Friday, 7 March 2025

இருள் அகற்றும் இறைமறை – தராவீஹ் சிந்தனை – 8. நயவஞ்சகப் பண்புகளில் இருந்து பாதுகாப்புக் கோருவோம்!!!

 

இருள் அகற்றும் இறைமறை – தராவீஹ் சிந்தனை – 8.

நயவஞ்சகப் பண்புகளில் இருந்து பாதுகாப்புக் கோருவோம்!!!



ஒவ்வொரு முஸ்லிமும் நயவஞ்சகத்தின் அடையாளங்கள் தன்னில் ஏற்பட்டு விடாமல் காத்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை அல்குர்ஆனில் பல்வேறு அத்தியாயங்களில் ஏராளமான வசனங்கள் ஊடாக அல்லாஹ் ரப்புல் ஆலமீன் எச்சரிக்கை செய்கின்றான்.

இன்றைய தராவீஹ் தொழுகையில் ஓதப்பட்ட அத் தவ்பா அத்தியாயத்தில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் 

நயவஞ்சகர்களது முகத்திரையை பல இடங்களிலே கிழித்து அவர்களை தோலுரித்துக் காட்டுகின்றான்.

حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُطِيعٍ، حَدَّثَنَا هُشَيْمٌ عَنْ أَبِي بِشْرٍ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ قَالَ: قُلْتُ لِابْنِ عَبَّاسٍ: سُورَةُ التَّوْبَةِ، قَالَ: آلتَّوْبَةِ؟ قَالَ: بَلْ هِيَ الْفَاضِحَةُ، مَا زَالَتْ تَنْزِلُ: وَمِنْهُمْ، وَمِنْهُمْ، حَتَّى ظَنُّوا أَنْ لَا يَبْقَى مِنَّا أَحَدٌ إِلَّا ذُكِرَ فِيهَا، قَالَ: قُلْتُ: سُورَةُ الْأَنْفَالِ، قَالَ: تِلْكَ سُورَةُ بَدْرٍ، قَالَ: قُلْتُ: فَالْحَشْرُ؟ قَالَ: نَزَلَتْ فِي بَنِي النَّضِيرِ.

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “அத்தவ்பாஎனும் 9-வது அத்தியாயம் தொடர்பாகக் கேட்டேன். அவர்கள் தவ்பா அத்தியாயமா? அது நயவஞ்சகர்களை அம்பலப்படுத்தக்கூடிய அத்தியாயமாகும். அவர்களில் இத்தகையோர் உள்ளனர்; அவர்களில் இத்தகையோர் உள்ளனர் என (நயவஞ்சகர்களிலுள்ள எல்லாப் பிரிவினரையும் இனங்காட்டி) இவ்வத்தியாயம் இறங்கிக் கொண்டேயிருந்தது. எந்த அளவுக்கென்றால், தம்மில் ஒருவரைக்கூட விட்டுவைக்காமல் அனைவர் பற்றியும் அதில் குறிப்பிடப்பட்டுவிட்டது என நயவஞ்சகர்கள் எண்ணினார்கள்என்று கூறினார்கள்.

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் அல்அன்ஃபால்எனும் (8ஆவது) அத்தியாயம் குறித்துக் கேட்டேன். அவர்கள் அது பத்ருப்போர் (பற்றிப்பேசும்) அத்தியாயமாகும்என்றார்கள்.

நான் அல்ஹஷ்ர்எனும் (59ஆவது) அத்தியாயம் குறித்துக் கேட்டேன். அவர்கள், “அது பனூநளீர் (யூதக்) குலத்தார் குறித்து அருளப் பட்டதாகும்என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர் : ஸயீத் இப்னு ஜுபைர் (ரலி), ( நூல்:முஸ்லிம் )

நபித்தோழர்கள் நயவஞ்சகர்களின் பண்புகள் வந்து விடக்கூடாது என என்றும் பயப்படக்கூடியவர்களாக இருந்தனர்:

وقال ابن أبي مليكة التابعي الجليل: أدركت ثلاثين من أصحاب النبي صلى الله عليه وسلم كلهم يخاف النفاق على نفسه،

தாபிஈ இப்னு அபீ முலைக்கா (ரஹ்) அவர்கள் கூறும் போது: நான் நபித்தோழர்களில் முப்பது பேரை அடைந்து கொண்டேன் அவர்கள் அனைவரும் நயவஞ்சகத்தை பயந்தனர்என்கின்றார்.

