Tuesday, 18 March 2025

வழிகாட்டும் வான்மறை - தராவீஹ் சிந்தனை - 19. நன்மைகளைச் செய்வோம்! நல்வாழ்வு வாழ்வோம்!!

 

வழிகாட்டும் வான்மறை - தராவீஹ் சிந்தனை - 19.

நன்மைகளைச் செய்வோம்! நல்வாழ்வு வாழ்வோம்!!


18 –ஆவது நோன்பை நிறைவு செய்து, 19 –ஆவது நாள் தராவீஹ் தொழுகையை மிகச் சிறப்பாக முடித்து விட்டு அடுத்த நோன்பு நோற்பதற்காக எதிர் பார்த்து காத்திருக்கின்றோம்.

அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமது நோன்பையும், தராவீஹ் தொழுகையையும் கபூல் செய்வானாக! எஞ்சியிருக்கிற நாட்களின் நோன்புகளையும், வணக்க, வழிபாடுகளையும் எவ்வித தடங்கலும் இன்றி பரிபூரணமாக நிறைவேற்றுகிற நற்பேற்றினை நம் அனைவருக்கும் நல்குவானாக! ஆமீன்!!

இன்றைய நாளின் தராவீஹ் தொழுகையில் ஸாத் அத்தியாயம், அஸ் ஸுமர், அத்தியாயம் மற்றும் அல் முஃமின் அத்தியாயம் என 248 வசனங்கள் ஓதப்பட்டிருக்கின்றது.

இன்றைய தராவீஹ் தொழுகையில் ஓதப்பட்ட அஜ் ஜுமர் அத்தியாயத்தின் 10 –ஆவது வசனம் இந்த உலகில் நன்மை செய்து வாழ்பவர்களுக்கு அதன் பிரதிபலனாக அல்லாஹ் நல்ல வாழ்க்கையையே வழங்குகின்றான் என்ற உத்தரவாதம் தரப்பட்டுள்ளது.

இன்று நம்மில் பலர் சொல்லும் ஒரு வார்த்தை எனது செயல்களுக்கு தகுந்தஅங்கீகாரம் இல்லை என்பதாக இருக்கிறது. ஆனால், அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சொல்கிறான்.

لِلَّذِيْنَ اَحْسَنُوْا فِىْ هٰذِهِ الدُّنْيَا حَسَنَةٌ ‌ ‏

"இவ்வுலகில் நன்மை செய்தோருக்கு நன்மையே கிடைக்கும்." ( அல்குர்ஆன்: 39: 10 )

நான் எவ்வளவு நன்மை செய்கிறேன். நான் மிகவும் சிரமத்தோடு வாழ்கிறேன். ஆனால், பாவம் செய்கிற பகிரங்கமாக ஹராமைச் செய்கிறவனெல்லாம் நல்லாத் தானே வாழ்கிறான். என்று சிலர் சொல்கின்றனர். ஆனால், அல்லாஹ் சொல்கிறான்.

مَنْ عَمِلَ صَالِحًـا مِّنْ ذَكَرٍ اَوْ اُنْثٰى وَهُوَ مُؤْمِنٌ فَلَـنُحْيِيَنَّهٗ حَيٰوةً طَيِّبَةً‌ وَلَـنَجْزِيَـنَّهُمْ اَجْرَهُمْ بِاَحْسَنِ مَا كَانُوْا يَعْمَلُوْنَ‏

ஆணாயினும், பெண்ணாயினும் அவர் நம்பிக்கையாளராக இருக்கும் நிலையில் இருந்து யார் (சன்மார்க்கத்திற்கு இணக்கமான) நற்செயல்களைச் செய்தாலும், நிச்சயமாக நாம் அவர்களை (இவ்வுலகில்) மணமிக்க தூய வாழ்க்கையில் வாழச் செய்வோம்; இன்னும், (மறுமையில்) அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம். ( அல்குர்ஆன்: 16: 97 )

நான் செய்யாத அமல் இல்லை, கேட்காத துஆ இல்லை, ஓதாத திக்ர் இல்லை. ஆனால், அல்லாஹ் எனக்கு மட்டும் தான் இப்படி வாழ்க்கையை சிரமத்தோடும், கஷ்டத்தோடும் அமைத்துள்ளான் என்று பலர் சொல்கின்றனர். ஆனால், அல்லாஹ் கேட்கின்றான்.

