இருள் அகற்றும்
இறைமறை - தராவீஹ் சிந்தனை - 6.
அல்ஹம்துலில்லாஹ்
சொல்வோம்!!!
ஆறாம் நாள்
தராவீஹ் தொழுகையைத் தொழுது முடித்தும், ஐந்தாம் நாள் நோன்பை
நிறைவு செய்தும் அமர்ந்திருக்கின்ற நம் அனைவரின் நோன்பையும், தராவீஹ் தொழுகையையும்,
இன்றைய நாளில் நாம் செய்த இதர வணக்க, வழிபாடுகளையும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அங்கீகரித்து அளவிலா நன்மைகளை வழங்குவானாக!
ஆமீன்!
இன்றைய தொழுகையில்
சூரா அல் அன்ஆம் முழுமையாக ஓதப்பட்டுள்ளது.
165 வசனங்களைக்
கொண்டுள்ள இவ்வத்தியாயம் முழுவதும் ஹிஜ்ரத்திற்கு ஒரு வருடத்திற்கு முன்னர்
மக்காவில் ஒரே இரவில் அருளப்பட்டவையாகும்.
இவ்வத்தியாயத்தின்
20, 23,
91, 93, 114, 140, 151, 152, 153 ஆகிய வசனங்களின்
கருத்துக்களின் பிரகாரம் இவ்வத்தியாயம் மக்காவில் அருளப்பட்டதாகும்.
இவ்வத்தியாயத்தின்
136ஆம் வசனம் தொடக்கம் 144ஆம் வசனம் வரை அறியாமைக் காலத்தில் கால்நடைகள் பற்றியிருந்த நம்பிக்கைகள், அவை பற்றிய வழிப்பாடுகள் என்பவற்றை கூறிவிட்டு, இவ்வாறான மூட நம்பிக்கைகளையும், வழிகேடுகளையும் சீர்
செய்ய வேண்டியதன் அவசியம் பற்றியும் இவற்றில் கூறப்பட்டுள்ளன. எனவே இந்த
அத்தியாயத்திற்கு அல் அன்ஆம் - கால்நடைகள் என்று பெயர் வந்தது.
இது தவிர்த்து
இந்த சூராவின் முக்கால் பகுதி வசனங்கள் ஏகத்துவ விழுமியங்களை, ஏக இறைவனின் தனித்துவமான பண்புகளைப் பேசுவதோடு பல தெய்வ வழிபாட்டு முறைகளை
கடுமையாக விமர்சனம் செய்கின்றன.
இப்ராஹீம்
அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தமது சமூகத்தாரோடு மேற்கொண்ட ஏகத்துவப் பிரச்சாரம் அதன்
வாயிலாக அவர்கள் தமது சமூகத்திற்கு விட்ட அறைகூவல் குறித்தும் பேசுகிறது.
நபிமார்களின்
பெயர்கள் இடம் பெரும் அத்தியாயங்களில் இது முதல் அத்தியாயம். சுமார் 23 நபிமார்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
"சூரத்துல் அன்ஆம்
மக்காவில் அருளப்பெற்றது" என்று இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்
என்று அல்-அவ்ஃபி,
இக்ரிமா மற்றும் அதா ஆகியோர் கூறினார்கள்.
"சூரத்துல் அன்ஆம்
முழுவதும் மக்காவில் ஒரு இரவில் அருளப்பெற்றது, அல்லாஹ்வை துதித்தவாறு
தங்கள் குரல்களை உயர்த்திய எழுபதாயிரம் வானவர்கள் அதனுடன் இருந்தனர்" என்று
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள் என்று அத்-தபரானி பதிவு செய்துள்ளார்.
"சூரத்துல் அன்ஆம்
எழுபதாயிரம் வானவர்களின் துணையுடன் அருளப்பெற்றது" என்று அப்துல்லாஹ் (ரழி)
அவர்கள் கூறினார்கள் என்று முர்ரா கூறினார் என்று அஸ்-ஸுயூத்தி ரஹ் கூறினார்கள்.
