Saturday, 22 March 2025

வழிகாட்டும் வான்மறை - தராவீஹ் சிந்தனை - 23. நமது இதயங்களை நபித்தோழர்களின் மஹப்பத்தால் நிரப்புவோம்!!!

 

வழிகாட்டும் வான்மறை - தராவீஹ் சிந்தனை - 23.

நமது இதயங்களை நபித்தோழர்களின் மஹப்பத்தால் நிரப்புவோம்!!!


22 –ஆவது நோன்பை நிறைவு செய்து, 23 –ஆவது நாள் தராவீஹ் தொழுகையை மிகச் சிறப்பாக முடித்து விட்டு அடுத்த நோன்பு நோற்பதற்காக எதிர் பார்த்து காத்திருக்கின்றோம்.

அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமது நோன்பையும், தராவீஹ் தொழுகையையும் கபூல் செய்வானாக! எஞ்சியிருக்கிற நாட்களின் நோன்புகளையும், வணக்க, வழிபாடுகளையும் எவ்வித தடங்கலும் இன்றி பரிபூரணமாக நிறைவேற்றுகிற நற்பேற்றினை நம் அனைவருக்கும் நல்குவானாக! ஆமீன்!!

இன்றைய நாளின் தராவீஹ் தொழுகையில்  அல் வாகிஆ, அல் ஹதீத், அல் முஜாதலா, அல் ஹஷ்ர் ஆகிய நான்கு சூராக்கள் ஓதப்பட்டிருக்கின்றது.

இன்றைய தராவீஹ் தொழுகையில் ஓதப்பட்ட அல் முஜாதலா சூராவின் கடைசி ஆயத்தும், அல் ஹஷ்ர் சூராவின் 8, 9, 10, 11 ஆகிய வசனங்களில் நபித்தோழர்களைப் பற்றி அல்லாஹ் புகழ்ந்து பேசுகின்றான். 

அந்த வகையில் இன்றைய அமர்வில் நபித்தோழர்கள் குறித்து பேசவும் கேட்கவும் நாம் கடமைப் பட்டுள்ளோம்.

இந்த உலகில் எவரும் பெறாத, இனியும் பெற முடியாத பல சிறப்புக்களை நபித்தோழர்களான ஸஹாபாக்கள் பெற்றுள்ளனர்.

நபி (ஸல்) அவர்களைப் பார்க்க, அருகில் அமர்ந்து பேச, அவர்களுடன் நட்பு கொள்ளும் சிறப்பைப் பெற்றிருந்தனர். இதனை இனி யாரும் பெறமுடியாது. நபி (ஸல்) அவர்கள் மூலமாகவே நேரடியாக மார்க்கத்தை அறியும் அரிய வாய்ப்பைப் பெற்றனர். இனி இதை யாரும் பெற முடியாது.

வஹி இறங்குவதையும் அதன் அடையாளங்களையும் கண்களால் கண்டனர். இனி இதை யாரும் அடைய முடியாது. இவ்வாறு யாரும் பெறமுடியாத பெரும் பாக்கியத்திற்குரியவர்களாக அல்லாஹ்வே அவர்களைத் தேர்ந்தெடுத்தான்.

தனது நபியின் நண்பர்களாக தனது மார்க்கத்தின் உதவியாளர்களாக அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட சமூகமாக அவர்கள் இருப்பதே அவர்களின் சிறப்புக்களுக்கெல்லாம் மகுடமாகத் திகழ்கின்றது.

அவர்கள் அல்லாஹ்வினாலேயே முஃமின்கள்என்றும், ‘நேர்வழி பெற்றவர்கள்என்றும், சிறந்த சமூகம் என்றும் சிலாகித்துப் போற்றப்பட்டவர்கள். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டதாக அறிவித்துவிட்ட செய்தி அல்குர்ஆனில் நான்கு இடங்களில் இடம் பெற்றுள்ளன.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவர்களை முதன்மையானவர்கள் என்கிறான். அல்லாஹ்வின் திருப் பொருத்தத்திற்காக தம்மையே அர்ப்பணித்துக் கொண்டவர்கள் என்கிறான். அல்லாஹ்விடம் அவர்கள் செய்த வாக்குறுதியை நிறைவேற்றியவர்கள் என்கிறான்.அவர்களை அல்லாஹ்வின் கூட்டத்தினர் என்கிறான். நேர்வழியில் நிலைத்திருப்பவர்கள் என்கிறான். அவர்களைப் போலவே நேர்வழியில் நிலைத்திருங்கள் என்கிறான்.

அவர்களில் சிலரைப் பாராட்டி இறக்கியருளிய இறை வசனங்களும் உண்டு.

