வழிகாட்டும்
வான்மறை - தராவீஹ் சிந்தனை - 24.
யாருக்கு? எப்படி? செலவு செய்ய வேண்டும்?
23 –ஆவது நோன்பை
நிறைவு செய்து,
24 –ஆவது நாள் தராவீஹ் தொழுகையை மிகச் சிறப்பாக முடித்து விட்டு
அடுத்த நோன்பு நோற்பதற்காக எதிர் பார்த்து காத்திருக்கின்றோம்.
அல்ஹம்துலில்லாஹ்!
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமது நோன்பையும், தராவீஹ் தொழுகையையும்
கபூல் செய்வானாக! எஞ்சியிருக்கிற நாட்களின் நோன்புகளையும், வணக்க,
வழிபாடுகளையும் எவ்வித தடங்கலும் இன்றி பரிபூரணமாக
நிறைவேற்றுகிற நற்பேற்றினை நம் அனைவருக்கும் நல்குவானாக! ஆமீன்!!
இன்றைய நாளின்
தராவீஹ் தொழுகையில் அர் மும்தஹினா அத்தியாயம் முதல் அல் ஹாக்கா வரையிலான 10 அத்தியாயங்கள் ஓதப்பட்டிருக்கின்றது.
இன்றைய தராவீஹ்
தொழுகையில் ஓதப்பட்ட அத் தலாக் சூராவின் 7 -வது ஆயத் ஓர்
முஃமின் தம்முடைய வாழ்வில் தாம் சம்பாதித்த பொருளாதாரத்தை செலவு செய்வதன்
வரம்புகளைக் கூறுகின்றது.
ஏனெனில், ஒரு அடியான் தான் செலவு செய்ததைப் பற்றிய தெளிவை, பட்டியலை அல்லாஹ்விடம் நாளை மறுமையில் சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது
என்பதை நாம் மறந்து விடக் கூடாது.
عَنْ
أَبِي بَرْزَةَ الأَسْلَمِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ: لَا تَزُولُ قَدَمَا عَبْدٍ يَوْمَ القِيَامَةِ حَتَّى يُسْأَلَ عَنْ
عُمُرِهِ فِيمَا أَفْنَاهُ، وَعَنْ عِلْمِهِ فِيمَ فَعَلَ، وَعَنْ مَالِهِ مِنْ
أَيْنَ اكْتَسَبَهُ وَفِيمَ أَنْفَقَهُ، وَعَنْ جِسْمِهِ فِيمَ أَبْلَاهُ رواه
الترمذي (2417)، وقال: " هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ"
மறுமை நாளில் ஓர்
அடியானின் (பின்வரும் விஷயங்கள் குறித்து) விசாரணை செய்யப்படுவதற்கு முன் அவனுடைய
பாதங்கள் (நின்ற இடத்திலிருந்து) நகர முடியாது”.
ஒன்று : அவன் வாழ்நாள்: அதை எவ்வாறு கழித்தான்?
இரண்டு : அவன் கற்ற கல்வி: அதைக் கொண்டு எவ்விதம்
செயல்பட்டான்?
மூன்று : அவன் பொருளாதாரம்: அதை எங்கிருந்து திரட்டினான்?
நான்கு : அ(ந்தப் பொருளாதாரத்)தை எவ்வழியில் செலவிட்டான்?
ஐந்து : அவன் உடல்: அதை எதில் ஈடுபடுத்தினான்? என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூபர்ஸா
(ரழி), (
நூல்: திர்மிதீ: 2341 )
இன்று நம்
சமூகத்தை ஆட்டிப் படைக்கும் ஒரு விஷயம் என்னவென்றால் நான் அவரைப் போல வாழ
வேண்டும். இன்னாரைப் போல என் மகளுக்கு ஜாம் ஜாமுன்னு கல்யாணம் பண்ணி கொடுக்கனும்.
அந்த தெருவுல அவர் வீடு கட்டுன மாதிரி வீடு கட்டனும். எதிர் வீட்டுக்காரர் வாங்குன
அதே காரை நாமளும் வாங்கனும். பக்கத்து வீட்டுக்காரர் மாதிரி செலவு பண்ணனும்.
அல்லாஹ் நமக்கு
தந்ததை வைத்து நாம் வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் மிகவும் குறைவு.