سُورَةُ
اَلْأَنْعَامِ نَزَلَتْ عَلَيَّ جُمْلَةً وَاحِدَةً وَ نَزَلَ سَبْعُونَ أَلْفَ
مَلَكٍ مِنَ اَلسَّمَاءِ إِلَى اَلْأَرْضِ لِمُشَايَعَتِهَا فَمَنْ قَرَأَهَا
صَلَّى عَلَيْهِ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ بِعَدَدِ كُلِّ آيَةٍ فِي هَذِهِ
اَلسُّورَةِ فِي اَللَّيْلِ وَ اَلنَّهَارِ
நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்:சூரா அன்ஆம் ஒரே தடவையில் எனக்கு அருளப்பட்டது. அதனை
வழியனுப்பிவைப்பதற்கு அதனோடு எழுபதாயிரம் மலக்குகள் வந்திருந்தனர். யாரொருவர் இந்த
சூராவினை ஓதுகின்றாரோ அவர் மீது எழுபதாயிரம் மலக்குகள் இவ்வத்தியாயத்திலுள்ள
ஒவ்வொரு வசனத்திற்கேற்ப இரவு, பகலாக அவர் மீது ஸலவாத்து
- பிரார்த்தி (க் கூறு)கின்றனர். ( நூல்: முஸ்தத்ரகுல் வஸாயில் : பாகம் 04, பக்கம் 297
)
مَنْ
قَرَأَ مِنَ اَلْأَنْعَامِ ثَلاَثَ آيَاتٍ مِنْ أَوَّلِهَا إِلَى قَوْلِهِ مٰا
تَكْسِبُونَ وَكَّلَ اَللَّهُ تَعَالَى عَلَيْهِ أَرْبَعِينَ أَلْفَ مَلَكٍ
يَكْتُبُونَ لَهُ مِثْلَ ثَوَابِ عِبَادَتِهِمْ إِلَى يَوْمِ اَلْقِيَامَةِ وَ
يُنَزِّلُ عَلَيْهِ مِنَ اَلسَّمَاءِ اَلسَّابِعَةِ مَلَكاً مَعَهُ عَمُودٌ مِنْ
حَدِيدٍ يَكُونُ مُوَكَّلاً عَلَيْهِ حَتَّى إِذَا أَرَادَ اَلشَّيْطَانُ أَنْ
يُوَسْوِسَهُ أَوْ يُلْقِيَ فِي قَلْبِهِ شَيْئاً يَضْرِبُهُ بِهَذَا اَلْعَمُودِ
ضَرْبَةً تَطْرُدُهُ عَنْهُ حَتَّى يَكُونَ بَيْنَهُ وَ بَيْنَ اَلشَّيْطَانِ
سَبْعُونَ حِجَاباً وَ يَقُولُ اَللَّهُ تَعَالَى لَهُ يَوْمَ اَلْقِيَامَةِ
عَبْدِي اِذْهَبْ إِلَى ظِلِّي وَ كُلْ مِنْ جَنَّتِي وَ اِشْرَبْ مِنَ
اَلْكَوْثَرِ وَ اِغْتَسِلْ مِنَ اَلسَّلْسَبِيلِ فَإِنَّكَ عَبْدِي وَ أَنَا
رَبُّكَ
நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள் :யாரொருவர் சூரா அன்ஆமின் முதல் மூன்று வசனங்களையும் ஓதுகின்றாரோ, இறைவன் நாற்பதாயிரம் மலக்குகளை நியமித்து, மறுமை வரையில்
இறைவழிபாட்டில் ஈடுபட்டவர்களின் நன்மையியை அவருக்கு எழுதும் படி பணிக்கின்றான்.
மேலும், ஏழாம் வானத்திலிருந்து இரும்பிலான ஓர் தூணுடன் அவரிடம் ஓர் மலக்கினை இறக்கி
வைக்கின்றான். ஷைத்தான் அவரது உள்ளத்தில் நுழைந்து, ஊசலாட்டத்தினை ஏற்படுத்த நாடினால் , அந்தத் தூணைக் கொண்டு
ஷைத்தானை அந்த மலக்கு அடிப்பார். அதன் காரணமாக ஷைத்தானுக்கும் அந்த
முஃமினுக்குமிடையில் எழுபது திறைகள் ஏற்படும். இறைவன் மறுமையில் அந்த அடியானிடம், “என் அடியானே! எனது நிழலிடம் செல்வீராக! எனது சுவனத்தில் உண்பீராக! எனது கௌதர்
தடாகத்திலிருந்து பருகுவீராக! எனது ஸல்ஸபீலில் குளிப்பீராக! நிச்சயமாக நீர் எனது
அடியானும்,
நான் உமது இரட்சகனுமாவேன்” எனக்கூறுவான்.