هَلْ جَزَآءُ الْاِحْسَانِ اِلَّا الْاِحْسَانُ‌

நன்மைக்கு நன்மையைத் தவிர (வேறு) கூலி உண்டா? (அல்குர்ஆன்: 55: 66 )

உண்மையில் நம்மில் பலர் அல்லாஹ் கூறுவதற்கு முரணாக நம் வாழ்வில் வார்த்தைகளை வெளிப்படுத்துகிறோம். 

இது இறைவனை நாம் அணுகும் விஷயத்தில் முற்றிலும் தவறான பிழையான கண்ணியக்குறைவான அணுகுமுறையாகும்.

 وَمَا قَدَرُوْا اللّٰهَ حَقَّ قَدْرِهٖ

அல்லாஹ்வை - அவனது கண்ணியத்திற்குத் தக்கவாறு அவர்கள் கண்ணியப்படுத்தவில்லை. ( அல்குர்ஆன்: 39: 67 )

وَاَحْسِنْ كَمَاۤ اَحْسَنَ اللّٰه اِلَيْكَ‌ 

அல்லாஹ் உனக்கு நல்லதைச் செய்திருப்பதைப் போல் நீயும் நல்லதை செய்! ( அல்குர்ஆன்: 28: 77 )

நன்மைகள் செய்வது என்பதை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று, அல்லாஹ்வும் அவன் தூதரும் மார்க்க கடமைகளாக நமக்கு வலியுறுத்தியுள்ள கடமைகளை நிறைவேற்றுவது. இன்னொன்று சக அடியார்களுக்கு நன்மைகள் செய்வது.

பிறருக்கு நலம் நாடுவதால் நம் வாழ்வு அழகு பெறும்..

. وعن أَبي سَعيدٍ الخُدْرِيِّ،

، أنَّ رَسُولَ اللَّهِ ﷺ بَعثَ إِلَى بَني لِحيانَ، فَقَالَ: لِيَنْبَعِثْ مِنْ كُلِّ رجُلَيْنِ أحدَهُما، والأَجْرُ بينَهُما رواهُ مسلمٌ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூ லஹ்யான்குலத்தாரை நோக்கிப் படைப் பிரிவொன்றை அனுப்பியபோது, “உங்களில் ஒவ்வோர் இரண்டு பேரிலும் ஒருவர் புறப்படட்டும்‘’ என்று கூறினார்கள். பிறகு, (படைப் பிரிவில் செல்லாமல் ஊரில்) தங்கியவரிடம் உங்களில் யார் படை வீரர் புறப்பட்டுச் சென்ற பின் அவருடைய குடும்பத்தார் விஷயத்திலும் அவரது செல்வம் விஷயத்திலும் நலம் பேணி நடந்துகொள்கிறாரோ அவருக்கும் புறப்பட்டுச் சென்ற படைவீரருக்குக் கிடைக்கும் நற்பலனில் பாதியளவைப் போன்றது கிடைக்கும்‘’ என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி), நூல்: முஸ்லிம் (3851)

وفي روايةٍ لهُ: لِيخْرُجْ مِنْ كُلِّ رَجُلَيْنِ رجُلٌ ثُمَّ قَالَ لِلقاعِدِ: أَيُّكُمْ خَلَفَ الخَارِجَ في أَهْلِهِ ومالِهِ بخَيْرٍ كَانَ لهُ مِثْلُ نِصْفِ أَجرِ الخارِجِ.

யார் அல்லாஹ்வின் பாதையில் போர் புரியும் ஒருவருக்குப் பயண வசதி செய்து கொடுக்கிறாரோ அவரும் அறப்போரில் பங்கு பெற்றுவிட்டார். யார் அறப்போர் வீரர் புறப்பட்டுச் சென்ற பின் அவருடைய வீட்டாரின் நலன் காக்கிறாரோ அவரும் அறப்போரில் பங்கு பெற்றுவிட்டார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: ஸைத் பின் காலித் (ரலி), நூல்: முஸ்லிம் (3848)

பிறருக்கு துஆ செய்வதால் நம் வாழ்க்கை அழகு பெறும்…

நமக்காக நாம் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வதைப் போல பிறருக்காகவும் பிரார்த்தனை புரிய வேண்டும்

ஹிஜ்ரத் எனும் புனிதப் பயணம் மேற்கொண்டு மதீனா வந்த முஹாஜிர்களுக்காக மதீனாவை பூர்வீகமாகக் கொண்ட அன்சாரி நபித்தோழர்கள் பிரார்த்தனை புரிந்துள்ளதை அல்லாஹ் திருக்குர்ஆனில் சிலாகித்துக் கூறுகிறான்.