 

முஸ்லிமிலே 2750 இலக்கத்தில் பதியப்பட்ட செய்தியிலே நபியவர்களிடம் வஹியை எழுதுபவராக இருந்த ஹன்லலா அல் உஸைதி (ரழி) அவர்கள் மற்றும் அபுபக்கர் (ரழி) ஆகியோர் தாம் முனாஃபிக் ஆகிவிட்டோமோஎன பயந்த சம்பவம் கூட வரலாற்றில் காண முடிகின்றது.

عن أبي ربعي حنظلة بن الربيع الأسيدي الكاتب- رضي الله عنه- أحد كتاب رسول الله صلى الله عليه وسلم قال: لقيني أبو بكر رضي الله عنه فقال: كيف أنت يا حنظلة؟ قلت: نافق حنظلة! قال: سبحان الله ما تقول؟! قلت: نكون عند رسول الله صلى الله عليه وسلم يُذَكِّرُنَا بالجنة والنار كأنا رَأْىَ عَيْنٍ فإذا خرجنا من عند رسول الله صلى الله عليه وسلم عَافَسْنَا الأزواج والأولاد وَالضَّيْعَاتِ نسينا كثيرا، قال أبو بكر رضي الله عنه : فوالله إنا لنلقى مثل هذا، فانطلقت أنا وأبو بكر حتى دخلنا على رسول الله صلى الله عليه وسلم . فقلت: نافق حنظلة يا رسول الله! فقال رسول الله صلى الله عليه وسلم : «وما ذاك؟» قلت: يا رسول الله، نكون عندك تذكرنا بالنار والجنة كأنا رأي العين فإذا خرجنا من عندك عافسنا الأزواج والأولاد والضيعات نسينًا كثيرًا. فقال رسول الله صلى الله عليه وسلم : «والذي نفسي بيده، لو تدومون على ما تكونون عندي، وفي الذِّكْر، لصافحتكم الملائكة على فرشكم وفي طُرُقِكُمْ، لكن يا حنظلة ساعة وساعة» ثلاث مرات.   [صحيح] - [رواه مسلم]

நபி (ஸல்) அவரகளின் எழுத்தாளர்களில் ஒருவரான அபூரிப்ஈ என்ற ஹன்ளலா இப்னு ரபீஉ அல் உஸைதி (ரழி) அறிவிக்கிறார்கள். ஒரு தடவை என்னை அபூபக்கர் (ரழி) அவர்கள் சந்தித்து "ஹன்ளலா எப்படி இருக்கிறீர்கள்?" என்று கேட்டார்கள் அதற்கு "ஹன்ளலா முனாபிக் ஆகிவிட்டான் என்று நான் கூறினேன். "ஸுப்ஹானல்லாஹ் என்ன கூறுகிறீர்" என்று கேட்டார்கள். அதற்கு நான் "நபி (ஸல்) அவர்களிடம் நாம் இருக்கும் போது சொர்கத்தையும், நரகத்தையும் நாம் நேரில் பார்ப்பது போலவே நினைவு கூர்கிறோம். நபி (ஸல்) அவர்களிடமிருந்து நாம் வெளியேறிவந்துவிட்டால் மனைவியரை,குழந்தைகளை கவனிப்பதிலும் வாழ்க்கைத் தேவைகளுக்காக உழைப்பதிலும் மூழ்கிவிடுகிறோம். இதனால் அதிகமானதை மறந்து விடுகிறோம்." என்று கூறினேன்.