( நூல்: முஸ்தத்ரகுல் வஸாயில் : பாகம் 04, பக்கம் 298 )
சூரா அன்ஆமைத்
தவிர அல்ஹம்து லில்லாஹி என்ற, இந்த சொற்றொடருடன்
தொடங்கும் குர்ஆனின் நான்கு சூராக்கள் உள்ளன. அவை, சூரா அல்-ஃபாத்திஹா,
சூரா கஹ்ஃப் , சூரா சபா மற்றும் சூரா
ஃபாத்திர். அல்ஹம்துலில்லாஹ் என்ற சொற்றொடர் குர்ஆனில் சுமார் 38 முறை குறிப்பிடப்பட்டுள்ளது.
இது நமது அன்றாட
வாழ்வில் அல்ஹம்துலில்லாஹ் சொல்வதன் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது.
ஒருவர்
இன்னொருவரைப் புகழ,
பிராதனமாக இரண்டு காரணிகள் இருக்கலாம்,
அவரது தன்னிகரற்ற
ஆற்றல்.புகழ்பவருக்கு அவர் செய்த உதவிகள்.
உண்மையில் இவ்விரண்டு அம்சங்களும் முழுமையாக அல்லாஹ்விற்கு
மாத்திரமே உள்ளன.
ஒரு மனிதன்
அல்லாஹ்வின் ஆற்றல்,
அல்லாஹ் தனக்கு செய்துள்ள பேருபகாரங்கள் பற்றி சிந்திக்கும்
போதெல்லாம் அவனை அறியாமலேயே ‘அல்ஹம்துலில்லாஹ்’ என்ற வார்த்தை வந்துவிடும்.
இதே போன்று, இவ்வார்த்தை அதனை மொழிபவரிடம் பல நல்ல பண்புகள் இருப்பதன் அடையாளமாகும்.
1. العدل
(நீதம்) ஒரு மனிதன் தனக்கு
ஒரு சந்தோசமான நிகழ்வு ஏற்படும் போது, அல்லது அவனது முயற்சி
வெற்றியளிக்கும் போது அல்லாஹ்வைப் புகழ்கின்றான் என்றால் அந்த சந்தோசத்திற்கான
உண்மையாக காரணம் தன் உழைப்பல்ல. அல்லாஹ்வின் அருளே என்கிறான். புகழுக்குத்
தகுதியாவனுக்கு மாத்திரம் அதைக் கூறுவதன் மூலம் அதில் நீதமாக நடந்துகொள்கின்றான்.
2. التواضع
(பணிவு) எந்தப் பெரிய
வெற்றியின் போதும் அதன் பெருமையை தனக்கு இணைத்துப் பெருமையடிக்காமல் அல்லாஹ்வே
காரணமானவன் என அவனைப் புகழ்வது பணிவுத்தன்மையின் ஓர் அடையாளமாகும்.
3. الشكر
(நன்றி செலுத்தல்) ஒரு
மனிதன் தனது வாழ்க்கையின் அனைத்து சந்தோசமான நிகழ்வுகளின் போதும் அல்லாஹ்வைப்
புகழ்வது அவற்றிற்குக் காரணமாக இருந்த அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதாகும்.
அல்லாஹ்வைப் புகழ்ந்து நன்றியுடன் நடப்பதால் அல்லாஹ் தரும் இரண்டு
சன்மானங்கள்...
مَا يَفْعَلُ اللَّهُ بِعَذَابِكُمْ إِنْ شَكَرْتُمْ وَآمَنْتُمْ
وَكَانَ اللَّهُ شَاكِرًا عَلِيمًا
நீங்கள்
(அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்திக் கொண்டும், (அவன் மீது) ஈமான்
கொண்டும் இருந்தால்;
உங்களை வேதனை செய்வதால் அல்லாஹ் என்ன இலாபம் அடையப்
போகிறான்?
அல்லாஹ் நன்றியறிவோனாகவும், எல்லாம் அறிந்தவனாகவும் இருக்கிறான். ( அல்குர்ஆன்: 4: 147 )
அமல்கள் மூலம்
இறைவனுக்கு நாம் நன்றி செய்யா விட்டால் அல்லாஹ் நம்மை தண்டிப்பதாக எச்சரிக்கிறான்.
அதே நேரம் நாம்
தொடர்ந்து நன்றி செலுத்தினால் நமது தேவைகளை அதிகப்படுத்தி தருவதாக பின் வரும்
வசனத்தின் மூலம் அல்லாஹ் கூறுகிறான்.
وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ
وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ
“(இதற்காக எனக்கு) நீங்கள்
நன்றி செலுத்தினால்,
உங்களுக்கு நிச்சயமாக நான் (என்னருளை) அதிகமாக்குவேன்; (அவ்வாறில்லாது) நீங்கள் மாறு செய்தீர்களானால் நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக்
கடுமையானதாக இருக்கும்”
என்று உங்களுக்கு இறைவன் அறிக்கை இட்டதையும் (நினைவு
கூறுங்கள்). ( அல்குர்ஆன்: 14: 7 )
من قال:
الحمد لله، مائة مرة قبل طلوع الشمس وقبل غروبها، كان أفضل من مائة فرس يحمل عليها
في سبيل الله"،
யார் காலையிலும்
மாலையிலும் 100
முறை அல்ஹம்துலில்லாஹ் கூறுகிறாரோ - அவர் அல்லாஹ்வின்
பாதையில் 100
குதிரைகளை தானம் செய்ததைப் போன்ற வெகுமதியைப் பெறுவார் .' ( நூல்: திர்மிதீ )
كانَ
رسولُ اللَّهِ صلَّى اللَّهُ عليهِ وسلَّمَ إذا رأى ما يُحبُّ قالَ الحمدُ للَّهِ
الَّذي بنِعمتِهِ تتمُّ الصَّالحاتُ وإذا رأى ما يكرَهُ قالَ الحمدُ للَّهِ علَى
كلِّ حالٍ
الراوي
: عائشة أم المؤمنين | المحدث : الألباني | المصدر : صحيح ابن ماجه
الصفحة
أو الرقم: 3081 | خلاصة حكم المحدث
"அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் தமக்கு விருப்பமான ஒன்றைக் கண்டால், 'அல்-ஹம்து லில்லாஹில்லாஹி பி நிஃமதிஹி ததிம்முஸ்-ஸாலிஹாத்' (நற்செயல்கள் நிறைவடையும் அருளால் அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்) என்று கூறுவார்கள்.
மேலும், நபி ஸல் அவர்கள் வெறுப்பூட்டும் ஒன்றைக் கண்டால், 'அல்-ஹம்து லில்லாஹி 'அலா குல்லி ஹால்'
(எல்லா சூழ்நிலைகளிலும் புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே)' என்று கூறுவார்கள்." ( நூல்: ஸுனன் இப்னு மாஜா )
மகிழ்ச்சியான நேரத்தில் அல்லாஹ்வைப் புகழ
வேண்டும்...
இப்றாஹீம்
நபியவர்களுக்கு அல்லாஹ் குழந்தைப் பாக்கியத்தை அவர்களுடைய வயதின்
முதிர்ச்சியில்த்தான் கொடுத்தான் அந்நேரத்தில் கொடுத்தாலும் அதையும் தன்னுடைய
இறைவனின் ஆற்றல்தான் என நினைத்து அவனைப் புகழும் படி இறைவன் கூறுகிறான்.
الْحَمْدُ لِلَّهِ الَّذِي وَهَبَ لِي عَلَى الْكِبَرِ إِسْمَاعِيلَ
وَإِسْحَاقَ إِنَّ رَبِّي لَسَمِيعُ الدُّعَاءِ
எல்லாப் புகழும்
அல்லாஹ்வுக்கே உரியது அவனே (என்னுடைய) முதுமையில் இஸ்மாயீலையும், இஸ்ஹாக்கையும் (புதல்வர்களாக) எனக்கு அளித்தான்; நிச்சயமாக என் இறைவன் பிரார்த்தனையைக் கேட்பவன்.( அல்குர்ஆன்: 14: 39 )
கவலைகள்,கஷ்டங்கள் நீங்கும் போதும் இறைவனைப் புகழ வேண்டும்...
நமக்கு ஒரு கஷ்டம்,அல்லது கவலை நீங்கும்
போது அல்லாஹ்வைப் புகழும் படி நமக்கு இறைவன் கட்டளை இடுகிறான்.