அதற்காக
ஆசைப்படுவதை தவறென்று நாம் சொல்லவில்லை. மாறாக, அந்த ஆசையை நிறைவேற்றிக்
கொள்ள நம்மில் பலரும் தேர்ந்தெடுக்கும் வழிகள் ஆபத்தானது என்பதை நாம்
எச்சரிக்கின்றோம்.
அல்லாஹ் தாம்
அனுப்பிய இறைத்தூதர்களில் கூட சிலரை விட சிலரை மேம்படுத்தி இருப்பதாக சொல்லும்
போது நம்மை மட்டும் விட்டு விடுவானா என்ன?
تِلْكَ
الرُّسُلُ فَضَّلْنَا بَعْضَهُمْ عَلٰى بَعْضٍۘ مِنْهُمْ مَّنْ كَلَّمَ اللّٰهُ
وَرَفَعَ بَعْضَهُمْ دَرَجٰتٍؕ
அத்தூதர்கள் -
அவர்களில் சிலரைச் சிலரைவிட நாம் மேன்மையாக்கி இருக்கின்றோம்; அவர்களில் சிலருடன் அல்லாஹ் பேசியிருக்கின்றான்; அவர்களில் சிலரைப் பதவிகளில் உயர்த்தியும் இருக்கின்றான்; ( அல்குர்ஆன்: 2:
253 )
நம்மையும் அல்லாஹ்
ரப்புல் ஆலமீன் இந்த உலகில் சிலரை விட சிலரை வாழ்க்கைப் போங்கில், வசதி வாய்ப்பில் மேம்படுத்தியே இருக்கிறான்.
وَاللّٰهُ
فَضَّلَ بَعْضَكُمْ عَلٰى بَعْضٍ فِى الرِّزْقِۚ
அல்லாஹ் உங்களில்
சிலரை, சிலரைவிட செல்வத்தில் மேன்மைப்படுத்தி இருக்கின்றான்; ( அல்குர்ஆன்: 16:
71 )
இந்த உலகம்
மிகவும் விசித்திரமானது. இங்கு சிலர் ஏழைகள், சிலர் செல்வந்தர்கள்.
இங்கு சிலர் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், சிலர் சிரமத்தில்
இருக்கின்றார்கள். இங்கு சிலர் இன்பமாக இருக்கின்றார்கள், சிலர் துன்பத்தில் உழல்கின்றார்கள்.
ஆனால், ஒன்று மட்டும் உண்மை. இங்கு எதுவும் நிரந்தரம் இல்லை. பகல் இரவு போல மாறி மாறி
வந்து கொண்டே இருக்கும்.
எந்த நிலை
வந்தாலும் ஒரு முஸ்லிம் தம்மை சமநிலையில் வைத்திருக்க வேண்டும். அவரே சிறந்த
முஸ்லிம் ஆவார்.
قال
أبو حازم: من عرف الدنيا لم يفرح فيها برخاء ولم يحزن على بلوى.
இந்த துன்யாவின்
யதார்த்தத்தைப் புரிந்துகொண்டவர்கள் செழுமையின் போது (அதிகம்) மகிழ்ச்சி கொள்ள
மாட்டார்கள்;
அந்த செழுமை நீங்கி தள்ளாடும் போது அதற்காக ஒரு போதும்
வருந்தவும் மாட்டார்கள். என்று அறிஞர் அபூ ஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
யார் யாருக்கு எவ்வளவு வாழ்வாதாரம் கொடுக்க வேண்டும்?
قُلْ
اِنَّ رَبِّىْ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَّشَآءُ مِنْ عِبَادِهٖ وَيَقْدِرُ
لَهٗ
"நிச்சயமாக என்
இறைவன் தன் அடியார்களில் யாருக்கு நாடுகிறானோ, அவருக்கு செல்வத்தை
விசாலப்படுத்துவான்;
இன்னும், அவருக்கு சுருக்கியும்
விடுகிறான்;
( அல்குர்ஆன்: 34: 39 )
اِنَّ
رَبَّكَ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَّشَآءُ وَيَقْدِرُ اِنَّهٗ كَانَ
بِعِبَادِهٖ خَبِيْرًۢا بَصِيْرًا
நிச்சயமாக
உம்முடைய இறைவன்,
தான் நாடியவருக்கு வாழ்வாதாரத்தை விசாலமாக வழங்குகிறான்; (தான் நாடியவருக்கு) அளவாகவும் கொடுக்கிறான்; நிச்சயமாக அவன் தன் அடியார்களை நன்கறிந்தவனாகவும் பார்ப்பவனாகவும்
இருக்கிறான். (
அல்குர்ஆன்: 17: 30 )
யார் யாருக்கு எப்படி வாழ்க்கை வசதிகளை கொடுக்க வேண்டும்?