"அல்லாஹ்வின் மீது சத்தியமாக நிச்சயமாக இது போன்றே நானும் உணர்கிறேன்" என்று அபூபக்கர் (ரழி) கூறினார்கள். உடனே நானும் அபூபக்கர் அவர்களும் நபி (ஸல்) அவர்களிடம் வந்தோம். "இறை தூதர் அவர்களே!ஹன்ளலா நயவஞ்சகன் ஆகிவிட்டார்." என்று கூறினேன். "என்ன கூறுகிறீர்?" என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். "இறைதூதர் அவர்களே! உங்களுடன் இருக்கும் போது கண்ணால் பார்ப்பது போல் சொர்க்கத்தையும்,நரகத்தையும் நினைவு கூர்கிறோம். உங்களை விட்டும் நாங்கள் வெளியேறி விட்டால் மனைவியர், குழந்தைகள், வாழ்க்கைத் தேவை என மூழ்கி அதிகமாக மறந்துவிடுகிறோம்." என்று கூறினேன்.

"எனது ஆத்மாவை தன் கைவசம் வைத்திருப்பவன் மீது சத்தியமாக என்னிடம் நீங்கள் இருக்கும் நிலையிலேயே இறைவனை நினைவு கூர்வதிலேயே தொடரந்தும் இருந்தால் உங்கள் படுக்கையிலும் உங்கள் வழிகளிலேயும் வானவர்கள் கைகொடுத்து மகிழ்வார்கள்.எனினும் ஹன்ளலாவே வணக்த்திற்கு என ஒரு நேரம் உண்டு, வாழ்க்கைக்கு உழைப்பதற்கு என்று ஒரு நேரம் உண்டு." என்று மூன்று முறை கூறினார்கள். ( நூல்: முஸ்லிம் )

நபியவர்கள் கூட முனாஃபிக் தனத்தை விட்டு அல்லாஹ்விடம் பிராத்தித்தமை குறிப்படத்தக்கது.

كان النبى صل الله عليه يدعوا المولى عز وجل باثناء دعائه:-  اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الشِّقَاقِ، وَالنِّفَاقِ، وَسُوءِ الْأَخْلَاقِ.

"அல்லாஹ்வே! உள்ளம் பிரிந்து போவதில் இருந்தும், உள்ளத்தில் நயவஞ்சகம் குடிபுகுவதில் இருந்தும், கெட்ட பண்புகள் என்னிடம் வெளிப்படுவதில் இருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்!" என்று நபி ஸல் அவர்கள் பிரார்த்திப்பவர்களாக இருந்தார்கள்.

நிஃபாக் என்றால் என்ன?

கடந்து செல்வது’ – ‘நிஃபாக்என்பதன் மூலச் சொல்லான நஃபக்என்பதன் உண்மையான பொருள் இதுதான்!  நாளடைவில் இதிலிருந்து கிளம்பிய எல்லா கிளைச் சொற்களிலும் வேர்ச்சொல்லின் இந்த மூல அர்த்தம் தொக்கியே நிற்கின்றது.  உதாரணமாக சுரங்கம்.  அதன் ஒரு வழியாக உள்ளே சென்று மறுவழியாக வெளியே வந்து விடலாம்.  சுரங்கத்தை அரபியில் நிஃபக்என்று அழைப்பர்.  உள்ளே செல்ல ஒன்றும், வெளியேற ஒன்றுமாய் இருதுளைகளைக் கொண்ட எலி வளைக்கோ, ‘நாஃபுக்காஎன்று பெயர்.  பைஜாமாவின் நாடாத்துளைக்கும் நைஃபக்என்பது தான் பெயர். இவையனைத்திலும் நுழைந்து கடந்து செல்லும், கடந்து போய் வெளியேறும் பொருள் உள்ளதல்லவா?  இதே கூட்டத்தைச் சேர்ந்தது தான் நிஃபாக்என்ற சொல்லும்!  அதன் பொருளாவது :

ஷரீஅத்தின் ஒரு வாயில் வழியாக உள்ளே நுழைந்து இன்னொரு வாயில் வழியாக வெளியேறி விடுவது!” (முஃப்ரதாத்து இமாம் ராகிப்)

நிஃபாக் என்ற அரபுப் பதத்திற்கு மொழிக் கருத்தை சொல்ல முனைந்த இமாம் இப்னு ரஜப் அவர்கள் (ஏமாற்றுதல் மற்றும் சதிசெய்தல் மேலும் நன்மைகளை வெளிக்காட்டி நன்மைக்கு எதிரானதை மறைத்தல்) என்றார்.” ( நூல்: ஜாமிஉல் உலூம் )