وَالَّذِيْنَ جَآءُوْ مِنْۢ بَعْدِهِمْ يَقُوْلُوْنَ رَبَّنَا اغْفِرْ لَـنَا وَلِاِخْوَانِنَا الَّذِيْنَ سَبَقُوْنَا بِالْاِيْمَانِ وَلَا تَجْعَلْ فِىْ قُلُوْبِنَا غِلًّا لِّلَّذِيْنَ اٰمَنُوْا رَبَّنَاۤ اِنَّكَ رَءُوْفٌ رَّحِيْمٌ

அவர்களுக்குப் பின் வந்தோர் எங்கள் இறைவா! எங்களையும், நம்பிக்கையுடன் எங்களை முந்தி விட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாக! எங்கள் உள்ளங்களில் நம்பிக்கை கொண்டோர் மீது வெறுப்பை ஏற்படுத்தி விடாதே! நீ இரக்கமுடையோன்; நிகரற்ற அன்புடையோன்’’ என்று கூறுகின்றனர். ( அல்குர்ஆன்: 59: 10 )

பிறருக்காக துஆ செய்வது அல்லாஹ்வின் பாராட்டுக்குரியது என்பதை இந்த வசனம் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

حَدَّثَتْنِي أُمُّ الدَّرْدَاءِ، قَالَتْ: حَدَّثَنِي سَيِّدِي أَنَّهُ سَمِعَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ

 مَنْ دَعَا لِأَخِيهِ بِظَهْرِ الْغَيْبِ، قَالَ الْمَلَكُ الْمُوَكَّلُ بِهِ: آمِينَ، وَلَكَ بِمِثْلٍ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர், கண்ணெதிரே இல்லாத தம் சகோதரருக்காகப் பிரார்த்தித்தால், அதற்கென நியமிக்கப்பட்டுள்ள வானவர், ‘‘ஆமீன் (இறைவா! ஏற்றுக்கொள்வாயாக) அதைப் போன்றே உமக்கும் கிடைக்கட்டும்!’’ என்று கூறுகிறார். இதை என் தலைவர் (அபுத்தர்தா) என்னிடம் கூறினார் என (அபுத்தர்தா அவர்களின் மனைவி) உம்முத்தர்தா அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்: (முஸ்லிம்: 5280) 

قَدِمْتُ الشَّامَ، فَأَتَيْتُ أَبَا الدَّرْدَاءِ فِي مَنْزِلِهِ، فَلَمْ أَجِدْهُ وَوَجَدْتُ أُمَّ الدَّرْدَاءِ، فَقَالَتْ: أَتُرِيدُ الْحَجَّ الْعَامَ، فَقُلْتُ: نَعَمْ، قَالَتْ: فَادْعُ اللهَ لَنَا بِخَيْرٍ، فَإِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ: ” دَعْوَةُ الْمَرْءِ الْمُسْلِمِ لِأَخِيهِ بِظَهْرِ الْغَيْبِ مُسْتَجَابَةٌ، عِنْدَ رَأْسِهِ مَلَكٌ مُوَكَّلٌ كُلَّمَا دَعَا لِأَخِيهِ بِخَيْرٍ، قَالَ الْمَلَكُ الْمُوَكَّلُ بِهِ: آمِينَ وَلَكَ بِمِثْلٍ

ஸஃப்வான் பின் அப்தில்லாஹ் பின் ஸஃப்வான் அவர்கள் கூறுகிறார்கள்:

தர்தா அவர்கள், ஸஃப்வான் அவர்களின் மனைவியாக இருந்தார். ஸஃப்வான் கூறுகிறார்: நான் ஷாம் (சிரியா) நாட்டுக்குச் சென்றபோது (என் மனைவியின் தந்தை) அபுத்தர்தா (ரலி) அவர்களது இல்லத்திற்குச் சென்றேன். அங்கு அவரைக் காண முடியவில்லை. (என் மனைவியின் தாய்) உம்முத் தர்தா (ரஹ்) அவர்களைக் கண்டேன். அவர் என்னிடம், ‘‘இந்த ஆண்டில் நீங்கள் ஹஜ்ஜுக்குச் செல்ல நாடியுள்ளீர்களா?’’ என்று கேட்டார். நான் ‘‘ஆம்’’ என்றேன்.