اَهُمْ
يَقْسِمُوْنَ رَحْمَتَ رَبِّكَ نَحْنُ قَسَمْنَا بَيْنَهُمْ مَّعِيْشَتَهُمْ فِى
الْحَيٰوةِ الدُّنْيَا وَرَفَعْنَا بَعْضَهُمْ فَوْقَ بَعْضٍ دَرَجٰتٍ
لِّيَـتَّخِذَ بَعْضُهُمْ بَعْضًا سُخْرِيًّا وَرَحْمَتُ رَبِّكَ خَيْرٌ مِّمَّا
يَجْمَعُوْنَ
உமது இறைவனின்
அருளை இவர்களா பங்கிடுகிறார்கள்? இவ்வுலக வாழ்வில்
இவர்களுடைய வாழ்க்கை(த் தேவை)யை இவர்களிடையே நாமே பங்கிட்டு இருக்கிறோம்; இவர்களில் சிலர்,
சிலரை ஊழியத்திற்கு வைத்துக்கொள்ளும் பொருட்டு, இவர்களில் சிலரை,
சிலரைவிட தரங்களில் நாம் உயர்த்தி இருக்கிறோம்; உம்முடைய இறைவனின் அருள் அவர்கள் சேகரித்து வைத்துக் கொண்டிருப்பதைவிட
மேலானதாகும்.
وَلَوْلَاۤ
اَنْ يَّكُوْنَ النَّاسُ اُمَّةً وَّاحِدَةً لَّجَـعَلْنَا لِمَنْ يَّكْفُرُ
بِالرَّحْمٰنِ لِبُيُوْتِهِمْ سُقُفًا مِّنْ فِضَّةٍ وَّمَعَارِجَ عَلَيْهَا
يَظْهَرُوْنَۙ
(நிராகரிப்போருக்கு நாம்
கொடுக்கும் செல்வத்தைக் கண்டு) மனிதர்கள் (நிராகரிக்கும்) ஒரே சமுதாயமாக
ஆகிவிடுவார்கள் என்பது இல்லாவிட்டால், அவர்களின் வீடுகளுக்குரிய
முகடுகளையும்,
அவற்றுக்கு அவர்கள் ஏறிச்செல்லும் படிகளையும் நாம்
வெள்ளியினால் ஆக்கியிருப்போம்.
وَلِبُيُوْتِهِمْ
اَبْوَابًا وَّسُرُرًا عَلَيْهَا يَتَّكِـــٴُـوْنَۙ
அவர்களுடைய
வீடுகளுக்குரிய வாயில்களையும், அவர்கள்
சாய்ந்துகொண்டிருக்கும் கட்டில்களையும் (அவ்வாறே ஆக்கியிருப்போம்).
وَزُخْرُفًا
وَاِنْ كُلُّ ذٰ لِكَ لَمَّا مَتَاعُ الْحَيٰوةِ الدُّنْيَا وَالْاٰخِرَةُ عِنْدَ
رَبِّكَ لِلْمُتَّقِيْنَ
தங்கத்தாலும்
(அவற்றை ஆக்கிக் கொடுத்திருப்போம்; ஆனால்,) இவையெல்லாம் இவ்வுலக வாழ்க்கையிலுள்ள (நிலையில்லா அற்ப) சுகங்களேயன்றி
வேறில்லை;
மேலும், மறுமை(யின் நித்திய
வாழ்வு) உம் இறைவனிடம் (அவனை) அஞ்சுபவர்களுக்குத்தான். ( அல்குர்ஆன்: 43:
32 - 35 )
எப்படி செலவு செய்ய வேண்டும்?
يَسْــٴَــلُوْنَكَ مَاذَا يُنْفِقُوْنَ قُلْ مَآ اَنْفَقْتُمْ مِّنْ
خَيْرٍ
அவர்கள் உம்மிடம்
கேட்கிறார்கள்: "எதைச் செலவு செய்யவேண்டும்?" என்று;
நீர் கூறும்: "நல்லவற்றிலிருந்து எதனை நீங்கள் செலவு செய்தாலும் அது சரியே! ( அல்குர்ஆன்: 2: 215 )
செலவழிக்கக் பயந்து கஞ்சத்தனமாக இருக்கக் கூடாது...
