ரமழானின் இரண்டு கண்கள்!!
இறைநம்பிக்கையும், நன்மையை எதிர்பார்த்தலும்…
அல்லாஹ்வின்
மகத்தான கருணையால் ரமழான் மாதத்தை அடைந்து அதன் துவக்க நாட்களில் நோன்பு நோற்ற
நிலையில் அல்லாஹ்வின் மஸ்ஜிதிலே நாம் ஒன்று கூடி இருக்கின்றோம்.
அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் நம் அனைவரையும் நாளை மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸிலும் ஒன்று
சேர்ப்பானாக!
சந்தர்ப்ப
சூழ்நிலையால் பள்ளிக்கூடங்களிலும், கல்லூரிகளிலும்
பணியிடங்களிலும் ஜும்ஆவை நிறைவேற்ற முடியாமல் உள்ளத்தால் வாடிக் கொண்டிருக்கின்ற
நம் இளைய தலைமுறையினரை அல்லாஹ் மன்னித்து அருள் புரிவானாக!
ரமளானில் நாம்
நிறைவேற்றக்கூடிய அமல்கள் அல்லாஹ்விடம் ஏற்றுகொள்ளப்படவேண்டுமானால் ஈமானுட னும், நன்மையை எதிர்பார்த்தும் அந்த அமல்கள் நிறைவேற்றப்படவேண்டுமென்பதாக மார்க்கம்
நிபந்தனை விதித்துள்ளது
பொதுவாகவே
அமல்களைப் பற்றி அல்குர்ஆன் பேசும் அத்துனை இடங்களிலும் ஈமானோடு இணைத்துப்
பேசுவதோடு அதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் பேசுகின்றது.
சுமார்
எழுபத்தைந்து இடங்களில் ஈமான் அமல் ஸாலிஹ் அதற்கான ஜஸாஃ - கூலி குறித்து அல்லாஹ்
ரப்புல் ஆலமீன் மூன்றையும் இணைத்தே பேசுகின்றான்.
எனவே, ஒரு அமல் அல்லாஹ்வின் கவனத்தைப் பெறுவதும், அது ஏற்றுக்
கொள்ளப்படுவதற்கும் ஈமானும், நன்மையை எதிர் பார்த்தலும் பிரதான அம்சமாகும்.
அல்லாஹ்வின்
நம்பிக்கை இல்லாமல் வீட்டிலே எல்லோரும் நோன்பு வைக்கிறார்கள் நான் நோன்பு
வைக்கவில்லை என்றால் என்ன நினைப்பார்கள்? ஊரிலே எல்லோரும் நோன்பு
வைக்கிறார்கள் நான் நோன்பு வைக்கவில்லை என்றால் என்ன பேசுவார்கள்?
அவர் இரவிலே
தராவீஹ் தொழுகிறார்,
இவர் தஹஜ்ஜத் தொழுகிறார் நான் தொழ வில்லை என்றால் எப்படி?
இப்படியான
நிலையில் நமது நோன்பும் ரமழானின் இரவு வணக்கங்களும் இருக்குமானால் நம் அமல்கள்
கவலைக்குரியதே! நாளை மறுமையில் நம் நிலை பரிதாபத்திற்குரியதே!
ஆகவே, ரமழான் மாத்திரமல்ல எல்லா காலங்களிலும் நாம் செய்கிற நல் அமல்களிலே ஈமான்
நிறைந்து இருக்க வேண்டும். நன்மையை எதிர் பார்த்து அமல் செய்ய வேண்டும்.
நபிصلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: مَنْ قَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ رواه البخاري (37)، ومسلم (759).
‘நம்பிக்கை கொண்டு (நற் கூலியை) எதிர்பார்த்து ரமலான்
மாதத்தில் நின்று வணங்குகிறவரின் முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு
விடும்’ அறிவிப்பவர் அபூ ஹுரைரா(ரலி) ( நூல்: புகாரி )
عَنْ
أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
مَنْ صَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ
ذَنْبِهِ رواه البخاري (38)، ومسلم (760)
நம்பிக்கை
கொண்டும்,
நன்மையை எதிர்பார்த்தும் ரமலான் மாதம் நோன்பு நோற்பவரின்
முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்’ என்று அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ( நூல்: புகாரி )
விருப்பமில்லாமல், அலட்சியமாக
செய்யும் அமல்..