அதற்கு அவர் சொன்னார்: அவ்வாறாயின் எங்கள் நலனுக்காகவும் பிரார்த்தியுங்கள். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள், ‘‘ஒரு முஸ்லிம் கண்ணெதிரே இல்லாத தம் சகோதரருக்காகச் செய்யும் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுகிறது. அந்த முஸ்லிமின் தலைக்கருகில் அதற்கென நியமிக்கப்பட்டுள்ள வானவர் ஒருவர் உள்ளார்.

அந்த முஸ்லிம் தம் சகோதரருக்காக நன்மை வேண்டிப் பிரார்த்திக்கும் போதெல்லாம், அதற்கென நியமிக்கப்பட்டுள்ள அந்த வானவர், ‘இறைவா! (இவருடைய பிரார்த்தனையை) ஏற்றுக் கொள்வாயாக! அதைப் போன்றே உமக்கும் கிடைக்கட்டும் எனப் பிரார்த்திக்கிறார்’’ என்று கூறினார்கள். ( நூல்: முஸ்லிம் )

பிறருக்கு உதவி செய்வதால் நம் வாழ்க்கை அழகு பெறும்...

حكى أن عليا كرم الله وجهه مكث هو وزوجته السيدة فاطمة رضي الله عنها وأولادها ׃ الحسن و الحسين و الحارث ثلاثة أيام لم يتذوقوا فيها طعام. وكان للسيدة فاطمة إزار (شال) فأعطته عليا ليبيعه، ويشتري بثمنه طعاما. فأخذه سيدنا علي. وباعه بستة دراهم. وحينما كان علي ذاهبا ليشتري طعاما قابله بعض الفقراء، فتألم لحالهم، وتصدق عليهم بالدراهم الستة التي معه، وهى ثمن الإزار(الشال) الذي باعه وفي أثناء ذهابه إلي بيته، لقيه جبريل عليه السلام في صورة إنسان ومعه ناقة من الجنة، فقال له: يا أبا الحسن اشتر منى هده الناقة. فقال له علي: ليس معي ثمنها، ولا يمكنني شراؤها. قال البائع: يمكنك أن تشتريها، وتدفع ثمنها فيما بعد. فسأله علي: بكم تبيعها ؟ قال البائع: بمائة درهم فرضي علي، وقبل شراءها منه بدلك الثمن المؤجل ، و اخدها، ودهب . فقابله ميكائيل علي صورة رجل أعرابي وسأله: هل تبيع هده الناقة يا أبا الحسين ؟ قال علي: نعم، أبيعها؟ قال: بكم اشتريتها أجاب علي: اشتريتها بمائة درهم. قال ميكائيل: أنا اقبل شراؤها منك بمائة وستين درهما، فيكون ربحك ستين درهما. فباعها علي له بدلك الثمن، ودفع له المشتري مائة وستين درهما. فأخذها علي، ومشي إلى بيته، فلقيه في الطريق البائع الأول وهو جبريل، فسأله هل بعت الناقة يا أبا الحسن ؟ أجاب علي: نعم، بعتها. قال جبريل: أعطني حقي. فدفع له المائة درهم، وبقي معه ستون درهما. فدهب بها إلى بيته، ووضعها بين يدي السيدة فاطمة رضي الله عنها. فسألته من أين لك هدا المال ! أجاب علي تصدقت بستة دراهم على قوم الفقراء، فأعطاني الله ستين درهما، فكان ربح كل درهم عشرة دراهم. ثم قابل علي الرسول صلى الله عليه و سلم..فقال له الرسول الكريم: يا علي، البائع جبريل و المشتري ميكائيل 

وقد ذكرها الصفوري في "نزهة المجالس" (2/6) بدون إسناد فقال :" حكاية : ثم ساقها .

ونقل الحلبي في "السيرة الحلبية" (2/282)

அலி (ரலி), அவரது மனைவி பாத்திமா (ரலி), அவர்களது மகன்கள் ஹசன் (ரலி), ஹுசைன் (ரலி), அவர்களது பணியாளர் ஹாரிஸ் (ரலி) ஆகியோர் சாப்பிட எதுவும் இன்றி மூன்று நாட்கள் நோன்பு வைத்தனர். இந்த நிலையில் அன்னை பாத்திமா (ரலி) தன்னிடம் இருந்த ஆடை ஒன்றை அலி (ரலி) அவர்களிடம் கொடுத்து, இதை கடைத்தெருவில் விற்று உணவு வாங்கிவரும்படி கூறினார்கள்.