 ஸுஹைப் இப்னு சினான் (ரலி)

அல்பகரா: 207

அனஸ் இப்னு நள்ர் (ரலி)

அல் அஹ்ஜாப்: 23

அவர்களின் சிலருடைய கோரிக்கைகளுக்காக இறக்கியருளப்பட்ட இறை வசனங்களும் உண்டு.

வாரிசுரிமை சட்டம்  (ஸஅத் இப்னு ரபீஆ (ரலி) அவர்களின் மனைவி ஜமீலா (ரலி)

அந்நிஸா: 11

ளிஹார் சட்டம் (கவ்லா பிந்த் ஸஅலபா (ரலி)

அல்முஜாதலா: 1 - 4

அவர்களின் சிலருடைய ஏக்கங்களுக்காக, இறக்கியருளப்பட்ட வசனங்களும் உண்டு.

அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ரலி)

அந் நிஸா: 95

முஹாஜிர் ஸஹாபாக்கள்

அந்நிஸா: 100

அவர்களில் சிலரின் ஆசைக்காக இறக்கியருப்பட்ட இறைவசனங்களும் உண்டு.

وقد فصل السيوطي في بيان موافقات الوحي لكلام عمر فقال: فصل في موافقات عمر رضي الله عنه: قد أوصلها بعضهم إلى أكثر من عشرين.

في كتاب فضائل الإمامين لأبي عبد الله الشيباني قال: وافق عمر ربه في أحد وعشرين موضعا

உமர் (ரலி) அவர்கள் விருப்பத்தின் பேரில் சுமார் 20 அல்லது 21 ஆயத்துகள் இறங்கியுள்ளது.

நாம் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றோமே லைலத்துல் கத்ர் இரவு இது யாரால் இந்த உம்மத்துக்கு வழங்கப்பட்டது தெரியுமா?

பெருமானார் (ஸல்) அவர்களின் உற்ற தோழர்களான நபித்தோழர்களின் ஏக்கத்தால், ஆசையால் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

وقال ابن أبي حاتم : أخبرنا يونس ، أخبرنا ابن وهب ، حدثني مسلمة بن علي‌ ، عن علي بن عروة قال : ذكر رسول الله صلى الله عليه وسلم يوما أربعة من بني إسرائيل ، عبدوا الله ثمانين عاما ، لم يعصوه طرفة عين : فذكر أيوب وزكريا وحزقيل بن العجوز ويوشع بن نون - قال : فعجب أصحاب رسول الله صلى الله عليه وسلم من ذلك ، فأتاه جبريل فقال : يا محمد عجبت أمتك من عبادة هؤلاء النفر ثمانين سنة ، لم يعصوه طرفة عين ; فقد أنزل الله خيرا من ذلك . فقرأ عليه : ( إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر ) هذا أفضل مما عجبت أنت وأمتك . قال : فسر بذلك رسول الله صلى الله عليه وسلم والناس معه .

ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் கூறும் போது பனூ இஸ்ரவேலர்களைச் சார்ந்த அய்யூப் (அலை), ஸகரிய்யா (அலை), ஹிஸ்கீல் (அலை), யூஷஃபின்நூன் (அலை) ஆகிய நால்வரும், 80 வருடங்கள் கண்ணிமைக்கும் நேரம் கூட இறைவனுக்கு மாறு செய்யாத வண்ணம் இறைவணக்கம் புரிந்து வந்தார்கள்என்று தெரிவித்தார்கள். இதைக் கேள்விப்பட்ட நபித்தோழர்கள் ஆச்சரியத்தில் உறைந்து போனார்கள். உடனே வானவர் ஜிப்ரீல் (அலை) நபிகளாரிடம் இறங்கிவந்து உங்களது சமுதாயம் இந்த நால்வரைக் கண்டு ஆச்சரியப்படுகிறார்கள். எனவே இதைவிட சிறந்த ஒரு பாக்கியத்தை இறைவன் இறக்கி அருள்பாலித்திருக்கிறான்என்று கூறி பின்வரும் லைலத்துல்கத்ர் சம்பந்தமான அத்தியாயத்தை கூறினார்கள். (அறிவிப்பாளர்: அலி பின் உர்வா (ரஹ்) ( நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர் )

அவர்களைப் பற்றி தவ்ராத்திலும் இஞ்சீலிலும் முன்னறிவிப்பு செய்துள்ளதாக ஒரு இறைவசனம் கூறுகிறது.

مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ وَالَّذِينَ مَعَهُ أَشِدَّاءُ عَلَى الْكُفَّارِ رُحَمَاءُ بَيْنَهُمْ تَرَاهُمْ رُكَّعًا سُجَّدًا يَبْتَغُونَ فَضْلًا مِنَ اللَّهِ وَرِضْوَانًا سِيمَاهُمْ فِي وُجُوهِهِمْ مِنْ أَثَرِ السُّجُودِ ذَلِكَ مَثَلُهُمْ فِي التَّوْرَاةِ وَمَثَلُهُمْ فِي الْإِنْجِيلِ كَزَرْعٍ أَخْرَجَ شَطْأَهُ فَآزَرَهُ فَاسْتَغْلَظَ فَاسْتَوَى عَلَى سُوقِهِ يُعْجِبُ الزُّرَّاعَ لِيَغِيظَ بِهِمُ الْكُفَّارَ ) الفتح/ 29 .

இப்படி பலவாறாக அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவர்களைச் சிறப்புப் படுத்தி அல்குர்ஆனில் சிலாகித்துக் கூறுகின்றான்.

ஆனாலும் இன்று நம்மிடையே உள்ள சிலர் நபித்தோழர்களை விமர்சிக்கும் போது நமது இதயம் கனத்துப் போகிறது.

இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல்(ரஹ்) அவர்கள் கூறுவதைப் பாருங்கள்.

இவர்கள் நபி(ஸல்) அவர்களைக் கேவலப்படுத்த நினைத்தனர். அது அவர்களுக்கு சாத்தியமற்றதாகி விட்டது. எனவே, அவரது தோழர்களைக் கேவலப்படுத்தினர். அதன் மூலம் நபி(ஸல்) அவர்களை கேவலப்படுத்தினர். நபி(ஸல்) நல்லவராக இருந்திருந்தால் அவரது தோழர்களும் நல்லவர்களாக இருந்திருப்பர் என்ற எண்ணத்தை ஏற்படுத்தினர்என விபரிக்கின்றார். (நூல்: அஸ்ஸாரிமுல் மஸ்லூல்)

وقال الميموني : " قال لي أحمد بن حنبل: يا أبا الحسن إذا رأيت رجلا يذكر أحدا من الصحابة بسوء فاتهمه على الإسلام " انتهى من "البداية والنهاية" (8 /148) .

 

மற்றுமொரு சந்தர்ப்பத்தில் நபி(ஸல்) அவர்களது தோழர்களில் எவரைப்பற்றியாவது குறை கூறுபவனைக் கண்டால் அவனது இஸ்லாத்தில் சந்தேகம் கொள்என்று குறிப்பிட்டார்கள்.

وقال أبو زرعة الرازي : " إذا رأيت الرجل ينتقص أحدا من أصحاب رسول الله صلى الله عليه وسلم فاعلم أنه زنديق ؛ وذلك أن الرسول صلى الله عليه وسلم عندنا حق والقرآن حق ، وإنما أدى إلينا هذا القرآنَ والسننَ أصحابُ رسول الله صلى الله عليه وسلم ، وإنما يريدون أن يجرحوا شهودنا ليبطلوا الكتاب والسنة ، والجرح بهم أولى وهم زنادقة " .

انتهى من "الكفاية في علم الرواية" للخطيب البغدادي (ص 49) .

இமாம் அபூ சுர்ஆ அர்ராஸி(ரஹ்) அவர்கள் இது பற்றிக் கூறும் போது நபி(ஸல்) அவர்களது தோழர்களி;ல் ஒருவரையாவது குறை கூறுபவனைக் கண்டால் அவன் ஸிந்தீக்என்பதை அறிந்து கொள்ளுங்கள். ஏனெனில் நபி(ஸல்) அவர்களின் தூதுத்துவமும், அவர்கள் கொண்டு வந்தவையும் சத்தியமாகும். அல் குர்ஆன் உண்மையாகும்ளூ சுன்னா உண்மையாகும் இவை அனைத்தையும் எம்மிடம் ஒப்படைத்தவர்கள் ஸஹாபாக்களாவார்கள். நபித்தோழர்களை குறை கூறும் இவர்கள் எமது சாட்சியாளர்களைக் காயப்படுத்துவதன் மூலம் (அவர்கள் ஒப்படைத்த குர்ஆனையும், சுன்னாவையும் பொய்யாக்க முனைகின்றனர். நபித்தோழர்களைக் காயப்படுத்துவதுதான் இவர்களது முதல் பணி. எனவே இவர்கள் ஸிந்தீக்குகளாவர்)எனக் குறிப்பிடுவது ஆழ்ந்து அவதானிக்கத்தக்கதாகும். (அல் கிபாயா பீ இல்மில் ரிவாயா லில் கதீப் அல் பக்தாதி 49 )

அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட சமூகம்!