எந்தவொரு அமலையும்
எடுத்தோம் முடித்தோம் என்று அலட்சியமாகச் செய்யாமல் அதன்மூலம் நன்மைகளை நாடியவராக
செய்ய வேண்டும். இறைப் பொருத்தத்தை எதிர்ப்பார்த்தவராக இறையருளின் மீது
ஆசைப்பட்டவராக அனைத்து அமல்களையும் அமைத்துக்கொள்ள வேண்டும்.
உதாரணமாக
செல்வத்தை செலவழிப்பதைப்பற்றி அருள்மறையிலே அல்லாஹ் கூறும் போது, அவனுடையத் திருமுகத்திற்காகத் தரவேண்டுமென்று கூறுகிறான்.
وَمَا
تُنْفِقُوْا مِنْ خَيْرٍ فَلِاَنْفُسِكُمْؕ وَمَا تُنْفِقُوْنَ اِلَّا ابْتِغَآءَ
وَجْهِ اللّٰهِؕ وَمَا تُنْفِقُوْا مِنْ خَيْرٍ يُّوَفَّ اِلَيْكُمْ وَاَنْـتُمْ
لَا تُظْلَمُوْنَ
நல்லவற்றில் நீங்கள்
எதைச் செலவிட்டாலும் அல்லாஹ்வின் திருப்தியைப் பெறவே செலவிடுகிறீர்கள்.
நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் உங்களுக்கே அது முழுமையாக வழங்கப்படும்.
நீங்கள் அநீதி இழைக்கப்படமாட் டீர்கள். (அல்குர்ஆன்: 2:272)
தர்மம் மட்டுமல்ல
தொழுகை நோன்பு ஹஜ் உட்பட அனைத்துக் கடமைகளையும் விருப்பத்தோடு
செய்யவேண்டும். சும்மா தானே இருக்கின்றோம் தொழுவோம். நிறைய இருக்கின்றதல்லவா
தர்மம் செய்வோம். நல்லா தானே இருக்கோம் நோன்பு நோற்போம். ஏதோ கேட்டுவிட்டார்
என்பதற்காக உதவி செய்வோம் என்று அலட்சியமாக ஆர்வமின்றி செயல்படாமல் அல்லாஹ்வின்
அருள் மீது ஆசைப்பட்டவராக இக்காரியத்தை அவன் பொருந்திக் கொள்ள வேண்டும் என்று
செயல் பட வேண்டும். அப்போது தான் அந்த அமல்கள் அல்லாஹ்விடத்திலே
அங்கீகரிக்கப்படும்.
وَمَا مَنَعَهُمْ اَنْ تُقْبَلَ مِنْهُمْ نَفَقٰتُهُمْ اِلَّاۤ
اَنَّهُمْ كَفَرُوْا بِاللّٰهِ وَبِرَسُوْلِهٖ وَلَا يَاْتُوْنَ الصَّلٰوةَ اِلَّا
وَهُمْ كُسَالٰى وَلَا يُنْفِقُوْنَ اِلَّا وَهُمْ كٰرِهُوْنَ
அல்லாஹ்வையும்
அவனது தூதரையும் மறுத்ததும், சோம்பலாகவே தொழுது
வந்ததும்,
விருப்பமில்லாமல் (நல்வழியில்) செலவிட்டதுமே அவர்கள்
செலவிட்டதை அவர்களிடமிருந்து ஏற்கப்படுவதற்கு தடையாக இருக்கிறது. ( அல்குர்ஆன்: 9: 54 )
முகஸ்துதிக்காக செய்யப்படும் அமல்..
நமது அமல்களைப்
பற்றி மற்றவர்கள் பெருமையாக போற்றி பேச வேண்டுமென்றோ, நம்மைப் புகழ்ந்து வாழ்த்த வேண்டுமென்றோ அமல் செய்தால் அவற்றை அல்லாஹ் நன்மையை
விட்டும் அப்புறப்படுத்திவிடுவான்.
முகஸ்துதியோடு
செய்யப்படுகின்ற அமல்களை அல்லாஹ் அணு அளவு கூட அங்கீகரிக்கமாட்டான். .
