت وهو الذي سيقبض روحي وأما الشهداء فالله هو الذي يقبض أرواحهم بقدرته كيف
يشاء ولا يسلط على أرواحهم ملك الموت ، والثاني أن جميع الأنبياء قد غسلوا بعد
الموت وأنا أغسل بعد الموت والشهداء لا يغسلون ولا حاجة لهم إلى ماء الدنيا ،
والثالث أن جميع الأنبياء قد كفنوا وأنا أكفن والشهداء لا يكفنون بل يدفنون في
ثيابهم ، والرابع أن الأنبياء لما ماتوا سموا أمواتا وإذا مت يقال قد مات والشهداء
لا يسمون موتى ، والخامس أن الأنبياء تعطى لهم الشفاعة يوم القيامة وشفاعتي أيضا
يوم القيامة وأما الشهداء فإنهم يشفعون في كل يوم فيمن يشفعون .
அல் ஃபகீஹ் அபுல்
லைஸ் அஸ்ஸமர்கன்த்தீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்:-
"ஷுஹதாக்களை இறைவன் ஐந்து சிறப்புக்களை கொண்டு கண்ணியம் செய்திருக்கிறான்.
அதுபோன்ற சிறப்பை நான் உட்பட எந்த நபிமார்களும் பெறவில்லை. அவையாவன:
1.எல்லா நபிமார்களின் உயிர்களையும் மௌத்தின் அதிபதி இஸ்ராயீல் (அலை) அவர்கள்தான்
கைப்பற்றுவார்கள். ஆனால் ஷுஹதாக்களின் உயிர்களை அல்லாஹ்வே கைப்பற்றுவான்.
2.அனைத்து நபிமார்களும் மரணமானபின் குளிப்பாட்டப்படுவார்கள். அவ்வாறே நானும்
குளிப்பாட்டப்படுவேன். ஷுஹதாக்கள் குளிப்பாட்டப்பட மாட்டார்கள். வெட்டுண்ட
காயங்களுடன் அடக்கப்படுவார்கள். இந்த உலகின் தண்ணீர் பக்கம் அவர்கள் தேவையாக
மாட்டார்கள்.
3.
எல்லா நபிமார்களும் மரணித்த பின்பு கஃபனிடப்படுவார்கள்.
நானும் கஃபனிடப்படுவேன். ஆனால் ஷுஹதாக்கள் கஃபனிடப்பட மாட்டார்கள். அவர்கள் போரில்
அணிந்திருந்த உடைகளுடனே அடக்கம் செய்யப்படுவார்கள்.
4.
எல்லா நபிமார்களும் மரணித்த பின்பு அவர்களை மரணித்தவர்கள்
என்று கூறப்படும். நானும் முஹம்மது (ஸல்) அவர்கள் மரணித்து விட்டார்கள் என்று
கூறப்படும். ஆனால் ஷுஹதாக்கள் மரணித்து விட்டால் அவர்களை மரணித்தவர்கள் என்று
சொல்லாதீர்கள் என்று
இறைவனே கூறுகிறான்.
5.
எல்லா நபிமார்களுக்கும் மறுமைநாளில் சிபாரிசு செய்யும்
உரிமை வழங்கப்படும். ஆனால் ஷுஹதாக்கள் ஒவ்வொரு நாளும் சிபாரிசு செய்து கொண்டு
இருக்கிறார்கள் ". ( நூல்: தப்ஸீர் குர்துபி )
7. ஷஹீதாக்கப்பட்ட பத்ர் ஷுஹதாவின் சந்ததியைக் காப்பாற்றிய அல்லாஹ் ...
روى الإمام البيهقى فى دلائل النبوة عن الربيع بنت
معوذ بن عفراء قالت: بينما أنا قابلة قد ألقيت على ملحفة إذ جاءنى أسود يعالجنى عن
نفسي، قالت: فبينما هو يعالجنى عن نفسى أقبلت صحيفة من ورق صفراء تهوى من السماء
حتى وقعت عنده فقرأها فإذا فيها بسم الله الرحمن الرحيم " من رب لكين إلى
لكين " أما بعد فدع أمتى بنت عبدى الصالح، وقال: أولى لك فما زالت القرصة
فيها حتى لقيت الله - عز وجل
முஅவ்விது இப்னு அஃப்ராவு ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பத்ரு
போரில் கொல்லப்பட்ட ஷுஹதாக்களில் ஒருவராகும். இவர்களின் மகள் ருபைய்யிஉ பின்த்
முஅவ்விது ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள் ஒரு நாள் லுஹருக்கு முன்பு ‘கைலூலா’
தூங்குவதற்காக தலையணையில் தலையை வைத்து படுத்திருந்தேன்.
அப்போது ஒரு கருத்த உருவம் திடீரென என் மேல் உட்கார்ந்து என்னை தொந்தரவு செய்தது.
என்னை துன்புறுத்திக் கொண்டிருக்கும் போது வானிலிருந்து மஞ்சள் நிறத்திலான ஒரு
பேப்பர் துண்டு பறந்து வந்து என் மேல் அமர்ந்திருந்த கருப்பு உருவத்தின் அருகில்
விழுந்தது. அதை அந்த உருவம் படித்துப் பார்த்தது. அதில் பிஸ்மி எழுதப்பட்டு அதன்பின்
‘இது மேலான இறைவனிடமிருந்து இறை அடிமையின் பக்கம் எழுதப்பட்டதாகும். ஸாலிஹான
(பத்ரு ஸஹாபியின்) நல்லடியாரின் மகளான என் அடிமைப் பெண்ணை தீங்கு செய்ய உனக்கு
எந்த உரிமையுமில்லை’
என எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தது. இதைப் படித்துப்
பார்த்ததும் கோபத்தில் என் முட்டில் ஓங்கி அடித்து விட்டு ஓடி விட்டது. அதன்
வேதனையை நான் மரணிக்கும் வரை அனுபவித்து வந்தேன் எனக் கூறுகிறார்கள்.
இந்த ஹதீதை பைஹகீ இமாம் தன்னுடைய நூலில் குறிப்பிட்’டு, பிறகு தான் எழுதிய அடிக்குறிப்பில் மேல் கூறிய நிகழ்ச்சியில் பத்ரு ஸஹாபியுடைய
பரக்கத்தினால் அவருடைய மகளுக்கு ஏற்பட்ட துன்பத்தை இறைவன் நீக்கியிருப்பது இங்கு
குறிப்பிடத் தக்கது எனக் கூறுகிறார்கள். (நூல்: பைஹகீ 115/7)
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மேன்மை தங்கிய பத்ரு ஸஹாபாக்களை
உலக அழிவு நாள் வரை மேன்மை படுத்தி, நினைவு கூர்ந்து வாழும் நல்ல நஸீபை நம் அனைவருக்கும்
தந்தருள்வானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!
No comments:
Post a Comment