روى الإمام أحمد (3589) بسند جيد عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ : " إِنَّ اللَّهَ نَظَرَ فِي قُلُوبِ الْعِبَادِ فَوَجَدَ قَلْبَ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْرَ قُلُوبِ الْعِبَادِ فَاصْطَفَاهُ لِنَفْسِهِ فَابْتَعَثَهُ بِرِسَالَتِهِ ، ثُمَّ نَظَرَ فِي قُلُوبِ الْعِبَادِ بَعْدَ قَلْبِ مُحَمَّدٍ فَوَجَدَ قُلُوبَ أَصْحَابِهِ خَيْرَ قُلُوبِ الْعِبَادِ فَجَعَلَهُمْ وُزَرَاءَ نَبِيِّهِ يُقَاتِلُونَ عَلَى دِينِهِ "

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் அடியார்களின் இதயங்களை உற்று நோக்கினான். அடியார்களின் இதயங்களில் முஹம்மது (ஸல்) அவர்களின் இதயம் சிறந்த இதயமாக இருந்தது. ஆதலால் தனக்காகவும், தனது தூதுத்துவத்திற்காகவும் அவர்களை அல்லாஹ் தேர்ந்தெடுத்தான். பின்னர், அல்லாஹ் அடியார்களின் இதயங்களை உற்று நோக்கினான். அடியார்களின் இதயங்களில் முஹம்மது (ஸல்) அவர்களின் தோழர்களின் இதயம் சிறந்த இதயமாக இருந்தது. ஆதலால் தனது நபியின் சீடர்களாகவும், , தனது தீனுக்காக  போராடக்கூடியவர்களாகவும்  அல்லாஹ் அவர்களை தேர்ந்தெடுத்தான். ( நூல்: அஹ்மத் )

அல்லாஹ் கூறும் மகத்தான சாட்சியம்...

ஒருவரை நல்லவர் என ஒரு நல்லவர் சாட்சி கூறினால் அதை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். சாட்சி சொல்பவரைப் பொறுத்துத்தான் சாட்சிக்கு அந்தஸ்த்து வழங்கப்படும். சாட்சியிலே பெரிய சாட்சி அல்லாஹ்வின் சாட்சியாகும்.

قُلْ أَيُّ شَيْءٍ أَكْبَرُ شَهَادَةً قُلِ اللَّهُ شَهِيدٌ بَيْنِي وَبَيْنَكُمْ

மிகப்பெரும் சாட்சியம் எது?’ என்று (நபியே) நீர் கேட்டு, ‘அல்லாஹ்வே எனக்கும் உங்களுக்குமிடையில் சாட்சியாளன்என்று கூறுவீராக!’ ( அல்குர்ஆன்: 6: 19 )

ففي القرآن العظيم آيات كثيرة أخبرنا الله فيها بفضل أصحاب نبيه، وأثنى عليهم وزكاهم ووصفهم بالإيمان والعبادة والجهاد والهجرة والنصرة، وبشرهم بالمغفرة لذنوبهم والرضا عنهم والرحمة، ووعد كل من آمن منهم قبل الفتح أو بعده بدخول الجنة.وفي مائة آية من القرآن الكريم في فضل الصحابة رضي الله نهم، وفيها كفاية لأولي الألباب؛ ليعرف المسلم فضلهم،

அல் குர்ஆனில் சுமார் தொன்னூறு இடங்களில் நபித்தோழர்களின் ஈமான் உறுதி செய்யப் படுகின்றது. மேலும், அல் குர்ஆனில் சுமார் நூறு இடங்களில் அவர்களின் சிறப்புகள் கூறப்பட்டுள்ளது.

பல இடங்களில் அல்லாஹ் அவர்களை நம்பிக்கையாளர்களே! என அழைக்கின்றான். 

மற்றும் பல இடங்களில் அவர்களை நம்பிக்கையாளர்கள் என்று கூறுகின்றான். ( பார்க்க: 3:121, 124, 164, 171, 179, – 4: 84, 95, 115, – 8: 17, 62, 64,65 – 9: 26, 72, 79, 107, 128, – 15: 88, – 24: 30….) அல்லாஹ்வின் இந்த சாட்சி போதாதா?