يٰۤـاَيُّهَا
الَّذِيْنَ اٰمَنُوْا لَا تُبْطِلُوْا صَدَقٰتِكُمْ بِالْمَنِّ وَالْاَذٰىۙ
كَالَّذِىْ يُنْفِقُ مَالَهٗ رِئَآءَ النَّاسِ وَلَا يُؤْمِنُ بِاللّٰهِ
وَالْيَوْمِ الْاٰخِرِؕ
நம்பிக்கைக்
கொண்டோரே! அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பாது மக்களுக்குக் காட்டுவதற்காக தனது
செல்வத்தை செலவிட்டவனைப் போல உங்கள் தர்மங்களை சொல்லிக்காட்டியும் தொல்லை தந்தும்
பாழாக்கி விடாதீர்கள். (அல்குர்ஆன்: 2:264)
عَنْ
أَبِي هُرَيْرَةَ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
يَقُولُ: إِنَّ أَوَّلَ النَّاسِ يُقْضَى يَوْمَ الْقِيَامَةِ عَلَيْهِ،
رَجُلٌ اسْتُشْهِدَ، فَأُتِيَ بِهِ فَعَرَّفَهُ نِعَمَهُ فَعَرَفَهَا، قَالَ:
فَمَا عَمِلْتَ فِيهَا؟ قَالَ: قَاتَلْتُ فِيكَ حَتَّى اسْتُشْهِدْتُ. قَالَ:
كَذَبْتَ. وَلَكِنَّكَ قَاتَلْتَ لِأَنْ يُقَالَ: جَرِيءٌ، فَقَدْ قِيلَ، ثُمَّ
أُمِرَ بِهِ فَسُحِبَ عَلَى وَجْهِهِ حَتَّى أُلْقِيَ فِي النَّارِ. وَرَجُلٌ
تَعَلَّمَ الْعِلْمَ، وَعَلَّمَهُ وَقَرَأَ الْقُرْآنَ، فَأُتِيَ بِهِ فَعَرَّفَهُ
نِعَمَهُ فَعَرَفَهَا، قَالَ: فَمَا عَمِلْتَ فِيهَا؟ قَالَ: تَعَلَّمْتُ
الْعِلْمَ، وَعَلَّمْتُهُ وَقَرَأْتُ فِيكَ الْقُرْآنَ. قَالَ: كَذَبْتَ،
وَلَكِنَّكَ تَعَلَّمْتَ الْعِلْمَ لِيُقَالَ: عَالِمٌ، وَقَرَأْتَ الْقُرْآنَ
لِيُقَالَ: هُوَ قَارِئٌ، فَقَدْ قِيلَ، ثُمَّ أُمِرَ بِهِ فَسُحِبَ عَلَى
وَجْهِهِ حَتَّى أُلْقِيَ فِي النَّارِ. وَرَجُلٌ وَسَّعَ اللهُ عَلَيْهِ،
وَأَعْطَاهُ مِنْ أَصْنَافِ الْمَالِ كُلِّهِ، فَأُتِيَ بِهِ فَعَرَّفَهُ نِعَمَهُ
فَعَرَفَهَا، قَالَ: فَمَا عَمِلْتَ فِيهَا؟ قَالَ: مَا تَرَكْتُ مِنْ سَبِيلٍ
تُحِبُّ أَنْ يُنْفَقَ فِيهَا إِلَّا أَنْفَقْتُ فِيهَا لَكَ. قَالَ: كَذَبْتَ،
وَلَكِنَّكَ فَعَلْتَ لِيُقَالَ: هُوَ جَوَادٌ، فَقَدْ قِيلَ، ثُمَّ أُمِرَ بِهِ
فَسُحِبَ عَلَى وَجْهِهِ، ثُمَّ أُلْقِيَ فِي النَّارِ رواه مسلم
ஒரு முறை)
அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் மக்கள் (கூடி, அவை) கலைந்தபோது, சிரியாவாசியான நாத்தில் பின் கைஸ் என்பவர், “பெரியவரே!