அலி (ரலி) யும் கடைத்தெருவுக்குச் சென்று அந்த ஆடையை 6 திர்ஹத்திற்கு விற்றுவிட்டு அந்தப்பணத்துடன் வீடு திரும்பினார். அப்போது வழியில் சிலர் பசியோடு இருப்பதைக்கண்டு அந்த 6 திர்ஹத்தையும் அவர்களுக்கு தானமாக கொடுத்து விட்டார். 

பின்னர் மனைவி, குழந்தைகளிடம் என்ன சொல்வது என்று நினைத்தபடி நடந்து வந்தார்கள். அப்போது ஒருவர் ஒட்டகம் ஒன்றுடன் வந்தார். இதை வாங்கிக்கொள்ளுமாறு அலி (ரலி) யிடம் கூறினார். அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை என்று சொல்ல, ‘பிறகு பணம் தாருங்கள்என்றார். அலி (ரலி)யும் அந்த ஒட்டகத்திற்கு 100 திர்ஹம் பணம் தருவதாக கூறி வாங்கிக்கொண்டு சிறிது தூரம் வந்த போது, வேறு ஒருவர் அலி (ரலி)யிடம் இந்த ஒட்டகத்தை தனக்கு விற்க விருப்பமாஎன்றார். ஒட்டகத்திற்கு 160 திர்கம் விலை தருவதாகவும் கூறினார்.

அலி (ரலி) யும் அந்த ஒட்டகத்தை 160 திர்ஹத்திற்கு விற்றார். அதில் 100 திர்ஹமை ஒட்டகத்தின் உரிமையாளருக்கு கொடுத்து விட்டு 60 திர்ஹத்துடன் வீடு திரும்பினார். நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் தன் மனைவியிடம் கூறினார். பின்னர் இதை நபிகளாரிடமும் அவர்கள் தெரிவித்தனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள், “அலியே தாங்கள் அல்லாஹ்வுக்காக அந்த 6 திர்ஹத்தை ஏழைகளுக்கு தானம் செய்தீர்கள். அதனால் அல்லாஹ் வானவர் ஜிப்ரீயலை வியாபாரியாகவும், வானவர் மீகாயிலை விலைக்கு வாங்குபவராகவும் அனுப்பி உங்களுக்கு நன்மை செய்தான்என்றார்கள். ( நூல்: நுஜ்ஹத்துல் மஜாலிஸ், அஸ்ஸீரத்துல் ஹலபிய்யா  )

சில நேரம்... சில பொழுது..

சில போது நாம் செய்யும் நன்மைகள் நமக்கு நன்மை தருவதோடு நின்று விடாமல் ஒருவருக்கு ஹிதாயத் கிடைப்பதற்கு கூட வழி வகுக்கலாம்.

நம் மூலம் ஒருவருக்கு ஹிதாயத் கிடைக்கும் என்றால் அநு எவ்வளவு மகத்தான பாக்கியம்...

அலீயே! அல்லாஹ்வின் மீதாணையாக! உன் மூலமாக அல்லாஹ் ஒருவருக்கு நேர்வழி காட்டுவது உமக்குச் சிவந்த ஒட்டகங்கள் கிடைப்பதை விட மேலானதாகும்என்று கூறினார்கள். ( நூல்:  புகாரி )

عبد الله بن المبارك سكن مع جار يهودي في خراسان ، وكان ابن المبارك مع اليهودي كالأخ مع أخيه، إذا اشترى لحماً لأطفاله قدم اللحم لأطفال الجار، إذا كسا أبناءه كسا أبناء اليهودي، كان اليهودي يؤذيه بنفاياته وزبالاته على بيته، فيسكت ويضمها ويقول لأهله: لا تخبروا اليهودي، وبعد فترة أتى التجار إلى اليهودي قالوا: نشتري بيتك، قال: بيتي بألفي دينار، أما ألف فقيمته، وأما ألف فقيمة جوار ابن المبارك ، فأخبر ابن المبارك فدمعت عينه وقال: " اللهم اهده إلى الإسلام " وما هي إلا لحظات ويأتي اليهودي ويقول: أشهد أن لا إله إلا الله وأشهد أن محمداً رسول الله، إن ديناً جعلك تتعامل معي هذا التعامل لدين حق. فدعاه فأعطاه ثمن الدار وقال له: لا تبعها

அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹ்) அவர்களின் வீடு குராஸானிலே இருந்தது. அவர்களின் அண்டை வீட்டாராக ஒரு யூதர் இருந்தார். தன் வீட்டிற்கு எதை வாங்கினாலும் அதை தன அண்டை வீட்டாரான யூதருக்கும் வாங்கி வரும் பழக்கமுடையவராக இருந்தார்கள். அது உணவுப் பொருட்களாக இருந்தாலும் சரி, துணிமணிகள் போன்றதாக  இருந்தாலும் சரி. ஆனால், அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹ்) அவர்களின் இந்த செயல் தமக்கு நோவினை தருவதாக கருதிக் கொண்டிருந்த அந்த யூதர் அந்த வீட்டை விட்டும் காலி செய்ய நினைத்தார். அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.

வீட்டை விலை பேச சிலர் வந்தனர். அவர்களிடம் இரண்டாயிரம் தீனாருக்கு விலை பேசினார். ஆயிரத்திற்கு கூட  போகாத வீட்டை இரண்டாயிரம் தீனாருக்கு விற்கிறேன் என்கிறாயே என்று கேட்ட  பொழுது யூதர் சொன்ன வார்த்தை. "நீங்கள் கேட்பது சரி தான். ஆயிரம் தீனார் என் வீட்டிற்கான விலை. இன்னொரு ஆயிரம் தீனார் என் அண்டை வீட்டுக்காரர் அப்துல்லாஹ் இப்னு முபாரக் அவர்களின் வீட்டுக்காரராக நீங்கள் இருக்கப் போவதற்கான விலை" என்று கூறினார். இச்செய்தி அப்துல்லாஹ் இப்னு முபாரக் அவர்களுக்கு சென்ற நேரத்தில் அவர்களின் கண்களில் இருந்து நீர் வழிந்தோடியது. யாஅல்லாஹ்! நீ அந்த யூதருக்கு நேர்வழி காட்டிடு! என்று துஆ செய்தார்கள்.

சிறிது நேரத்தில் அந்த யூதர் அப்துல்லாஹ் இப்னு முபாரக் ரஹ் அவர்களின் சமூகம் தந்து இஸ்லாத்தைத் தழுவினார். அவரை அருகில் அழைத்து அவரின் வீட்டிற்கான கிரயத்தை கொடுத்து நீரே என் அண்டை வீட்டாளராய் இருப்பீராக! உம் வீட்டை விற்று விடாதீர்" என்று கூறினார்கள். ( நூல்: ஸியரு அஃலாமின் நுபலா )

செய்ய இயலாமல் போன நல்லறங்களுக்கும் நன்மை உண்டு...

 

فقد قال النبي صلى الله عليه وسلم: (إذا كان العبد يعمل عملاً صالحاً فشغله عنه مرض أو سفر كتب له كصالح ما كان يعمل وهو صحيح مقيم)

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: நற்செயல்களைச் செய்து வாழ்ந்த ஓர் நல் அடியார் பிரயாணத்தின் போதோ, உடல் நலக்குறைவின் போதோ,  வேறு வேலைகளின் போதோ இருந்த காரணத்தால் அவரால் நன்மையான காரியங்களை செய்ய முடியாமல் போகும் போது, அவர் உடல் ஆரோக்கியத்தோடும், ஊரில் இருக்கும் போதும் அவர் எப்படி நன்மையான காரியங்களை செய்வாரோ அது போன்ற நன்மையான காரியங்களின் கூலியை அவருக்கு அல்லாஹ் வழங்கி விடுகின்றான்”.

செய்ய நினைத்த நல்லறங்களுக்கும் கூட நன்மை உண்டு...

عن أبي هريرة قال : قال رسول الله صلى الله عليه وسلم : " قال الله : إذا هم عبدي بسيئة فلا تكتبوها عليه ، فإن عملها فاكتبوها سيئة ، وإذا هم بحسنة فلم يعملها فاكتبوها حسنة ، فإن عملها فاكتبوها عشر حسنات إلى سبعمائة ضعف.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் (வானவர்களிடம்) கூறுகின்றான்: என் அடியான் ஒரு தீமையைச் செய்ய நாடினால் அதை அவன் செய்யாத வரை அவனுக்கெதிராக அதைப் பதிவு செய்யாதீர்கள். அதை அவன் செய்து விட்டால் செய்த குற்றத்தை மட்டுமே பதிவு செய்யுங்கள். அதை அவன் எனக்காக விட்டு விட்டால் அதை அவனுக்கு ஒரு நன்மையாகப் பதிவு செய்யுங்கள். அவன் ஒரு நன்மை புரிய எண்ணி, அதைச் செய்யாவிட்டாலும் கூட அவனுக்கு ஒரு நன்மையை எழுதுங்கள். அதை அவன் செய்து விட்டாலோ அதை அவனுக்குப் பத்து நன்மைகளிலிருந்து எழுநூறு நன்மைகளாக எழுதுங்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