قُلْ لَّوْ اَنْـتُمْ تَمْلِكُوْنَ خَزَآٮِٕنَ رَحْمَةِ رَبِّىْۤ
اِذًا لَّاَمْسَكْتُمْ خَشْيَةَ الْاِنْفَاقِ وَكَانَ الْاِنْسَانُ قَتُوْرًا
"என்னுடைய இறைவனின்
அருள் பொக்கிஷங்களை நீங்கள் சொந்தமாக்கிக்கொண்டு இருப்பீர்களானாலும், அவை செலவாகிவிடுமோ என்ற பயத்தினால், நீங்கள் (அவற்றைத்)
தடுத்துக் கொள்வீர்கள்;
மேலும், மனிதன் கஞ்சனாகவே
இருக்கின்றான்" என்று (நபியே!) நீர் கூறும். ( அல்குர்ஆன்: 17: 100 )
நடுநிலையாக செலவு செய்வது...
وَالَّذِيْنَ اِذَاۤ اَنْفَقُوْا لَمْ يُسْرِفُوْا وَلَمْ يَقْتُرُوْا
وَكَانَ بَيْنَ ذٰلِكَ قَوَامًا
இன்னும், அவர்கள் செலவு செய்தால் வீண்விரயம் செய்யமாட்டார்கள்; (உலோபித்தனமாகக்) குறைக்கவும் மாட்டார்கள்; எனினும், இரண்டிற்கும் மத்திய நிலையாக அது இருக்கும். ( அல்குர்ஆன்: 25:
67 )
இருப்பதை வைத்து அவரவர்களுக்கு தக்கவாறு செலவு செய்வது...
لِيُنْفِقْ ذُوْ سَعَةٍ مِّنْ سَعَتِهٖ وَمَنْ قُدِرَ عَلَيْهِ
رِزْقُهٗ فَلْيُنْفِقْ مِمَّاۤ اٰتٰٮهُ اللّٰهُ لَا يُكَلِّفُ اللّٰهُ نَفْسًا اِلَّا
مَاۤ اٰتٰٮهَا سَيَجْعَلُ اللّٰهُ بَعْدَ عُسْرٍ يُّسْرًا
தக்க
வசதியுடையவர்கள்,
தம் வசதிக்கேற்ப செலவுசெய்து கொள்ளவும்; ஆனால்,
எவர்மீது அவருடைய வாழ்வாதார வசதி
நெருக்கடியாக்கப்பட்டுள்ளதோ, அவர் தமக்கு அல்லாஹ்
கொடுத்ததிலிருந்து செலவுசெய்து கொள்ளவும்; எந்த ஆத்மாவையும் அல்லாஹ்
அதற்குக் கொடுத்திருப்பதேயல்லாமல் (மிகையாகச் செலவு செய்யும்படி)
சிரமப்படுத்தமாட்டான்;
கஷ்டத்திற்குப் பின்னர், அல்லாஹ் அதி
சீக்கிரத்தில் இலகுவை (சுகத்தை) உண்டாக்குவான். ( அல்குர்ஆன்: 65:
7 )
வீண்விரய செலவுகள் கூடாது....
اِنَّ
الْمُبَذِّرِيْنَ كَانُوْۤا اِخْوَانَ الشَّيٰطِيْنِ ؕ وَكَانَ الشَّيْطٰنُ
لِرَبِّهٖ كَفُوْرًا
நிச்சயமாக வீரயம்
செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவார்கள்; ஷைத்தானோ தன்னுடைய
இறைவனுக்கு நன்றிகெட்டவனாக இருக்கின்றான்.
(
அல்குர்ஆன்: 17: 27 )
ரொம்ப தாராளமாக செலவு செய்யவும் கூடாது...