وَقَالُوا الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَذْهَبَ عَنَّا الْحَزَنَ إِنَّ
رَبَّنَا لَغَفُورٌ شَكُورٌ
எங்களை விட்டு
(எல்லாக்) கவலைகளையும் போக்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரியதாகும்; நிச்சயமாக எங்கள் இறைவன் மிக மன்னிப்பவன்; நன்றியை ஏற்றுக் கொள்பவன்""
என்றும் அவர்கள் கூறுவார்கள்.( அல்குர்ஆன்: 35: 34 )
நபி நூஹ் (அலை)
அவர்கள் காலத்தில் அநியாயக் காரர்களை அழிப்பதற்காக அல்லாஹ் வெள்ளப் பெருக்கை
ஏற்படுத்தினான் அந்நேரத்தில் நூஹ் நபியவர்களைப் பற்றி கூறும் போது கப்பலில்
ஏறியவுடன் அநியாயக் காரர்களிடம் இருந்து காப்பாற்றியதற்காக அல்லாஹ்வைப் புகழும்படி
இறைவன் கூறுகிறான்.
فَإِذَا اسْتَوَيْتَ أَنْتَ وَمَنْ مَعَكَ عَلَى الْفُلْكِ فَقُلِ
الْحَمْدُ لِلَّهِ الَّذِي نَجَّانَا مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ
நீரும், உம்முடன் இருப்பவர்களும் கப்பலில் அமர்ந்ததும்; ''அநியாயக்காரரான சமூகத்தாரை விட்டும் எங்களைக் காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே
எல்லாப் புகழும்"" என்று கூறுவீராக! ( அல்குர்ஆன்: 23: 28 )
அல்லாஹ் தனது அருட்கொடைகளால் நம்மை சிறப்பாக்கி வைத்திருக்கும் போது
அல்லாஹ்வைப் புகழ வேண்டும்.
சுலைமான் நபியும்,தாவுத் நபியும் அல்லாஹ்வையே முதலில் புகழ்ந்தனர்.
உலகத்திலேயே எந்த ஒருவருக்கும் வழங்கப் படாத ஒரு ஆட்சி,அதிகாரம் நபி தாவுதுக்கும்,நபி சுலைமானுக்கும் வழங்கப் பட்டது.
அவர்களுடைய ஆட்சி
எப்படி இருந்தது என்றால் உலகத்திற்கே அவர்கள் ஆட்சியாளர்கள்.
இன்னும் சுலைமான்
நபியவர்களுக்கு அல்லாஹ் பறவைகள்,விலங்குகளின் பாசையைப் புரியும்
ஆற்றவையும் கொடுத்திருந்தான்.
அத்துடன் காற்றும்
ஜின்களும் கூட அவருக்குக் கட்டுப்பட்டிருந்தது. இப்படியெல்லா வளங்களைப் பெற்றும்
கூட சுலைமான் நபியும் தாவுத் நபியும் இறைவனை மறக்காமல் எங்களுக்கு இவ்வளவு
அருளையும் கொடுத்தவன் அல்லாஹ்தான் எனக்கூறி அவனையே புகழ்ந்தார்கள் என்று அல்லாஹ்
அல்குர்ஆனிலே சிலாகித்துக் கூறுகிறான்.
وَلَقَدْ آتَيْنَا دَاوُودَ وَسُلَيْمَانَ عِلْمًا وَقَالَا الْحَمْدُ
لِلَّهِ الَّذِي فَضَّلَنَا عَلَى كَثِيرٍ مِنْ عِبَادِهِ الْمُؤْمِنِينَ
தாவூதுக்கும், ஸுலைமானுக்கும் நிச்சயமாக நாம் கல்வி ஞானத்தைக் கொடுத்தோம்; அதற்கு அவ்விருவரும்;
''புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது அவன் தான், முஃமின்களான தன் நல்லடியார்களில் அநேகரைவிட எங்களை
மேன்மையாக்கினான்"" என்று கூறினார்கள். ( அல்குர்ஆன்: 27: 15 )
பிறருக்கு நன்மை ஏற்பட்டதற்க்காக இறைவனைப் புகழ வேண்டும்.
عن أنس
بن مالك رضي الله عنه .
( أَنَّ غُلَامًا مِنَ اليَهُودِ كَانَ يَخدُمُ النَّبِيَّ
صَلَّى اللَّهُ عَلَيهِ وَسَلَّمَ فَمَرِضَ ، فَأَتَاهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ
عَلَيهِ وَسَلَّمَ يَعُودُهُ ، فَقَعَدَ عِندَ رَأسِهِ ، فَقَالَ : أََسلِم .