இன்னொரு முறையெல்லாம் நாம் பிறக்கப்போவது கிடையாது…

நமக்கு நல்லறங்கள் செய்வதற்குரிய கால அவகாசங்கள் நேரங்கள் இந்த உலகில் ஏராளம் இருக்கின்றன. அதை நாம் வீணடித்துக் கொண்டிருக்கிறோம். 

ஒரு நேரம் வரும் அந்ரேத்தில்தான் நாம் தவறவிட்ட நற்செயல்களுக்காக வருத்தப்படுவோம். அவ்வாறு இரண்டு இடங்களில் நாம் மிகவும் கைசேதப்படுவோம். நற்செயல்கள் செய்வதற்கு அவகாசம் கிடைக்காதா என்று பேராசைப்படுவோம். ஆனால் நற்செயல்கள் செய்வதற்கு அவகாசம் கொடுக்கப்படாது, நற்செயல்களும் செய்யமுடியாது.

முதல் இடம் : உயிர் தொண்டைக்குழிக்குள் அடைக்கும் நேரத்தில்....

حَتَّى إِذَا جَاءَ أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ رَبِّ ارْجِعُونِ (99) لَعَلِّي أَعْمَلُ صَالِحًا فِيمَا تَرَكْتُ كَلَّا إِنَّهَا كَلِمَةٌ هُوَ قَائِلُهَا وَمِنْ وَرَائِهِمْ بَرْزَخٌ إِلَى يَوْمِ يُبْعَثُونَ

முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது ''என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!'' என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது ( அல்குர்ஆன்: 23:99 )

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُلْهِكُمْ أَمْوَالُكُمْ وَلَا أَوْلَادُكُمْ عَنْ ذِكْرِ اللَّهِ وَمَنْ يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ (9) وَأَنْفِقُوا مِنْ مَا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُنْ مِنَ الصَّالِحِينَ (10) وَلَنْ يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا وَاللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ

நம்பிக்கை கொண்டோரே! உங்களின் பொருட் செல்வமும், மக்கட் செல்வமும் அல்லாஹ்வின் நினைவை விட்டு உங்களைத் திசை திருப்பி விட வேண்டாம். இதைச் செய்வோரே நஷ்டமடைந்தவர்கள்.

உங்களுக்கு மரணம் வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றி­ருந்து (நல் வழியில்) செலவிடுங்கள்! ''இறைவா! குறைந்த காலம் வரை எனக்கு நீ அவகாசம் அளித்திருக்கக் கூடாதா? தர்மம் செய்து நல்லவனாக ஆகியிருப்பேனே'' என்று அப்போது (மனிதன்) கூறுவான். ( அல்குர்ஆன்: 63:9,10 )

உயிருடன் இருக்கும் போது விட்ட எலலா நற்செயல்களையும் செய்துவருகிறேன். கொஞ்ச நேரம் எனக்கு அவகாசம் வழங்கு என்று இறைவனிடம் மன்றாடுவான். 

அவன் பேசக்கூடிய பேச்சு வெறும் வார்த்தைதான் வார்த்தைக்கு எந்த பயனும் இல்லை என்று இறைவன் மறுப்புக் கூறுகிறான். மேலும் அவனுக்கு அவகாசம் அளிக்கவும் மாட்டான்.

இறைவன் கூறுகிறான் : அதற்குரிய தவணை வந்து விட்டால் எவருக்கும் அல்லாஹ் அவகாசம் அளிக்க மாட்டான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.  ( அல்குர்ஆன் 63:11 )

இரண்டாவது இடம் : மறுமையில்....

மரணித்த பின்பு சுவர்க்கவாசிகள் சுவர்க்கத்தில் நுழைவார்கள். நரகவாசிகள் நரகத்தில் நுழைவார்கள். அங்கு நரகவாசிகள் உலக வாழ்க்கைக்கு திரும்பினால் நன்றாக இருக்குமே ஏராளமான நற்செயல்களை செய்வோமே என ஆசைப்படுவார்கள்.