وَلَا
تَجْعَلْ يَدَكَ مَغْلُوْلَةً اِلٰى عُنُقِكَ وَلَا تَبْسُطْهَا كُلَّ الْبَسْطِ
فَتَقْعُدَ مَلُوْمًا مَّحْسُوْرًا
(உலோபியைப் போல் எதுவும்
வழங்காது) உம் கையைக் கழுத்தில் கட்டப்பட்டதாக்கிக் கொள்ளாதீர்கள்; அன்றியும்,
(அனைத்தையும் செலவழித்து உம் கையை) ஒரே விரிப்பாக விரித்தும்
விடாதீர்;
அதனால், நீர்
நிந்திக்கப்பட்டவராகவும்,
(கையில் எதுவுமில்லாது) துக்கப்பட்டவராகவும் அமர்ந்து
விடுவீர்.
( அல்குர்ஆன்: 17:
29 )
யார் யாருக்கு செலவழிக்க வேண்டும்?
يَسْــٴَــلُوْنَكَ مَاذَا يُنْفِقُوْنَ قُلْ مَآ اَنْفَقْتُمْ مِّنْ
خَيْرٍ فَلِلْوَالِدَيْنِ وَالْاَقْرَبِيْنَ وَالْيَتٰمٰى وَالْمَسٰكِيْنِ وَابْنِ
السَّبِيْلِ وَمَا تَفْعَلُوْا مِنْ خَيْرٍ فَاِنَّ اللّٰهَ بِهٖ عَلِيْمٌ
அவர்கள் உம்மிடம்
கேட்கிறார்கள்: "எதை,
(யாருக்கு)ச் செலவு செய்யவேண்டும்?" என்று;
நீர் கூறும்: "நல்லவற்றிலிருந்து (நன்மையை நாடி) எதனை
நீங்கள் செலவு செய்தாலும் அதை தாய், தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும்,
வழிப்போக்கருக்கும் (கொடுங்கள்); மேலும்,
நீங்கள் நன்மையிலிருந்து எதனைச் செய்தாலும் நிச்சயமாக
அல்லாஹ் அதை அறிந்து (தக்க கூலி தருபவனாக) இருக்கிறான்." ( அல்குர்ஆன்: 2:
215 )
وَّبِالْوَالِدَيْنِ
اِحْسَانًا وَّبِذِى الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَ الْمَسٰكِيْنِ وَالْجَـارِ ذِى
الْقُرْبٰى وَالْجَـارِ الْجُـنُبِ وَالصَّاحِبِ بِالْجَـنْۢبِ وَابْنِ السَّبِيْلِ
ۙ وَمَا مَلَـكَتْ اَيْمَانُكُمْ ؕ اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ مَنْ كَانَ
مُخْتَالًا فَخُوْرَا ۙ
மேலும், தாய் தந்தையருக்கும்,
நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும்,
ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள
உறவினர்களுக்கும்,
அருகிலுள்ள அண்டைவீட்டாருக்கும், (பிரயாணம்,
தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் உபகாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையவனாக, பெருமை உடையவனாக
இருப்பவனை நேசிப்பதில்லை. ( அல்குர்ஆன்: 4: 36 ) (செலவு செய்வதும் உபகாரத்தில் கட்டுப்பட்டதே!)
மேற்கூறிய இரண்டு
ஆயத்துகளிலும் யாருக்கு நாம் செலவு செய்ய வேண்டும் என்பது குறித்து அல்லாஹ் பெரிய
பட்டியலை வழங்குகின்றான்.
நம்
பொருளாதாரத்தில் இருந்து நாம் செலவு செய்வதற்கு முதன்மையானவர்கள் நம் பெற்றோர்கள். அடுத்து நம் சகோதர, சகோதரிகள்,
அடுத்து நம் மனைவி மக்கள், அடுத்து நம் தாய் வழி தந்தை வழி நெருங்கிய உறவுகள், அடுத்து மனைவி வழி உறவுகள், அடுத்து உறவினர்கள், அடுத்து தூரத்து/நெருங்கிய அண்டை வீட்டார்கள், அடுத்து நண்பர்கள்,
அடுத்து அநாதைகள், அடுத்து ஏழைகள், அடுத்து சிறைவாசிகள்,
அடுத்து பாதை தவறிய பயணிகள், அடுத்து மார்க்கப் பணிகளில் ஈடுபட்டுள்ளோர்கள் ஆகியோர்
1. குடும்பத்தினருக்காக செலவு செய்வது.