எனவே நிபாக் என்ற நயவஞ்சகத்திற்கு இவ்வாறு வரைவிலக்கணம் வழங்கலாம்.” (நம்பிக்கையை (ஈமான்) நாவின் மூலமாக வெளிப்படுத்துதல், நிராகரிப்பை (குப்ர்) உள்ளத்தில் மறைத்தல்) ( நூல்: நள்ரத்துன் நஈம் )

சூரத்துல் பகராவின் ஆரம்பத்திலே மனிதர்களின் மூன்று முக்கிய பிரிவினரான முஸ்லிம்கள், காபிர்கள், முனாஃபிக்குகள் பற்றி குறிப்பிடும் போது முஸ்லிம்களைப் பற்றி 4 வசனங்களிலும், காபிர்களைப் பற்றி 2 வசனங்களிலும், முனாஃபிக்குகளைப் பற்றி 13 வசனங்களிலும் சுட்டிக் காட்டுகின்றான்.

முனாஃபிக்குகள் எந்த அளவு ஆபத்தானவர்கள்; ஏன் காபிர்களை விடவும் இஸ்லாத்திற்கும் முஸ்லீம்களுக்கும் எதிரானவர்கள் என்பது குறித்தும்  அல்லாஹ் எச்சரிக்கை செய்கின்றான்.

ثلاثون علامة للمنافقين.. ذكرت في 11 سورة من سور القرآن الكريم

ذكر الله سبحانه وتعالى كلمة (النفاق) ومشتقاتها سبعا وثلاثين مرة، وفي عدة سور مختلفة هي: سورة ال عمران، وسورة الحشر، وسورة التوبة، وسورة الاحزاب، وسورة الفتح، وسورة الحديد، وسورة الانفال، وسورة المنافقون، وسورة النساء، وسورة العنكبوت، وسورة التحريم،

அந்த வகையில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் 11 சூராவில் நயவஞ்சகர்களின் முப்பது பண்புகளை அடையாளப்படுந்துவதோடு ஏழு வாசக அமைப்பில் 37 இடங்களில் நயவஞ்சகர்களைக் குறித்து கூறுகின்றான்.

முத்தாய்ப்பாக "அல் முனாஃபிக்கூன் - நயவஞ்சகர்கள்" எனும் பெயரில் ஒரு சூராவையே இறக்கி அவர்களின் கொடுங் குணத்தை அம்பலப்படுத்துகின்றான்.

النفاق:ينقسم النفاق عند اهل السنة والجماعة الى قسمين: القسم الاول: نفاق اعتقادي يخرج من الملة، وصاحبه في الدرك الاسفل من النار، وهو الذي يكذب في الباطن برسالة الرسول عليه الصلاة والسلام ولو اظهرها في الظاهر، او يكذب بالكتب او بالملائكة أو بأي اصل من اصول أهل السنة.

 القسم الثاني:نفاق عملي،

நிஃபாக் எனும் நயவஞ்சகம் இரண்டு வகைகளாகும் என அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் அறிஞர்கள் வகைப்படுத்துகின்றனர்.

1.   கொள்கை ரீதியான நயவஞ்சகம்.

இதை தெளிவாக வெளிப்படுத்தினாலும் மறைத்து வைத்திருந்தாலும் இறுதி முடிவு நரகம் தான். (கொள்கை வடிவிலானது என்றால் ஈமான், நபி ஸல் அவர்கள், குர்ஆன் மற்றும் வேதங்கள், வானவர்கள் குறித்து தவறான அபிப்ராயம் கொள்வது அல்லது மறுப்பது போன்றதாகும்)

2. செயல் வடிவிலான நயவஞ்சகம்.