وَاعْلَمُوا أَنَّ فِيكُمْ رَسُولَ اللَّهِ لَوْ يُطِيعُكُمْ فِي كَثِيرٍ مِنَ الْأَمْرِ لَعَنِتُّمْ وَلَكِنَّ اللَّهَ حَبَّبَ إِلَيْكُمُ الْإِيمَانَ وَزَيَّنَهُ فِي قُلُوبِكُمْ وَكَرَّهَ إِلَيْكُمُ الْكُفْرَ وَالْفُسُوقَ وَالْعِصْيَانَ أُولَئِكَ هُمُ الرَّاشِدُونَ

நிச்சயமாக உங்களிடம் அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அவர் உங்களுக்கு அதிகமான விடயங்களில் கட்டுப்பட்டிருந்தால் நீங்கள் சிரமப்பட்டிருப்பீர்கள். எனினும், அல்லாஹ் உங்களுக்கு ஈமானை நேசத்திற்குரியதாக ஆக்கி, அதனை உங்களது உள்ளங்களில் அழகுபடுத்தினான். மேலும், நிராகரிப்பையும், பாவம் செய்வதையும், மாறு செய்வதையும் அவன் உங்களுக்கு வெறுப்புடையதாக ஆக்கினான். அவர்கள்தாம் நேர்வழி பெற்ற வர்கள்’ ( அல்குர்ஆன்: 49: 7 )

நபித்தோழர்களுக்கு குப்ர்வெறுப்புக் குரியதாக்கப்பட்டுள்ளது. மற்றும் பாவம் செய்வதும், மாறு செய்வதும் கூட வெறுப்புக்குள்ளாக்கப்பட்டு ஈமான் அவர்களுக்கு நேசத்திற்குரியதாக்கப் பட்டுள்ளது. அல்லாஹ் அவர்களுக்கு குப்ரையும் பிஸ்க்கையும், இஸ்யானையும் வெறுப்புக்குள்ளாக்கி யிருக்கும் போது, எப்படி இவர்களால் நபித்தோழர்களை குறை கூறி விமர்சிக்க முடிகிறது.

நபி {ஸல்} அவர்களின் மகத்தான சோபனம்...

وعن أبي سعيد الخدري رضي الله عنه عن النبي صلى الله عليه أنه قال: (لا تسبوا أحدا من أصحابي، فإن أحدكم لو أنفق مثل أحد ذهبا، ما أدرك مد أحدهم ولا نصيفه) أخرجه البخاري ومسلم.

எனது தோழர்களை நீங்கள் குறை கூறாதீர்கள். உங்களில் ஒருவர் உஹது மலையளவு தங்கத்தைத் தர்மம் செய்தாலும் அவர்களில் ஒருவர் ஒரு கைப்பிடியான அல்லது அதில் அரைவாசி தர்மம் செய்த அந்தஸ்தை அடைய முடியாதுஎன நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறி: அபூஸயீதுல் குத்ரி(வ), அபூ ஹுரைரா(ரஹ்), ஆதாரம்: புஹாரி:3673, 3470 – முஸ்லிம்:221, 6651 – அபூதாவுத்: 4660, 4658 – திர்மிதி: 3861, இப்னுமாஜா: 161 – அஹ்மத்: 11516, 11079, 11095)

நபித் தோழர் அப்துர்ரஹ்மான் பின் அவ்ப் (ரலி) அவர்களுக்கு ஒரு சச்சரவின் போது நபித் தோழர் காலித் பின் வலீத் (ரலி) ஏசிவிட்டார்கள். அந்த சமயத்தில் நபியவர்கள் மேற்சொன்னவாறு கூறுகிறார்கள்.

ஹுதைபியா உடண்படிக்கையின் பின்னர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட நபித்தோழர்  காலித் பின் வலீதுக்கே அபர்துர்ரஹ்மான் போன்ற ஒரு சக நபித்தோழரை ஏசுவதற்கு அனுமதியில்லையென்றால் நம்மைப் போன்றவர்களுக்கு எவ்வகையிலுமே நபித்தோழர்களை ஏசுவதற்கும் விமர்சனம் என்ற பெயரில் கிண்டலான வார்த்தைகள் சொல்லி பேசுவதற்கும் எந்த அனுமதியும் இல்லை.

முஸ்லிம், அபூதாவூத் மற்றும் பல அறிவிப்புக்களில் நபி (ஸல்) அவர்கள் இதனை எனது உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அவன் மீது ஆணையாக! என சத்தியமிட்டுக் கூறியதாக இடம் பெற்றுள்ளது.

وعن أبي بردة عن أبيه رضي الله عنه قال: صلينا المغرب مع رسول الله صلى الله عليه وسلم، ثم قلنا: لو جلسنا حتى نصلي معه العشاء قال: فجلسنا، فخرج علينا فقال (ما زلتم ها هنا) قلنا: يا رسول صلينا معك المغرب، ثم قلنا: نجلس حتى نصلي معك العشاء قال (أحستنم أو أصبتم) قال: فرفع رأسه إلى السماء وكان كثيرا ما يرفع رأسه إلى السماء فقال: (النجوم أمنة للسماء فإذا ذهبت النجوم أتى السماء ما توعد، وأنا أمنة لأصحابي فإذا ذهبت أتى أصحابي ما يوعودن، وأصحابي أمنة لأمتي فإذا ذهب أصحابي أتى أمتي ما يوعدون) أخرجه مسلم.