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் செவியுற்ற ஹதீஸ் எதையேனும்
எங்களுக்குத் தெரிவியுங்கள்” என்று கேட்டார். அதற்கு
அபூஹுரைரா (ரலி) அவர்கள்,
“ஆம் (தெரிவிக்கிறேன்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
(பின்வருமாறு) கூறியதை நான் கேட்டுள்ளேன் என் றார்கள்: மறுமை நாளில் மக்களில்
முதல் முதலில் தீர்ப்பு வழங்கப்படுபவர் யாரெனில், இறைவழியில் உயிர்த் தியாகம் செய்தவரே ஆவார். அவர் இறைவனிடம்
கொண்டுவரப்படும்போது,
அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன்
எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்துகொள்வார். பிறகு, “அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல் பட்டாய்?” என்று இறைவன் கேட்பான். அவர், “(இறைவா!) உனக்காக நான்
அறப் போரில் ஈடுபட்டு என் உயிரையே தியாகம் செய்தேன்” என்று பதிலளிப்பார்.
இறைவன், “(இல்லை) நீ பொய்
சொல்கிறாய். (நீ எனக்காக உயிர்த் தியாகம் செய்யவில்லை.) மாறாக, “மாவீரன்’
என்று (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ போரிட்டாய்.
அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது. (உனது நோக்கம் நிறைவேறிவிட்டது)” என்று கூறுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்
பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.
பிறகு கல்வியைத்
தாமும் கற்று அதைப் பிறருக்கும் கற்பித்தவரும் குர்ஆனைக் கற்றுணர்ந்தவருமான
(மார்க்க அறிஞர்) ஒருவர் (இறைவனிடம்) கொண்டுவரப் படுவார். அவருக்குத் தான்
வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்து
கொள்வார். பிறகு “அந்த அருட் கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?” என்று இறைவன் கேட்பான். அவர், “(இறைவா!) கல்வியை நானும்
கற்று, பிறருக்கும் அதை நான் கற்பித்தேன். உனக்காகவே குர்ஆனை ஓதினேன்” என்று பதிலளிப்பார்.
அதற்கு இறைவன், “(இல்லை) நீ பொய் சொல்கிறாய். (எனக்காக நீ கல்வியைக் கற்கவு மில்லை; கற்பிக்கவுமில்லை.) “அறிஞர்’
என்று சொல் லப்பட வேண்டும் என்பதற்காகவே நீ கல்வி கற்றாய்; “குர்ஆன் அறிஞர்’
என (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ குர்ஆனை ஓதினாய்.
அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது (உனது நோக்கம் நிறைவேறிவிட்டது)” என்று கூறுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச்
செல்லப்பட்டு,
அவர் நரகத்தில் எறியப்படுவார்.
பிறகு இறைவன்
தாராளமான வாழ்க்கை வசதிகளும் அனைத்து விதமான செல்வங்களும் வழங்கியிருந்த பெரிய
செல்வர் ஒருவர் இறைவனிடம் கொண்டுவரப்படுவார்.
அவருக்குத் தான்
வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்துகொள்வார்.
பிறகு, “அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?” என்று இறைவன் கேட்பான். அதற்கு அவர், “நீ எந்தெந்த
வழிகளில் எல்லாம் பொருள் செலவழிக்கப்படுவதை விரும்புகிறாயோ, அந்த வழிகளில் எதையும் விட்டுவிடாமல் அனைத்திலும் நான் உனக்காக எனது பொருளைச்
செலவிட்டேன்”
என்று பதிலளிப்பார்.
அதற்கு இறைவன், “(இல்லை) நீ பொய்
சொல்கிறாய் “இவர் ஒரு புரவலர்’
என (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ இவ்வாறு (செலவு)
செய்தாய். (உன் எண்ணப்படி) அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது. (உனது எண்ணம்
நிறைவேறிவிட்டது)”
என்று கூறிவிடுவான். பிறகு பிறகு இறைவனின் கட்டளைப்படி
முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில்
எறியப்படுவார்.
அறிவிப்பவர் : சுலைமான் பின் யஸார், ( நூல் : முஸ்லிம் )
நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்: நம் இறைவன் (காட்சியüப்பதற்காகத்) திரையை
அகற்றித் தன் காலை வெüப்படுத்தும் அந்த (மறுமை) நாüல், இறைநம்பிக்கையுள்ள ஒவ்வோர் ஆணும், இறைநம்பிக்கையுள்ள
ஒவ்வொரு பெண்ணும் அவனுக்கு முன்னால் சிரவணக்கம் (சஜ்தா) செய்வார்கள்.