நயவஞ்சகத்தை ஏற்படுத்துகிற பண்புகளாக அல்குர்ஆனும் நபி ஸல் அவர்களும் எச்சரிக்கை செய்யும் பண்புகள், மேலும், அல்லாஹ்வும் நபி ஸல் அவர்களும் இவைகள் எல்லாம் நயவஞ்சகர்களின் பண்புகள் என்று அடையாளப் படுத்திய பண்புகள். இவைகளில் ஒன்றோ சிலதோ அனைத்துமோ ஒருவரிடம் இடம் பெற்றிருக்குமானால் அவர் தவ்பாச் செய்வதோடு தொடர்ந்து அப்பண்புகளில் நீடிக்காமல் இருக்க வேண்டும். தொடர்ந்து நீடித்தால் அதுவும் அவரை நரகில் கொண்டு போய் சேர்த்து விடும்.

நபி ஸல் அவர்கள் நயவஞ்சகர்களின் பண்புகள் குறித்து நேரடியாக மற்றும் மறைமுகமாக கூறியவைகள் மட்டுமே சுமார் 70 க்கும் நெருக்கமான பண்புகள் இருக்கிறது என்று அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் அறிஞர்கள் நம்மை பயமுறுத்துகின்றனர்.

நயவஞ்சகத் தன்மையுடையவர்களை எந்தளவு கடுமையாக அவனுடைய வேதத்தில் அல்லாஹ் எச்சரிக்கை செய்ய முடியுமோ அவ்வளவு எச்சரிக்கை செய்திருக்கின்றான்.

உச்ச பட்சமாக அல்லாஹு தஆலா முனாஃபிக்குகளைப் பற்றி இப்படி சொல்கிறான் :

إِنَّ الْمُنَافِقِينَ فِي الدَّرْكِ الْأَسْفَلِ مِنَ النَّارِ وَلَنْ تَجِدَ لَهُمْ نَصِيرًا

நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் நரகத்தின் மிகவும் கீழான அடித் தளத்தில்தான் இருப்பார்கள்; அவர்களுக்கு உதவியாளராக எவரையும் நீர் காண மாட்டீர். ( அல்குர்ஆன் 4:145)

இந்த ஒரு இறைவசனம் நமக்கு போதுமாகும்.  நயவஞ்சகத்  தன்மையை விட்டு இறைநம்பிக்கையாளர்கள் ஏன் தங்களுடைய ஈமானை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்கு.

அவர்கள் அப்படி? நாம் எப்படி?..

وجاء عن عمر بن الخطاب -رضي الله عنه، وهو من هو في الإيمان والدين- أنه أتى حذيفة بن اليمان -رضي الله عنه- وقال: «أنشدك بالله هل سمَّاني لك رسول الله صلى الله عليه وسلم؟ -يعني في المنافقين-  قال: «لا، ولا أزكي بعدك أحدًا».

உமர் (ரலி) அவர்கள், ஹுதைஃபா (ரலி) அல்லாஹ்வை முன்னிறுத்தி கேட்கிறேன். உம்மிடம் நபி ஸல் அவர்கள் வழங்கிய நயவஞ்சகர்களின் பட்டியலில் என் பெயரையும் குறிப்பிட்டுள்ளார்களா? கேட்பார்கள்.

அதற்கு, ஹுதைஃபா (ரலி) அவர்கள் இல்லை என்று கூறி விட்டு, உமக்கு சொன்னது போன்று இனி யாரையும்  நான் ஒரு போதும் இது போன்று கூறிட மாட்டேன்" என்று கூறினார்கள்.

وجاء عن جبير بن نُفير وهو من علماء التابعين -رحمه الله تعالى- قال: أتيت أبا الدرداء وكان يصلي، فلما كان في آخر صلاته بعد التشهد وقبل أن يسلِّم سمعته يتعوذ بالله من النفاق ويُكثر من ذلك فقلت له: «وما لك يا أبا الدرداء أنت والنفاق!!» أي مكانتك عظيمة وأنت صحابي جليل، فقال -رضي الله عنه-: «دعنا عنك فوالله إن الرجل ليتقلب عن دينه في الساعة الواحدة فيُخلع منه إيمانه».