فَنَظَرَ إِلَى أَبِيهِ وَهُوَ عِندَ رَأسِهِ ، فَقَالَ لَه : أَطِع أَبَا
القَاسِمِ صَلَّى اللَّهُ عَلَيهِ وَسَلَّمَ . فَأَسلَمَ ، فَخَرَجَ النَّبِيُّ
صَلَّى اللَّهُ عَلَيهِ وَسَلَّمَ وَهُوَ يَقُولُ : الحَمدُ لِلَّهِ الذِي
أَنقَذَهُ مِنَ النَّارِ ) رواه البخار
அனஸ்(ரலி)
அறிவிக்கின்றார்கள்:- நபி(ஸல்) அவர்களுக்குப் பணி விடை செய்து கொண்டிருந்த ஒரு
யூதச் சிறுவன் திடீரென நோயுற்றான். எனவே, அவனை நோய் விசாரிக்க நபி
(ஸல்) அவர்கள் அவனிடம் வந்து, அவனுடைய தலை மாட்டில்
அமர்ந்து,
இஸ்லாதை ஏற்றுக் கொள்! என்றார்கள். உடனே அவன்
தன்னருகிலிருந்த தந்தையைப் பார்த்தான். அப்போது அவர், அபுல் காஸிம் (நபி(ஸல்) அவர்கள்) சொல்வதைக் கேள்! என்றார், அப்போது,
அந்த சிறுவன் இஸ்லாத்தை ஏற்றான். உடனே நபி(ஸல்) அவர்கள், இவனை நரகத்திலிருந்து பாதுகாத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் எனக் கூறியவாறு
அங்கிருந்து வெளியேறினார்கள். ( நூல்: புகாரி )
ஒரு
யூதச்சிறுவனுக்கு நேர்வழி கிடைத்ததற்க்காக நபி(ஸல்)அவர்கள் அல்லாஹ்வைப்
புகழ்ந்தார்கள்.
இதனடிப்படையில்
நம்முடைய சக முஸ்லிம் சகோதரர் ஒருவருக்கு ஒரு நன்மை ஏற்பட்டாலும் அந்த நன்மையை
ஏற்படுத்திய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என அல்லாஹ்வைப் புகழ வேண்டும்.
தும்மினால் அல்லாஹ்வைப் புகழ வேண்டும்....
وروى
أبو داود (5033) عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه عَنْ النَّبِيِّ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : ( إِذَا عَطَسَ أَحَدُكُمْ فَلْيَقُلْ :
الْحَمْدُ لِلَّهِ عَلَى كُلِّ حَالٍ ، وَلْيَقُلْ أَخُوهُ أَوْ صَاحِبُهُ :
يَرْحَمُكَ اللَّهُ ، وَيَقُولُ هُوَ : يَهْدِيكُمُ اللَّهُ وَيُصْلِحُ بَالَكُمْ
) . صححه الألباني في صحيح أبي داو
உங்களில் எவரேனும்
தும்மினால் 'அல்ஹம்து லில்லாஹி அலா குல்லி ஹால்' (எல்லா நிலைகளிலும்
இறைவனுக்கே புகழனைத்தும்) என்று கூறட்டும். இவ்வாறு கூறியதை
செவியேற்கக்கூடியவர்கள் 'யர்ஹமகல்லாஹ்'
(இறைவன் உனக்கு அருள் புரியட்டும்) என்று பதில் கூறட்டும்.
பிறகு தும்மியவர் 'யஹ்தீக்குமுல்லாஹு வயுஸ்லிஹு பாலக்கும'; (இறைவன் உங்களை
நேர்வழியில் நடத்துவானாக! உங்கள் செயல்களை சீராக்குவானாக! என பதில் அறிவிக்கட்டும் என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) (நூல்: அபூதாவூத்)
உணவு உண்ட பிறகு அல்லாஹ்வைப் புகழ வேண்டும்...
وعن أنس
بن مالك رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: (إن الله ليرضى عن
العبد أن يأكل الأكلة فيحمده عليها، أو يشرب الشربة فيحمده عليها) رواه مسلم.
அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முறை உணவு உண்ட பின்னர் அதற்காக அல்லாஹ்வைப்
போற்றிப் புகழ்கின்ற,
அல்லது ஒரு முறை பானம் அருந்திய பிறகு அதற்காக அல்லாஹ்வைப்
போற்றிப் புகழ்கின்ற அடியான் குறித்து அல்லாஹ் உவகை கொள்கிறான். இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ( முஸ்லிம் 5282)
நபி ஸல் அவர்கள் உணவு உண்ட பின்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில் அல்லாஹ்வைப்
புகழ்ந்து ஓதிய துஆக்கள்
الْحَمْدُ
لله الَّذِي يُطْعِمُ وَلَا يُطْعَمُ، مَنَّ عَلَيْنَا فَهَدَانَا وَأَطْعَمَنَا
وَسَقَانَا، وَكُلَّ بَلَاءٍ حَسَنٍ أَبْلَانَا، الْحَمْدُ لله غَيْرَ مُوَدَّعٍ
وَلَا مُكَافأ وَلَا مَكْفُورٍ وَلَا مُسْتَغْنًى عَنْهُ، الْحَمْدُ لله الَّذِي
أَطْعَمَ مِنَ الطَّعَامِ، وَسَقَى مِنَ الشَّرَابِ، وَكَسَا مِنَ الْعُرْيِ،
وَهَدَى مِنَ الضَّلَالَةِ، وَبَصَّرَ مِنَ الْعَمَى، وَفَضَّلَ عَلَى كَثِيرٍ
مِنْ خَلْقِهِ تَفْضِيلًا، الْحَمْدُ لله رَبِّ الْعَالَمِينَ"
٢.
"الْحَمْدُ لله كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ
غَيْرَ مَكْفِيٍّ وَلَا مُوَدَّعٍ وَلَا مُسْتَغْنًى عَنْهُ رَبَّنَا"[
٣.
"الْحَمْدُ لله الَّذِي كَفَانَا وَأَرْوَانَا
غَيْرَ مَكْفِيٍّ وَلَا مَكْفُورٍ"
٤.
"الْحَمْدُ لله الَّذِي أَطْعَمَنِي هَذَا
الطَّعَامَ وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلَا قُوَّةٍ"[
٥.
"الْحَمْدُ لله الَّذِي أَطْعَمَ وَسَقَى
وَسَوَّغَهُ وَجَعَلَ لَهُ مَخْرَجًا
٦.
"اللَّهُمَّ أَطْعَمْتَ، وَأَسْقَيْتَ،
وَأَغْنَيْتَ، وَأَقْنَيْتَ، وَهَدَيْتَ، وَأَحْيَيْتَ، فَلَكَ الْحَمْدُ عَلَى
مَا أَعْطَيْتَ"
٧.
"اللَّهُمَّ لَكَ الْحَمْدُ أَطْعَمْتَ وَسَقَيْتَ،
وَأَشْبَعْتَ وَأَرْوَيْتَ، فَلَكَ الْحَمْدُ غَيْرَ مَكْفُورٍ، وَلَا مُوَدَّعٍ،
وَلَا مُسْتَغْنًى عَنْكَ"
தண்ணீர் அருந்திய பின்னர் அல்லாஹ்வைப் புகழ வேண்டும்...
هذا
الحديث رواه ابن أبي الدنيا في "الشكر" (70)، والطبراني في "الدعاء
(899)، وأبو نعيم في
"الحلية" (8/ 137)، والبيهقي في "الشعب" (4162)
من طريق
جابر بن يَزِيد الْجُعْفِيّ عَنْ أَبِي جَعْفَرٍ مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ
الْحُسَيْنِ، قَالَ
كَانَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا شَرِبَ الْمَاءَ قَالَ
الْحَمْدُ لِلَّهِ الَّذِي سَقَانَا عَذْبًا فُرَاتًا
بِرَحْمَتِهِ، وَلَمْ يَجْعَلْهُ مِلْحًا أُجَاجًا بِذُنُوبِنَا
அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் தண்ணீர் அருந்திய பின் பின்வரும் துஆவை ஓதுவார்கள் என இமாம் நவவீ
ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகின்றார்கள்,
இறைவா! நீயே
புகழுக்குறியவன்,
உன்னுடைய தனிப்பெரும் கருணையால் தான் நீ எங்களுக்கு சுவையான, மதுரமான தண்ணீரை வழங்குகின்றாய்! எங்கள் பாவங்களை நீ மனதில்