முகஸ்துதிக்காகவும்,
மக்களின் பாராட்டைப் பெறுவதற்காகவும் இவ்வுலகில் (தொழுது)
சஜ்தா செய்து வந்தவர்கள் மட்டுமே எஞ்சியிருப்பர். அப்போது அவர்கள் சஜ்தா செய்ய
முற்படுவார்கள். (ஆனால்,)
அவர்களது முதுகு (குனிய முடியாதவாறு) ஒரே கட்டையைப் போல்
மாறிவிடும்.
அறிவிப்பவர் : அபூசயீத் (ரலி), ( நூல் : புகாரி )
இப்படிப்பட்ட அமல் வேண்டவே வேண்டாம்.....
عن أبي
سعيد رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ((إن من ضئضئ هذا - أو
في عقب هذا - قوم يقرؤون القرآن لا يجاوز حناجرهم، يمرقون من الدين مروق السهم من
الرمية، يقتلون أهل الإسلام ويدعون أهل الأوثان، لئن أنا أدركتهم؛ لأقتلنهم قتل
عاد))
وفي
رواية: ((يحقر أحدكم صلاته مع صلاتهم، وصيامه مع صيامهم، يقرؤون القرآن لا يجاوز
تراقيهم، يمرقون من الدين كما يمرق السهم من الرمية، ينظر إلى نصله فلا يوجد فيه
شيء، ثم ينظر إلى رصافه فما يوجد فيه شيء، ثم ينظر إلى نضيه -وهو قدحه- فلا يوجد
فيه شيء، ثم ينظر إلى قذذه فلا يوجد فيه شيء، قد سبق الفرث والدم، آيتهم رجل
அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களிடையே ஒரு கூட்டத்தினர் கிளம்புவார்கள். அவர்களது
தொழுகையுடன் உங்களுடைய தொழுகையையும், அவர்களது நோன்புடன்
உங்களுடைய நோன்பையும்,
அவர்களின் நற்செயல்களுடன் உங்கüன் நற்செயல்களையும் ஒப்பிட்டுப் பார்த்து உங்களுடைய தொழுகை, நோன்பு மற்றும் நற்செயல்களை அற்பமானவையாகக் கருதுவீர்கள். (அந்த அளவிற்கு
அவர்களது வழிபாடு கலைகட்டியிருக்கும்.) மேலும், அவர்கள் குர்ஆனை
ஓதுவார்கள். ஆனால்,
அது அவர்கüன் தொண்டைக் குழிகளைத் தாண்டிச்
செல்லாது. வேட்டைப் பிராணியை விட்டு (அதன் உடலைத் துளைக்கின்ற) அம்பு (உடலி ன்
மறுபுறம்) வெüப்பட்டு சென்று விடுவதைப் போல மார்க்கத் திலிருந்து அவர்கள்
வெயேறிவிடுவார்கள்.
(அந்தப் பிராணியின் உடலைத்
துளைத்து வெளிவந்ததற்கான அடையாளம் ஏதுமிருக்கிறதா என்று) அம்பின் முனையைப்
பார்ப்பார். அதில் (அடையாளம்) ஏதும் காணமாட்டார். பிறகு அம்பின் (அடிப்பாகக்)
குச்சியைப் பார்ப்பார். அதிலும் (அடையாளம்) ஏதும் காணமாட்டார். பிறகு, அம்பின் இறகைப் பார்ப்பார். அதிலும் (அடையாளம்) ஏதும் காணமாட்டார். அம்பி(ன்
முனையி)ல் நாணைப் பொருத்தும் இடம் தொடர்பாகவும் (அது வேட்டைப் பிராணியைத் தைத்ததா)
என்று சந்தேகம் கொள்வார். (அந்த அளவிற்கு அம்பில் எந்தத் சுவடும் இராது.)
அறிவிப்பவர் : அபூ சயீத் அல்குத்ரீ (ரலி),
நூல் : புகாரி (5058)
அமலில் இக்லாஸ் இருக்க வேண்டும்..
وَمَاۤ
اُمِرُوْۤا اِلَّا لِيَعْبُدُوا اللّٰهَ مُخْلِصِيْنَ لَـهُ الدِّيْنَ حُنَفَآءَ
وَيُقِيْمُوا الصَّلٰوةَ وَيُؤْتُوا الزَّكٰوةَ وَذٰلِكَ دِيْنُ الْقَيِّمَةِ
வணக்கத்தை
அல்லாஹ்விற்கே கலப்பற்றதாக்கி வணங்குமாறும் உறுதியாக நிற்குமாறும், தொழுகையை நிலைநாட்டுமாறும், ஸகாத்தை கொடுக்குமாறும்
தவிர அவர்களுக்கு வேறுகட்டளை பிறப்பிக்கப்படவில்லை. இதுவே நேரான மார்க்கம்.