وَالَّذِينَ كَفَرُوا لَهُمْ نَارُ جَهَنَّمَ لَا يُقْضَى عَلَيْهِمْ فَيَمُوتُوا وَلَا يُخَفَّفُ عَنْهُمْ مِنْ عَذَابِهَا كَذَلِكَ نَجْزِي كُلَّ كَفُورٍ (36) وَهُمْ يَصْطَرِخُونَ فِيهَا رَبَّنَا أَخْرِجْنَا نَعْمَلْ صَالِحًا غَيْرَ الَّذِي كُنَّا نَعْمَلُ أَوَلَمْ نُعَمِّرْكُمْ مَا يَتَذَكَّرُ فِيهِ مَنْ تَذَكَّرَ وَجَاءَكُمُ النَّذِيرُ فَذُوقُوا فَمَا لِلظَّالِمِينَ مِنْ نَصِيرٍ

நம்மை) மறுத்தோருக்கு நரக நெருப்பு உள்ளது. அவர்கள் மரணிக்குமாறு முடிவு செய்யப்படாது. அதன் வேதனை அவர்களுக்கு இலேசாக்கப்படவும் மாட்டாது. (நம்மை) மறுக்கும் ஒவ்வொருவருக்கும் இவ்வாறே வேதனை அளிப்போம். ''எங்கள் இறைவா! எங்களை வெளியே அனுப்பு! நாங்கள் செய்து வந்தது போலன்றி நல்லறங்களைச் செய்கிறோம்'' என்று அங்கே அவர்கள் கதறுவார்கள். ''படிப்பினை பெறும் அளவு உங்களுக்கு நாம் வாழ்நாளை அளித் திருக்கவில்லையா? உங்களிடம் எச்சரிக்கை செய்பவர் வரவில்லையா? எனவே அனுபவியுங்கள்! அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளரும் இல்லை'' (என்று கூறப்படும்) ( அல்குர்ஆன்: 35:36,37 )

மண்ணறையில் தான் நன்மைகளின் பலன் நமக்கு புரியும்!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறந்துபோனவரை மூன்று பொருட்கள் பின்தொடர்ந்து செல்கின்றன. (அவற்றில்) இரண்டு திரும்பிவிடுகின்றன. ஒன்று மட்டுமே அவருடன் தங்கிவிடுகிறது. அவரை அவருடைய குடும்பமும் செல்வமும் அவர் செய்த செயல்களும் பின்தொடர்ந்து செல்கின்றன. (அவற்றில்) அவருடைய குடும்பமும் செல்வமும் திரும்பிவிடுகின்றன. அவருடைய செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடும்.  அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) ( நூல் : புகாரி )

عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قَالَ : إِنَّ الْعَبْدَ الْمُؤْمِنَ إِذَا كَانَ فِي انْقِطَاعٍ مِنْ الدُّنْيَا وَإِقْبَالٍ مِنْ الْآخِرَةِ

وَيَأْتِيهِ رَجُلٌ حَسَنُ الْوَجْهِ ، حَسَنُ الثِّيَابِ ، طَيِّبُ الرِّيحِ ، فَيَقُولُ : أَبْشِرْ بِالَّذِي يَسُرُّكَ ، هَذَا يَوْمُكَ الَّذِي كُنْتَ تُوعَدُ . فَيَقُولُ لَهُ : مَنْ أَنْتَ ؟ فَوَجْهُكَ الْوَجْهُ يَجِيءُ بِالْخَيْرِ . فَيَقُولُ : أَنَا عَمَلُكَ الصَّالِحُ . فَيَقُولُ : رَبِّ أَقِمْ السَّاعَةَ حَتَّى أَرْجِعَ إِلَى أَهْلِي وَمَالِي )

رواه أحمد (4/362) وصححه الألباني في "أحكام الجنائز" (156)

ஒரு அடியான் கப்ரில் வைக்கப்பட்டதும் அழகான முகமுடைய, அழகான ஆடையுடனும், நறுமணத்துடனும் ஒருவர் வந்து அல்லாஹ்வின் திருப்பொருத்தமும் சுவர்க்கமும் உனக்கு உண்டு நான் தான் உன்னுடைய நற்செயல் என்று சொல்வார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல் : அஹ்மத் )

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவருக்கும் நன்மைகள் செய்ய நல்லருள் பாளிப்பானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

No comments:

Post a Comment