وعن
أَبي هريرة قال: قال رسولُ اللَّه ﷺ دِينَارٌ أَنْفَقْتَهُ في
سبيلِ اللَّه، وَدِينَارٌ أَنْفَقْتَهُ في رقَبَةٍ، ودِينَارٌ
تصدَّقْتَ بِهِ عَلَى مِسْكِينٍ، وَدِينَارٌ أَنْفَقْتَهُ علَى
أَهْلِكَ، أَعْظَمُهَا أَجْرًا الَّذي أَنْفَقْتَهُ علَى أَهْلِكَ
அபூஹுரைரா (ரலி)
அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அல்லாஹ்வின் பாதையில் நீ செலவு
செய்கிற ஒரு தீனாரும்,
ஒரு அடிமையை உரிமை விடுகிற விஷயத்தில் நீ செலவு செய்கிற ஒரு
தீனாரும்,
ஒரு ஏழைக்கு தர்மமாக செலவு செய்கிற ஒரு தீனாரும், உன் குடும்பத்தாருக்காக நீ செலவு செய்கிற ஒரு தீனாரும் கூலி வழங்கப்படுவதால்
அல்லாஹ்விடம் மகத்தான ஒரு தீனார் எது தெரியுமா? அது உன்
குடும்பத்தாருக்காக நீ செலவு செய்த அந்த ஒரு தீனார் தான்” என நபி {ஸல்}
அவர்கள் கூறினார்கள். ( நூல்: முஸ்லிம் )
இன்று அல்லாஹ்வின்
பாதையில் கேட்டவுடன் எவ்வளவோ செலவு செய்கிறோம், ஏழைகளுக்கு வாரி
வழங்குகின்றோம். ஆனால்,
குடும்பத்தில் தாய், தகப்பன், மனைவி மக்கள்,
பேரன், பேத்தி, சகோதரன் சகோதரி ஆகியோருக்கு செலவு செய்ய எவ்வளவு தயங்குகின்றோம்.
நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்:
ஒரு மனிதர் (இறைவனிடம்) நன்மையை எதிர்பார்த்தவராகத் தம்
குடும்பத்தினர்க்குச் செலவு செய்தால் அது அவருக்குத் தர்மமாகிவிடும். அறிவிப்பவர்: அபூமஸ்ஊத் அல்அன்சாரி (ரலி), ( நூல்: புகாரி )
அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் தம் குடும்பத் தாருக்காகச் செலவிடுகின்ற
ஒரு பொற்காசும் (தீனார்),
அல்லாஹ்வின் பாதையில் தமது வாகனத்திற்காகச் செலவிடுகின்ற
ஒரு பொற்காசும்,
அல்லாஹ்வின் பாதையில் தம் நண்பர்களுக்காகச் செலவிடுகின்ற
ஒரு பொற்காசுமே அவர் செலவிடுகின்ற பொற்காசுகளிலேயே சிறந்ததாகும்." என்று நபி
ஸல் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி), ( நூல்: முஸ்லிம் )
1. பெற்றோர்களுக்காக செலவு செய்வது.
عن جابر
رضي الله عنه أن رجلاً قال: يا رسول الله إن لي مالاً وولداً ، وإن أبي يريد أن
يجتاح مالي، فقال: "أنت ومالك لأبيك".
ஒரு மனிதர் நபிகளாரிடம் வந்து ‘இறைவனின் தூதரே,
எனக்கு குழந்தையும், செல்வமும் உள்ளது. மேலும்
எனது தந்தைக்கு என் செல்வம் தேவைப்படுகிறது’ என்றார். அதற்கு
நபியவர்கள் ‘நீயும்,
உனது செல்வமும் உனது தந்தைக்கு உரியனவாகும். நீங்கள்
சம்பாதிக்கும் செல்வத்தில் உங்கள் குழந்தைகளே மிகத் தூய்மையான செல்வமாவர். எனவே
உங்கள் குழந்தைகள் சம்பாத்தியத்திலிருந்து உண்ணுங்கள்’ என்றார்கள்”.
அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), ( நூல்: அபூதாவூத்)
عن عمرو
بن شعيب عن أبيه عن جده أن أعرابيا أتى للنبي صلى الله عليه وسلم فقال : إن أبي
يريد أن يجتاح مالي، فقال : " أنت ومالك لوالدك، إن أطيب ما أكلتم من كسبكم،
وإنّ أولادكم من كسبكم فكلوه هنيئاً
ஒரு கிராமவாசி
நபிகளாரிடம் வந்து ‘இறைவனின் தூதரே! எனது தந்தைக்கு என் செல்வம் தேவைப்படுகிறது’ என்றார். அதற்கு நபியவர்கள் ‘நீயும், உனது செல்வமும் உனது தந்தைக்கு உரியனவாகும். நீங்கள் உண்பதில் மிகச் சிறந்தது
உங்கள் சம்பாத்தியத்தில் இருந்து உண்பது தான். எனவே உங்கள் குழந்தைகளே
நீங்கள் சம்பாதிக்கும் சிறந்த செல்வமாவார்கள். எனவே உங்கள் குழந்தைகள்
சம்பாத்தியத்திலிருந்து உண்ணுங்கள்’ என்றார்கள்”. அறிவிப்பாளர்: அம்ருப்னு ஷுஐப் (ரலி), ( நூல்: அபூதாவூத்)
பெற்றோர் இருவரில்
அதிகமாக யாருக்கு முதலில் உபகாரம் செய்ய வேண்டும்? என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது.
مَنْ
أَحَقُّ النَّاسِ بِحُسْنِ الصُّحْبَةِ قَالَ أُمُّكَ ثُمَّ أُمُّكَ ثُمَّ أُمُّكَ
ثُمَّ أَبُوكَ ثُمَّ أَدْنَاكَ أَدْنَاكَ
“நான் யாருக்கு அதிகம்
உபகாரம் செய்ய வேண்டும். ரஸூல் (ஸல்) உன் தாய் என்று சொன்னார்கள். பிறகு
கேட்கிறார்;
பிறகும் தாய் என்று சொல்கிறார்கள். பிறகு கேட்கிறார்
பிறகும் தாய் என்று சொல்கிறார்கள். மூன்று முறை தாய் என்று கூறியதற்கு பிறகு
நான்காவது முறை தந்தை என்று சொல்கிறார்கள்”.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா (ரலி) ( நூல் : முஸ்லிம்,எண் : 4622
)
ஹஸன் பஸரீ (ரஹ்)
அவர்களிடத்தில் கேட்கப்படுகின்றது:- பெற்றோருக்கு உபகாரம்
செய்ய வேண்டுமென்றால் என்ன?
أن تبذل
لهما ما ملكت ، وأن تطيعهما في ما أمراك به ، إلا أن تكون معصية
“நீ என்ன உன் கை வசம்
வைத்திருக்கிறாயோ,
அனைத்தையும் அவர்களுக்காக செலவு செய்ய வேண்டும். பாவமற்ற
காரியங்களில் அவர்கள் கூறும் விஷயத்திற்கு நீ கீழ்படிந்து நடக்கவேண்டும்”.என்பதாக.
பதில் கூறினார்கள். ( நூல் : முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக், 9288 )
2. மனைவி மக்களுக்கு செலவு செய்ய வேண்டும்...
عن
معاوية بن حَيْدَةَ رضي الله عنه قال: قلتُ: يا رسول الله، ما حقُّ زوجة أحدنا
عليه؟ قال: ((أن تُطعِمَها إذا طَعِمْتَ، وتكسُوَها إذا اكتسَيتَ، ولا تَضرِبِ
الوجهَ، ولا تُقبِّحْ، ولا تهجُرْ إلا في البيت))؛ حديث حسن رواه أبو داود.
அல்லாஹ்வின்
தூதரே! எங்களில் ஒருவரிடம் அவரது மனைவியின் உரிமைகள் என்ன? என்று கேட்டேன். அப்போது நபியவர்கள் நீர் சாப்பிடும் போது அவளையும் நீர்
சாப்பிடச் செய்ய வேண்டும். நீர் ஆடை அணியும்போது அவளுக்கு அணியச் செய்ய வேண் டும்… என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: முஆவியா இப்னு ஹைதா (ரழி), நூல்: அபூதாவூத்)
حَدَّثَنَا
ابْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُاللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ ابْنِ
شِهَابٍ، أَخْبَرَنِي عُرْوَةُ، أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ:
جَاءَتْ هِنْدٌ بِنْتُ عُتْبَةَ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ أَبَا
سُفْيَانَ رَجُلٌ مِسِّيكٌ، فَهَلْ عَلَيَّ حَرَجٌ أَنْ أُطْعِمَ مِنَ الَّذِي
لَهُ عِيَالَنَا؟ قَالَ: لاَ، إِلَّا بِالْمَعْرُوفِ.