தீமைகள் கலந்த அமல்...
وَلَا
تَسْتَوِى الْحَسَنَةُ وَ لَا السَّيِّئَةُ ؕ اِدْفَعْ بِالَّتِىْ هِىَ اَحْسَنُ
فَاِذَا الَّذِىْ بَيْنَكَ وَبَيْنَهٗ عَدَاوَةٌ كَاَنَّهٗ وَلِىٌّ حَمِيْمٌ
நன்மையும்
தீமையும் சமமாகாது. நல்லதைக் கொண்டு (பகைமையைத்) தடுப்பீராக. எவருக்கும் உமக்கும்
பகை இருக்கிறதோ அவர் அப்போதே உற்ற நண்பராகிவிடுவார். ( அல்குர்ஆன்: 41: 34 )
ஹராமான
செல்வத்தில் தர்மம் செய்வது, வட்டிப் பணத்திலே வாரி
வாரி வழங்குவது பெரும்பாவங்கள் செய்து கொண்டு ஊரே மெச்சுமளவிற்கு நற்செயல் செய்வது
போன்று நடிப்பது இப்படி தடுக்கப்பட்ட காரியங்களை செய்து கொண்டே
நிறைவேற்றப்படுகின்ற அனைத்து நற்காரியங்களும் நன்மைகளைப் பெற்றுத் தருவதற்கு
தகுதியற்றவைகளாகும்.
لَا
تُقْبَلُ صَلَاةٌ بِغَيْرِ طُهُورٍ وَلَا صَدَقَةٌ مِنْ غُلُولٍ
இப்னு உமர் (ரலி)
அவர்கள்,
அங்கத் தூய்மை செய்யாமல் எந்தத் தொழுகையும் ஏற்கப்படாது.
மோசடி செய்த பொருளால் செய்யப்படும் எந்த தான தர்மமும் ஏற்கப்படாது என்று
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதை நான் கேட்டிருக்கிறேன் என்று
கூறினார்கள். ( நூல்: முஸ்லிம் )
ஈமானுடன் செய்யப்படும் அமலுக்கு அல்லாஹ்விடம் மகத்தான
வெகுமதி உண்டு.
عن أنس
بن مالك رضي الله عنه قال : ( كان رجل من أصحاب النبي صلى الله عليه وسلم من
الأنصار يكنى ( أبا معلق ) ، وكان تاجراً يتجر بماله ولغيره يضرب به في الآفاق ،
وكان ناسكا ورعا ، فخرج مرة فلقيه لص مقنع في السلاح ، فقال له : ضع ما معك فإني
قاتلك ، قال : ما تريد إلى دمي ! شأنك بالمال ، فقال : أما المال فلي ، ولست أريد
إلا دمك ، قال : أمَّا إذا أبيت فذرني أصلي أربع ركعات ؟ قال : صلِّ ما بدا لك ،
قال : فتوضأ ثم صلَّى أربع ركعات ، فكان من دعائه في آخر سجدة أن قال : ( يا ودود ! يا ذا
العرش المجيد ! يا فعَّال لما يريد ! أسألك بعزك الذي لا يرام ، وملكك الذي لا
يضام ، وبنورك الذي ملأ أركان عرشك ، أن تكفيني شرَّ هذا اللص ، يا مغيث أغثني ! ثلاث
مرار ) قال : دعا بها ثلاث مرات ، فإذا هو بفارس قد أقبل بيده حربة واضعها بين
أذني فرسه ، فلما بصر به اللص أقبل نحوه فطعنه فقتله ، ثم أقبل إليه فقال : قم ،
قال : من أنت بأبي أنت وأمي فقد أغاثني الله بك اليوم ؟ قال : أنا ملَكٌ من أهل
السماء الرابعة ، دعوت بدعائك الأول فسمعت لأبواب السماء قعقعة ، ثم دعوت بدعائك
الثاني فسمعت لأهل السماء ضجة ، ثم دعوت بدعائك الثالث فقيل لي : دعاء مكروب ،
فسألت الله تعالى أن يوليني قتله .