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் மஃக்ரிபைத் தொழுதோம். பின்னர் இவ்வாறே இங்கிருந்த நபியுடன் இஷாவையும் தொழுதால் என்ன எனக் கூறி அவ்வாறே அமர்ந்திருந்தோம். எம்மிடம் வந்த நபி (ஸல்) அவர்கள் (மஃரிப் முதல்) இங்கேதான் இருந்தீர்களா என்று கேட்டார்கள். அதற்கு நாம் அல்லாஹ்வின் தூதரே உங்களுடன் மஃரிபைத் தொழுதோம். இஷாவையும் உங்களுடன் தொழும் வரை இங்கேயே அமர்ந்திருப்போம் என்று எமக்குள் உறுதி கொண்டோம்.என்று கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நல்லது செய்தீர்கள்என்று கூறி வானத்தின் பக்கம் தன் தலையை உயர்த்தினார்கள்.

அவர்கள் அதிகமாக வானத்தைப் பார்ப்பவர்களாக இருந்தார்கள். பின்னர், நட்சத்திரங்கள் வானத்திற்குப் பாதுகாப்பாகும். நட்சத்திரங்கள் போய்விட்டால் வானத்திற்கு வாக்களிக்கப்பட்டது (அழிவு) வந்து விடும். நான் என் தோழர்களுக்குப் பாதுகாப்பாவேன். நான் போய்விட்டால் எனது தோழர்களுக்கு வாக்களிக்கப்பட்டது வந்துவிடும். எனது தோழர்கள் எனது உம்மத்துக்குப் பாதுகாப்பாவார்கள். அவர்கள் போய்விட்டால் எனது உம்மத்துக்கு வாக்களிக்கப்பட்டது வந்துவிடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறி: அபூ புர்தா(ரலி), ( நூல்: முஸ்லிம்: 207, 6629 – அஹ்மத்: 19566, 19795 – இப்னு ஹிப்பான்: 7249)

இந்த நபிமொழி நபித்தோழர்கள் இந்த உம்மத்துக்குப் பாதுகாவல் அரணாக இருக்கின்றார்கள் என்று கூறுகின்றது.

وفي الصحيحين عن جابر بن عبدالله رضي الله عنه قال: حدثنا أبو سعيد الخدري رضي الله عنه، قال: قال رسول الله صلى الله عليه وسلم: (يأتي على الناس زمان فيغزو فئام من الناس، فيقولون: فيكم من صاحب رسول الله صلى الله عليه وسلم، فيقولون: نعم فيفتح لهم ثم يأتي على الناس زمان فيغزو فئام من الناس، فيقال فيكم من صاحب أصحاب رسول الله صلى الله عليه وسلم، فيقولون: نعم فيفتح لهم، ثم يأتي على الناس زمان فيغزو فئام من الناس، فيقال: هل فيكم من صاحب من صاحب أصحاب رسول الله صلى الله عليه وسلم؟ فيقولون: نعم، فيفتح لهم) متفق عليه.

ஒரு காலம் வரும் அப்போது ஒரு கூட்டம் போர் புரியும். அவர்களைப் பார்த்து நபி (ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டவர்கள் யாராவது உங்களில் உள்ளனரா என்று கேட்கப்படும். அதற்கு ஆம் என்று பதிலளிக்கப்படும். அவர்களுக்கு வெற்றியளிக்கப்படும். பின்னரும் போர் நடக்கும். அப்போது நபியுடன் தோழமை கொண்டவர்களுடன் தோழமை கொண்டவர்கள் உங்களில் இருக்கின்றார்களா? என்று கேட்கப்படும். அதற்கு ஆம்! உள்ளனர் என பதிலளிக்கப்படும். அவர்களுக்கும் வெற்றியளிக்கப்படும்’ (அறி: அபூஸயீதுல் குத்ரி(ரலி), ( நூல்: புகாரி:3594, 3649, 3449 – முஸ்லிதுஸ் ஸிஹாபா: 33 – முஸ்லிம்: 208, 2532, 6630, 6631)

இந்த நபிமொழி நபித்தோழர்களினதும் அவர்களுடன் தோழமை கொண்ட தாபியீன்களினதும் சிறப்பைப் பற்றிப் பேசுகின்றது. அவர்களின் சிறப்பு காரணமாக முஸ்லிம்களுக்கு போரில் வெற்றி கிடைக்கும் என்று கூறுகின்றது. 