 

ஜுபைர் இப்னு நுஃபைர் (ரஹ்) தாபிஈ அறிஞர்களில் மிகச் சிறந்த ஒருவர். ஒரு நாள் அபுத்தர்தா (ரலி) அவர்களைக் காண வந்தார்கள். அப்போது அபுத்தர்தா ரலி அவர்கள் தொழுது கொண்டிருந்தார்கள். தொழுகையின் கடைசி அத்தஹிய்யாத் இருப்பில் நீண்ட நேரம் நயவஞ்சகத்தில் இருந்து பாதுகாப்புத் தேடி துஆ செய்து கொண்டிருந்தார்கள். அபுத்தர்தா ரலி தொழுது முடித்ததும் அபுத்தர்தா அவர்களே! நீங்கள் போய் நயவஞ்சகத்தனத்தில் இருந்து பாதுகாப்பு கேட்கின்றீர்கள்?!. நீங்கள் நபித்தோழர் ஆயிற்றே! நாங்கள் வாழும் காலத்தில் கண்ணியம் வாய்ந்த பெரிய மனிதர் ஆயிற்றே! என்றார்கள்.

அதற்கு அபுத்தர்தா ரலி அவர்கள் "என்ன நீர் இப்படி சாதாரணமாக சொல்லி விட்டீர்!? அல்லாஹ்வின் மீது ஆணையாக! ஒரு மனிதன் கன நேரத்தில் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு அவன் தீனை விட்டும் புரட்டப்பட்டு விடுவான். கன நேரத்தில் அவனை விட்டும் அவன் ஈமான் சென்று விடும்" என்று பதில் கூறினார்கள்.

وقيل له -رحمه الله تعالى- أتخاف النفاق؟ فقال رحمه الله: «وما يؤمنني وقد خافه عمر بن الخطاب رضي الله عنه».

ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்களிடம் ஒருவர் நீங்கள் நயவஞ்சகத் தன்மையை அதிகம் அஞ்சுகின்றீர்களே? என்று கேட்டார். அதற்கு ஹஸன் பஸரீ ரஹ் அவர்கள் " உமர் ரலி அவர்களே பயந்துள்ளார்கள்" நானெல்லாம் எம்மாத்திரம் என்று பதில் கூறினார்களாம்.

وجاء عن الحسن البصري -رحمه الله تعالى- أنه قيل له: إن ناسًا يقولون "لا نفاق"، فقال -رحمه الله تعالى-: «لأن أعلم أني بريء من النفاق أحبّ إلي من طلائع الأرض ذهبا».

இன்னொரு முறை ஒருவர் வந்து மக்களில் சிலர் தங்களுக்கு நயவஞ்சகம் இல்லை என்று கூறிக் கொள்கின்றார்களே? என்றார்.

எனக்கு நயவஞ்சகம் இல்லை என்று நான் அறிந்து கொள்வேனேயானால் இந்த பூமி முழுவதும் தங்கத்தால் பரத்தி வைத்திரும்பதை விட எனக்கு மிகவும் மேலானதாகும்" என்று கூறினார்களாம்.

وقال -رحمه الله تعالى-: «ما خافه -أي النفاق- إلا مؤمن ولا أمِنَه إلا منافق».

            முஃமின் தான் நிஃபாக்கை பயப்படுவார். இதை விட்டு ஒருவன் பயமற்று இருக்கிறான் என்றால் அவன் முனாஃபிக் ஆகத்தான் இருப்பான் என்று.

குர்ஆன் கூறும் நயவஞ்சகத்திற்கான தண்டனைகள்…

حدثنا عمرو بن خالد: حدثنا زهير بن معاوية: حدثنا أبو إسحاق قال: سمعت زيد بن أرقم قال: خرجنا مع النبي ﷺ في سفر أصاب الناس فيه شدة، فقال عبد الله بن أبي لأصحابه: لا تنفقوا على من عند رسول الله حتى ينفضوا من حوله. وقال: لئن رجعنا إلى المدينة ليخرجن الأعز منها الأذل، فأتيت النبي ﷺ فأخبرته، فأرسل إلى عبد الله بن أبي فسأله، فاجتهد يمينه ما فعل، قالوا: كذب زيد رسول الله ﷺ ، فوقع في نفسي مما قالوا شدة، حتى أنزل الله عز وجل تصديقي في: {إذا جاءك المنافقون}. فدعاهم النبي ﷺ ليستغفر لهم فلووا رؤوسهم. وقوله: {خشب مسندة}. قال: كانوا رجالاأجمل شيء

ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்திற்காகப் புறப்பட்டோம். அப்பயணத்தில் (உணவுப் பற்றாக்குறையால்) மக்களுக்குச் சிரமம் ஏற்பட்டது. அப்போது (நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் தம் நண்பர்களிடம், "அல்லாஹ்வின் தூதருடன் இருக்கும் இவர்களுக்கு நீங்கள் செலவு செய்யாதீர்கள். அவர்கள் அல்லாஹ்வின் தூதரிடமிருந்து விலகிச் சென்றுவிடுவார்கள்" என்றும், "நாம் மதீனாவுக்குத் திரும்பிச் சென்றால், (எம்முடைய இனத்தாரான) கண்ணியவான்கள் இழிந்தோ(ராகிய முஹாஜி)ர்களை அங்கிருந்து வெளியேற்றிவிடுவர்" என்றும் சொன்னான்.

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, அ(வர் சொன்ன)தை அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அப்துல்லாஹ் பின் உபையிடம் ஆளனுப்பினார்கள். (அவர் வந்தவுடன்) அவரிடம் (அது குறித்துக்) கேட்டார்கள். தாம் அப்படிச் செய்யவேயில்லை என்று அவன் சத்தியம் செய்து சாதித்தார்.

அவர், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஸைத் பொய் சொல்லிவிட்டார்" என்று (என்னைப் பற்றிக்) கூறினார். (அவருடன் சேர்ந்து) மக்களில் சிலரும் அப்படிச் சொன்னதால் என் உள்ளத்தில் கடுமை(யான வேதனை) ஏற்பட்டது. அப்போது என் வாய்மையைக் குறிக்கும் வகையில் "(நபியே!) இந்த நயவஞ்சகர்கள் உங்களிடம் வருகின்றபோது..." (63:1) என்று தொடங்கும் வசனத்தை அல்லாஹ் அருளினான்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த நயவஞ்சகர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோர அவர்களை அழைத்தார்கள். (அவர்கள் அதற்கு இணங்காமல்) தமது தலையைத் திருப்பிக் கொண்டார்கள்.

(மேற்கண்ட வசனத்தின் மூலத்திலுள்ள) "குஷுபும் முசன்னதா" (சாய்த்துவைக்கப்பட்ட மரக்கட்டை) என்பது, அவர்கள் மிகவும் அழகானவர்களாக (வாட்ட சாட்டமானவர்களாக) இருந்ததைக் குறிக்கிறது.

فقد روى البخارى " عن ابن عمر قال : لما توفى عبد الله بن أبى جاء ابنه عبد الله إلى رسول الله - صلى الله عليه وسلم - فسأله أن يعطيه قميصه ليكفن فيه أباه ، فأعطاه إياه ، ثم سأله أن يصلى عليه ، فقام رسول الله - صلى الله عليه وسلم - ليصى عليه ، فقام عمر ، فأخذ بثوب رسول الله - صلى الله عليه وسلم - وقال : يا رسول الله ، تصلى عليه ، وقد نهاك ربك أن تصلى عليه؟ فقال الرسول - صلى الله عليه وسلم - " وإنما خيرنى الله " فقال : ( استغفر لَهُمْ أَوْ لاَ تَسْتَغْفِرْ لَهُمْ إِن تَسْتَغْفِرْ لَهُمْ سَبْعِينَ مَرَّةً فَلَن يَغْفِرَ الله لَهُمْ ) وسأزيده على السبعين . قال : إنه منافق - قال : فصلى عليه رسول الله - صلى الله عليه وسلم - فأنزل الله - تعالى - قوله : ( وَلاَ تُصَلِّ على أَحَدٍ مِّنْهُم مَّاتَ أَبَداً . . . ) الآية

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் இறந்தபோது, அவருடைய புதல்வர் அப்துல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, தம் தந்தைக்குப் பிரேத ஆடை (கஃபன்) அணிவிப்பதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அங்கியைத் தருமாறு கோரினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவரிடம் தமது அங்கியைக் கொடுத்தார்கள். பிறகு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் தம் தந்தைக்கு இறுதித் தொழுகையை முன்னின்று நடத்தும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டார். அவருக்கு இறுதித் தொழுகை நடத்துவதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்தார்கள்.