قال أنس رضي الله عنه : فاعلم أنه من توضأ وصلى أربع
ركعات ودعا بهذا الدعاء استجيب له مكروباً كان أو غير مكروب ) .
أخرجه ابنُ أبي الدنيا في " مجابي الدعوة " ( 64 ) و" الهواتف " ( 24 ) ، ومن طريقهِ أخرجه اللالكائي في "
شرح أصولِ الاعتقاد "
( 5 / 166 ) وبوَّب عليه
" سياق ما روي من كراماتِ أبي معلق " ،
وأخرجه " أبو موسى المديني " – كما ذكر ذلك الحافظ ابن حجر في "
الإصابة " ( 7 / 379 ) في ترجمة
أبي معلق
அனஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: “அபீ முஅல்லகுல் அன்ஸாரி என்கிற நபித்தோழர் ஒருவர் இருந்தார். மிகவும் பேணுதலும், வணக்க வழிபாட்டில் பற்றுதலும் நிறைந்து காணப்பட்டார்.
பெரும்
வியாபாரியாக திகழ்ந்த அவர் அவ்வப்போது வியாபார விஷயமாக வெளிநாடுகளுக்கும், வெளியூர்களுக்கும் செல்வார்
அப்படி ஒரு முறை
வெளியூர் சென்று திரும்பி இருந்த போது அவரச் சந்தித்து உரையாடிக் கொண்டிருந்த போது
ஆச்சர்யமான நிகழ்வொன்றைக் கூறினார்.
வியாபாரத்தை முடித்துக் கொண்டு ஊர் திரும்பிக்
கொண்டிருக்கும் போது ஓரிடத்தில் கொள்ளையன் ஒருவன் இடைமறித்து பொருளையும், பணத்தையும் புடுங்கிக் கொண்டு, அபீ முஅல்லக்கை கொலை செய்ய வாளை உருவினான்
பணத்தையும், பொருளையும் தான் எடுத்துக் கொண்டாயே என்னை ஏன் கொல்லப்
போகின்றாய்? என்று அந்த அன்ஸாரித் தோழர் கேட்க, கொள்ளையன் என்னுடைய நடைமுறை இது தான் என்று கூறினான்.
அப்படியென்றால்
எனக்கு நான்கு ரக்அத் தொழ சிறிது நேரம் அவகாசம் கொடு என்றார் அன்ஸாரித்தோழர். சாகப்போகிற உமக்கு தொழத்தானே அனுமதி வேண்டும்? தொழுது கொள்! என்றான் கொள்ளையன்.
ஒழுச் செய்து தொழ
ஆரம்பித்த அவர், தொழுகையின் நான்காவது ரக்அத்தின் கடைசி ஸஜ்தாவில்
அல்லாஹ்விடம் மனமுருகி பின்வருமாறு இறைஞ்சினார்.
அல்லாஹ்வே! பேரன்பு கொண்ட பெரும்
கருணையாளனே! கீர்த்தி மிக்க அர்ஷின் அதிபதியே! நாடியதை நாடியவாறு செயல்படுத்தும் ஆற்றல் கொண்டவனே
களங்கப்படுத்தப்படாத உன் கண்ணியத்தை கொண்டு உன்னிடம்
கேட்கின்றேன்! பங்கு கேட்கப்பட முடியாத உன் ஆட்சியதிகாரத்தைக் கொண்டு
உன்னிடம் கேட்கின்றேன்! அரியணை முழுவதும் நிரம்பி வழிந்து கொண்டிருக்கும் ஒளியைக்
கொண்டு உன்னிடம் கேட்கின்றேன்!
இந்த கொள்ளையனின்
தீங்கிலிருந்து என்னை காத்தருள்! அபயம் அளிப்பவனே! எனக்கு அபயம் அளிப்பாயாக! அபயம் அளிப்பவனே எனக்கு அபயம் அளிப்பாயாக! அபயம் அளிப்பவனே எனக்கு அபயம் அளிப்பாயாக! என்று கேட்டு விட்டு தொழுகையை முடித்து பார்த்தால் பிரம்மாண்டமான ஒருவர்
கையில் பெரிய ஆயுதத்துடன் நின்று கொண்டிருக்கின்றார்.