وروى الحافظ ابن عساكر عن الإمام أبي زرعة "أن رجلا قال له: إني أبغض معاوية، فقال له أبو زرعة: ولم؟ قال: لأنه قاتل علياً، فقال له أبو زرعة: ويحك، إن رب معاوية رحيم، وخصم معاوية خصم كريم، فأيش (٣) دخولك أنت بينهما رضي الله عنهما

 

இமாம் அபு ஸுர்ஆ (ரஹ்) அவர்கள் அவர்களிடத்தில் ஒரு மனிதர் வந்து பேசுகிறார்; நான் முஆவியாவை வெறுக்கிறேன் என்று. 

 

முஆவியா (ரலி) அவர்களுக்கும் அலீ (ரலி) அவர்களுக்கும் ஏற்பட்ட அந்த கருத்து வேற்றுமையை தொடர்ந்து ஏற்பட்ட அந்த யுத்தம், இதனால் சிலர் முஆவியா (ரலி) அவர்களை மரியாதை குறைவாக பேசுகிறார்கள். இப்படிப்பட்டவர்களில் ஒருவர் வந்து சொல்கிறார், நான் முஆவியாவை வெறுக்கிறேன் என்று.

அதற்கு இமாம் என்ன பதில் சொன்னார்கள்: முஆவியா இடத்தில் விசாரணை செய்யப்போவது நாளைக்கு மறுமையில் நீயா? முஆவியாவுடைய ரப்பா? முஆவியா குற்றம் செய்திருந்தால் அந்த குற்றத்திற்காக அவரை விசாரிக்க போவது யார்? நீயா அல்லது முஆவியாவுடைய ரப்பா?

முஆவியாவுடைய ரப்பு ஆகியவன் ரப்புர் ரஹீம் - கருணைமிக்கவன், இரக்கமுள்ளவன். சரி, முஆவியா தப்பு செய்திருந்தால், அலீ நியாயத்தில் இருந்தால், அலீவுடைய ரப்பு யார்? அவனும் அல்லாஹ். 

அலீக்காக முஆவியாவிடத்தில் நீதம் வாங்கக் கூடியவன் யார்? அல்லாஹ் தான். முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்களை தண்டிப்பதாக இருந்தால் தண்டிக்கக்கூடியவன் யார்? அல்லாஹு தஆலா தான். 

இப்படி அவன் ரஹீமாகவும் இருக்கின்றான், கரீமாகவும் இருக்கின்றான். எந்த முஆவியா இடத்தில் அலீக்காக வேண்டி நீதத்தை வாங்க வேண்டுமோ அந்த ரப்பு தான் உன்னுடைய ரப்பு. ரப்புர் ரஹீம் -கருணை உள்ளவன், இரக்கம் உள்ளவன். 

அதேநேரத்தில் தயாளமுள்ளவன். அவன் நாடும் போது முஆவியாவை மன்னிக்கவும் செய்யலாம். அதே நேரத்தில் முஆவியாவை மன்னித்துவிட்டு அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் மனது திருப்திபடுகின்ற அளவு அவர்களுக்கு அவனுடைய தயாளத்தால் அல்லாஹு தஆலா அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு சுவர்கத்தின் பதவிகளை உயர்த்தலாம். அவன் மிகப் பெரிய தயாளன். அந்த இருவரும் தங்களது ரப்பிடத்தில் அதை பேசிக் கொள்வார்கள். அந்த இருவருக்கும் இடையில் உள்ளே செல்வதற்கு நீ யார்?

முஆவியாவும் அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களும் தங்களுடைய தீர்ப்புக்காக நாளை மறுமையில் உன்னிடத்தில் வருவார்களா? ரப்பிடத்தில் செல்வார்களா? அந்த ரப்பு, ரஹீம் ரவூஃப் கரீம். அவன் அவர்களை திருப்திபடுத்துவான். 

முஆவியாவை மன்னிப்பதற்கும் அல்லாஹ் போதுமானவன், அலீக்கு கண்ணியத்தை உயர்த்துவதற்கும் அல்லாஹ் போதுமானவன். இந்த இருவருக்குமிடையில் உள்ளே நுழைந்து தீர்ப்பு செய்வதற்கு நீ யார்? என்று அந்த மனிதருக்கு அழகிய பாடத்தை கொடுத்தார்கள்.

وقد عزي إلى عبد الله بن المبارك ـ رحمه الله تعالى ـ ففي مرقاة المصابيح على مشكاة المصابيح: قيل لابن المبارك أيهما أفضل معاوية أو عمر بن عبد العزيز؟ فقال الغبار الذي دخل في أنف فرس معاوية مع النبي صلى الله عليه وسلم خير من مثل عمر بن عبد العزيز كذا وكذا مرة. انتهى

அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹ்) அவர்களிடத்தில் ஒருவர் கேட்கிறார்; உமர் இப்னு அப்துல் அஸீஸ் சிறந்தவரா? முஆவியா சிறந்தவரா? என்று. 