அப்போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் எழுந்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடையைப் பிடித்துக்கொண்டு, "அல்லாஹ்வின் தூதரே! இவருக்கு(ப் பாவமன்னிப்புக் கோரி) பிரார்த்தனை செய்ய வேண்டாமென அல்லாஹ் உங்களுக்குத் தடை விதித்திருக்க, இவருக்கா தொழுவிக்கப்போகிறீர்கள்?" என்று கேட்டார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(பாவமன்னிப்புக் கோரவும் கோராமலிருக்கவும்) எனக்கு அல்லாஹ் உரிமையளித்துள்ளான். "(நபியே!) நீர் அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோருவீராக; அல்லது கோராமலிருப்பீராக. (இரண்டும் சமம்தான்.) அவர்களுக்காக நீர் எழுபது முறை பாவமன்னிப்புக் கோரினாலும் அவர்களை ஒருபோதும் அல்லாஹ் மன்னிக்கமாட்டான்" (9:80) என்றே அல்லாஹ் கூறுகின்றான். நான் எழுபது முறையைவிட அதிகமாக இவருக்காகப் பாவமன்னிப்புக் கோருவேன்" என்று சொன்னார்கள்.

உமர் (ரலி) அவர்கள், "இவன் நயவஞ்சகனாயிற்றே!" என்று சொன்னார்கள். இருந்தும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்கு (ஜனாஸாத்) தொழுகையை முன்னின்று நடத்தினார்கள். அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், "அவர்களில் இறந்துவிட்ட எவருக்காகவும் (நபியே!) நீர் தொழுவிக்க வேண்டாம். அவருடைய மண்ணறை அருகேயும் நிற்க வேண்டாம்" எனும் (9:84ஆவது) வசனத்தை அருளினான்.

فقد روى البخارى عن أبى سعيد الخدرى أن رجالا من المنافقين كانوا إذا خرج رسول الله صلى الله عليه وسلم إلى الغزو وتخلفوا عنه ، وفرحوا بمقعدهم خلاف رسول الله صلى الله عليه وسلم . فإذا قدم رسول الله صلى الله عليه وسلم من الغزو ، اعتذروا إليه وحلفوا وأحبو أن يحمدوا بما لم يفعلوا فنزت ، { لاَ تَحْسَبَنَّ الذين يَفْرَحُونَ } .

 

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் நயவஞ்சகர்களில் சிலர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அறப்போருக்குப் புறப்பட்டுச் செல்லும்போது, அவர்களுடன் செல்லாமல் ஊரிலேயே தங்கிவிடுவார்கள். (அவ்வாறு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் செல்லாமல் தங்கிவிட்டதைப் பற்றி அவர்கள் பூரிப்பும் அடைந்து கொள்வார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (போரிலிருந்து திரும்பி)வந்தால், அவர்களிடம் (போய்,தாம் கலந்துகொள்ளாமல் போனதற்குச்) சாக்குப்போக்குகளைக் கூறி (பொய்ச்) சத்தியம் செய்வார்கள். தாம் செய்யாத (நற்) செயல்களுக்காகத் தாம் புகழப்பட வேண்டுமென்றும் விரும்புவார்கள்.

அப்போதுதான், "தாம் செய்த (தீய)வை குறித்துப் பூரித்துக்கொண்டும், தாம் செய்யாதவற்றுக்காகப் பாராட்டப்பட வேண்டும் என விரும்பிக்கொண்டும் இருப்போர் வேதனையிலிருந்து தப்பித்தவர்கள் என்று ஒருபோதும் (நபியே!) நீர் எண்ண வேண்டாம்; வதைக்கும் வேதனை தான் அவர்களுக்கு உண்டு" (3:188) எனும் இறைவசனம் அருளப்பெற்றது. - இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவரையும் நயவஞ்சகத்தன்மையில் இருந்து பாதுகாத்து அருள்வானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

No comments:

Post a Comment