ஒரு முறை ஹிந்த்
பின்த் உத்பா (ரலி),
நபி (ஸல்) அவர்களிடம் “இறைத்தூதர் அவர்களே! என்
கணவர் அபூசுய்யான் (ரலி) கருமியான மனிதர். எனக்கும் என் குழந்தைக்கும் போதுமான
(பணத்)தை அவர் தருவதில்லை. நான் அவரிடமிருந்து அவருக்குத் தெரியாமல் எடுத்துக்
கொண்டதைத் தவிர (போதுமான தொகையை அவராகத் தரமாட்டார்)’ என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், ‘உனக்கும், உன் குழந்தைக்கும் போதுமானதை நியாயமான அளவுக்கு நீ எடுத்துக் கொள்’ என்று கூறினார்கள்.”
அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), ( நூல்: புகாரி )
قال
النبي صلى الله عليه وسلم لسعد بن أبي وقاص رضي الله عنه، إنك أن تذرَ ورثتَك
أغنياء خيرٌ مِن أن تذرهم عالةً يتكففون الناس))؛ متفق عليه.
உமது
வாரிசுக்காரர்களை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாக விட்டுச் செல்வதை விட பிறரிடம்
தேவையற்றவர்களாக விட்டுச் செல்வதே சிறந்தது. இறைஉவப்பை நாடி நீர் செய்கின்ற எந்த
ஒரு செலவானாலும் சரி. அதற்கு உமக்கு நன்மை கிடைக்கும்; நீர் உம் மனைவியின் வாயில் ஊட்டுகிற ஒரு கவள உணவுக்கும் கூட நன்மையுண்டு’ என நபி (ஸல்) அவர்கள் ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களுக்குத்
தெரிவித்தார்கள்’.
( நூல்: புகாரி )
حَدَّثَنِي
مُحَمَّدُ بْنُ سَلاَمٍ ، أَخْبَرَنَا وَكِيعٌ ، عَنِ ابْنِ عُيَيْنَةَ ، قَالَ :
قَالَ لِي مَعْمَرٌ ، قَالَ لِي الثَّوْرِيُّ : هَلْ سَمِعْتَ فِي الرَّجُلِ
يَجْمَعُ لِأَهْلِهِ قُوتَ سَنَتِهِمْ أَوْ بَعْضِ السَّنَةِ ؟ قَالَ مَعْمَرٌ :
فَلَمْ يَحْضُرْنِي ، ثُمَّ ذَكَرْتُ حَدِيثًا حَدَّثَنَاهُ ابْنُ شِهَابٍ
الزُّهْرِيُّ ، عَنْ مَالِكِ بْنِ أَوْسٍ ، عَنْ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ : «
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَبِيعُ نَخْلَ بَنِي
النَّضِيرِ، وَيَحْبِسُ لِأَهْلِهِ قُوتَ سَنَتِهِمْ
» .
மஅமர் இப்னு
ராஷித்(ரஹ்) அறிவித்தார். சுஃப்யான் அஸ்ஸவ்ரீ(ரஹ்) என்னிடம், ‘தம் குடும்பத்தாருக்காக ஓர் ஆண்டுக்கான, அல்லது ஆண்டின் ஒரு
பகுதிக்கான உணவை (முன்கூட்டியே) சேமித்து வைப்பவரைப் பற்றி நீங்கள் (ஏதேனும்
ஹதீஸ்) கேள்விப்பட்டிருக்கிறீர்களா?’ என்று
கேட்டார்கள். நான் ‘(அப்படியொரு ஹதீஸ்) எனக்கு நினைவில்லை’ என்று சொன்னேன். பிறகு, உமர்(ரலி) அறிவித்துள்ள ஒரு ஹதீஸ் என் நினைவில் வந்தது: நபி(ஸல்) அவர்கள் பனூ
நளீர் குலத்தாரின் பேரீச்சந் தோட்டத்தை விற்றுத் தம் குடும்பத்தாருக்கு, அவர்களின் ஓர் ஆண்டுக்கான உணவை (முன்கூட்டியே) சேமித்து வைப்பவர்களாக
இருந்தார்கள்.
எனவே, அல்லாஹ்வின்
அல்லாஹ்வின் தூதருடைய வழிகாட்டுதல் படி செலவு செய்வோம்!
No comments:
Post a Comment