கொண்டிருப்பாயேயானால் நீ இந்த நீரை உப்பு கரிக்கும் நீராகவும், கசப்பான நீராகவும் ஆக்கியிருப்பாய்” ( நூல்: அஹ்மத் )
رواه
ابن العماد الحنبلي في «شذرات الذهب» ومفاده أن الشيخ موسى روى عن والده الشيخ عبد
القادر الجيلاني أنه خرج في بعض سياحاته إلى البرية فمكث أيامًا لا يجد ماء حتى
اشتد به العطش، فأظلته سحابة ونزل عليه منها شىء يشبه الندى، فحاول الشيطان أن
يغويه فموه على عيني الشيخ فرأى في الأفق نورًا قويًا وصورة عظيمة، وناداه الشيطان
بقوله: يا عبد القادر أنا ربك وقد أحللت لك المحرمات، فقال الشيخ: أعوذ بالله من
الشيطان الرجيم، اخسأ يا لعين، فإذا بالنور قد صار ظلامًا والصورة دخانًا، ثم
خاطبه الشيطان قائلًا: يا عبد القادر نجوت مني بعلمك،
ஒரு முறை கௌதுல்
அஃழம் முஹ்யித்தீன்
(ரழி)
அவர்கள், தவதிலிருக்கும் போது
சரியான தாகமெடுத்தது அப்போது, திடீரென மழைபெய்து
மேலிருந்து தங்க தட்டில்,
வெள்ளிக் கூஜாவில் தண்ணீர் இறங்கியது. பின் அசரீரியாக , அப்துல் காதிரே! உம்மை நாம் மிகவும் மெச்சினோம், உம் தவத்தை நாம் ஏற்றுக்கொண்டோம்,
எனவே இன்று முதல்
உமக்கு தடுக்க (ஹராமாக்க)ப்பட்ட்தெல்லாம் ஹலாலாக்கி வைத்தோம் என்று சப்தம் வந்தது.
உடனே முஹ்யித்தீன்
(ரழி) அவர்கள்,
அடே இப்லீஸ் மல்ஊனே, அல்லாஹ் தஆலா அகிலத்தை
படைத்து எனது பாட்டனார் அவர்களை இறுதி நபியாக்கி வைத்து எது ஹலால் – எது ஹராம் என்று ஆக்கினானோ அது கியாமத் வரைக்கும் அப்படியேதான் என்று
உறுதியுடன் மொழிந்தார்கள்.
உடனே இப்லீஸ்
தோன்றி, எவ்வளவு நேர்த்தியாக நான் காரியங்களை நடத்தினாலும், அப்துல் காதிரே நீங்கள், உங்கள் இல்ம் எனும் அறிவு
தீட்சன்யத்தால் தப்பிவிட்டீர்கள் என்றான்.
உடனே முஹ்யித்தீன்
(ரழி) அவர்கள்,
அடே மல்ஊனே நான் எனது அறிவால் தப்பவில்லை அலீமாகிய
அறிவாளனாகிய அல்லாஹ்வினால் தான் தப்பினேன் என்று கூறினார்கள்.
முஹ்யித்தீன்
(ரழி) அவர்கள் இப்படி சொன்னபோது இப்லீஸ் முற்றிலுமாக அவர்களிடம் தோற்று விட்டான்.
அப்போது
முஹ்யித்தீன் (ரழி) அவர்கள் மனமுருகி சொன்னார்கள்…
اَلْحَمْدُ
لِلهِ حَمْدًا دَآئِمًا اَبَدًا ، وَالْحَمْدُ لِلهِ ثُمَّ الْحَمْدُ لِلهِ
اَلْحَمْدُ
لِلهِ رَبِّ الْعَا لَمِيْنَ عَلٰى ، مَا كَاَنَ يُلْهِمُنِيْ اَلْحَمْدُ لِلهِ
அல்லாஹ்வுக்கே
எல்லாப் புகழும்! ஹம்து எனும் புகழ் நித்தியமாக நிரந்தரமாக இலங்கி கொண்டிருக்கும்
காலமெல்லாம் எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே!மீண்டும் அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்!
இன்னும் அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும் !
அகிலமனைத்தையும்
படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும் என்று எனக்கு அறிவித்து
உதயமாக்கி தந்து புரிந்து கொள்ளவைத்ததற்கான புகழும் அல்லாஹ்வுக்கே ஆகும் என்று. (
நூல் ஷذத்ராத்தி த்ذதஹப் லிஇமாமி இப்னுல் அமாத் அல் ஹம்பலி )
அல்ஹம்துலில்லாஹ் சொல்வோம்!
அல்லாஹ்வின் அருளைப் பெறுவோம்!!
No comments:
Post a Comment