உமர் இப்னு அப்துல் அஸீஸ் இவர் தாபியீன், முஆவியா (ரலி) மாநபி {ஸல்} அவர்களுடைய தோழர். ரசூலுல்லாஹ் உடைய மனைவியின் சகோதரர். குர்ஆனுடைய வஹியை எழுதியவர். கடைசி காலத்தில் அவர் இஸ்லாமை ஏற்றிருந்தாலும் இந்த இஸ்லாமிற்காக மிகப்பெரிய தியாகங்களை செய்த, இஸ்லாமிற்காக ஜிஹாதுகளை செய்து பல நாடுகளை வெற்றி கொண்டு, இஸ்லாமிய ஆட்சியை நிறுவிய மன்னர்களில் ஒருவர்.

ஆனால், மன்னர் ஆட்சி என்ற காரணத்தால் அவர்களை சிலர் குறைவாகப் பேசலாம். அப்படிப்பட்ட சிந்தனையில் உள்ளவர் ஒருவர் தான் இப்படி கேட்கிறார்: முஆவியா சிறந்தவரா? அல்லது உமர் இப்னு அப்துல் அஸீஸ் சிறந்தவரா? என்று. 

       அப்போது அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்) கூறுவதைப் பாருங்கள். முஆவியா உடைய மூக்குத் துவாரத்தில் அவர் ரசூலுல்லாஹ் உடன் பயணம் செய்த போது ஏற்பட்ட அந்த புழுதி தூசி இருக்கிறது அல்லவா, அந்த தூசி உமர் இப்னு அப்துல் அஸீஸை விட சிறந்தது, அவரை விட சிறப்பானது என்பதாக.

       உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) ஐந்தாவது கலீஃபா என்று சொல்லப்படுகிறது. இஸ்லாமுக்காக வாழ்ந்து நீதத்தை நிலைநாட்டி மார்க்கத்தை உறுதிப்படுத்திய மிகப் பெரிய தாபியீ. 

       அவர் ஒரு மன்னர் மட்டுமல்ல, அரசர் மட்டுமல்ல, மிகப்பெரிய இமாம்; ஆலிம். பல ஹதீஸ்களை அறிவித்த ஒரு பெரிய ஹதீஸ்களுடைய ராவி -அறிவிப்பாளர் அவர். அப்படி ஒரு உயர்ந்த அந்தஸ்த்தில் இருந்தும் கூட, ஒரு தாபியீ எவ்வளவு தான் அமல்களில் உயர்ந்திருந்தாலும் ரசூலுல்லாஹ்வுடைய கடைசி காலத்தில் இஸ்லாமை ஏற்று இஸ்லாமுக்காக வாழ்ந்த ஒரு ஸஹாபியினுடைய மூக்கில் பயணத்தில் செல்லும் போது ஏற்படக்கூடிய அந்த புழுதி தூசுக்கு கூட அவர் சமமாக மாட்டார்கள்.

நபித்தோழர்கள் மேல் கண்ணியம் நமக்கு குறையுமானால், ஹதீஸ்களின் மேல் இருக்கும் நம்பிக்கை குறையும் வாய்ப்பு உருவாகலாம், பின்னர் குர்ஆனின் மேல் உள்ள நம்பிக்கையும் குறையும் வாய்ப்பு ஏற்படலாம் (நவுதுபில்லாஹ்). அல்லாஹ் நம் எல்லோரையும் ஈமானில் உறுதியுள்ள மக்களாக ஆக்கியருள்வானாக!

நபித்தோழர்களை நேசிப்போம், அவர்களை கண்ணியப்படுத்துவோம், அவர்களை கேவலப்படுத்தும் கயவர்களை களையெடுப்போம் என்ற சபதம் ஒவ்வொருவரும் எடுக்க வேண்டும். 

யாஅல்லாஹ்! எங்கள் அனைவரையும், சத்திய சஹாபாக்கள் மீது நேசம் கொள்பவர்களாக ஆக்கியருள்வாயாக!

யாஅல்லாஹ்! எங்கள் அனைவரையும், சத்திய சஹாபாக்கள் எவ்வாறு குர்ஆன் மற்றும் நபி (ஸல்) அவர்களின் சொல் செயல் ஆகியவற்றின் அங்கீகாரத்தின் அடிப்படையில் வாழ்ந்தார்களோ அதுபோல் எங்கள் அனைவரையும் வாழ அருள் புரிவாயாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

No comments:

Post a Comment