கொள்ளையன் கீழே
பிணமாக வீழ்ந்து கிடக்கின்றான். அங்கே நின்றிருந்தவரை
நோக்கி “என் தாயும் தந்தையும்
உமக்கு அர்ப்பணமாகட்டும்! நீர் யார்? எங்கிருந்து
வந்திருக்கின்றீர்? என்று கேட்டாராம்.
அதற்கவர், நான் நான்காம் வானத்தில் இருக்கும் மலக் வானவர் ஆவேன். உம்மை பாதுகாக்குமாறு அல்லாஹ் எனக்கு கட்டளையிட்டான்” என்று கூறிவிட்டு, உம்முடைய முதல் வார்த்தையான யாவதூத் – பேரன்பு கொண்ட பெரும் கருணையாளனே எனும் வார்த்தையை கேட்கும்
போது முதலாவது வானம் குலுங்கியது. இரண்டாவது வார்த்தையான
கீர்த்திமிக்க அர்ஷின் அதிபதியே என்று நீர் அல்லாஹ்வை அழைத்த போது இரண்டாவது வானம்
நடுங்கியது, மூன்றாவது வார்த்தையான நாடியதை நாடியவாறு செயல்படுத்தும்
ஆற்றல் கொண்டவனே என்று அல்லாஹ்வை நீர் அழைத்த போது, அல்லாஹ் என்னைக் கூப்பிட்டு “என் அடியான் ஏதோ நெருக்கடியில்
இருக்கின்றான். விரைவாகச் சென்று என் அடியானுக்கு உதவுவீராக!” என்றான்.
உமக்கு
உதவுவதற்காகவே நான்காம் வானத்தில் இருந்து அல்லாஹ் என்னை அனுப்பி வைத்தான் என்று
சொல்லிவிட்டு அவர் சென்று விட்டார்” என்று என்னிடம் அன்ஸாரித்தோழர் கூறினார்.
இந்த நிகழ்வை கூறிய பின்னர் அனஸ் (ரலி) அவர்கள் “எவர் ஒழூச் செய்து நான்கு ரக்அத் தொழுது இந்த துஆவை கேட்பார் என்றால் அவர் எந்த நிலையில் இருந்தாலும் அல்லாஹ் அவருக்கு உதவி செய்வான்” என்றார்கள். ( நூல்: அல் இஸாபா )
لعلاء
بن الحضرمي - السير على بحر الخليج العربي:
وقعت
تلك الحادثة حينما بعث العلاء بن الحضرمي إلى البحرين فسار مع حوالي 4000 من الجند على
البحر ، حيث قال أبو هريرة الذي كان معه: "فمشينا على الماء، فوالله فما
ابتلت قدم ولا خف بعير ولا حافر دابة، وكان الجيش أربعة آلاف "، كما
روى الطبراني في المعجم الكبير :
وذكر
ابن كثير في كتابه "البداية " تفاصيل عن الحادثة الخارقة:
" وقد بعث النبي صلى الله عليه و سلم العلاء بن الحضرمي إلى
المنذر بن ساوي ملك البحرين ، ثم و لاه عليها أميراً حين افتتحها وأقره عليها
الصديق ، ثم عمر بن الخطاب ، و لم يزل بها حتى عزله عمر بن الخطاب و ولاه
البصرة فلما كان في أثناء الطريق توفي و ذلك في سنة 21 ،و قد
روى البيهقي عنه كرامات كثيرة منها أنه سار بجيشه على وجه البحر ما يصل إلى ركب
خيولهم ، و قيل إنه ما بل أسافل نعال خيولهم ، و أمرهم كلهم فجعلوا يقولون : يا
حليم يا عظيم ، و أنه كان في جيشه فاحتاجوا إلى ماء، فدعا الله فأمطرهم قدر
كفايتهم ،
காதிஸிய்யா
யுத்தம் பாரசீகத்தை நோக்கி உமர் (ரலி) ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற யுத்தமாகும்.
இஸ்லாமிய வரலாற்றில் பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்த யுத்தமும் கூட.
வரலாற்றாசிரியர்கள் இரண்டாவது பத்ர் என்று குறிப்பிடுவதும் உண்டு.
பாரசீகத்தை நோக்கி
உமர் (ரலி) அவர்கள் சிறிய சிறிய இடைவெளியில் படைப்பிரிவை அனுப்பிக் கொண்டே
இருந்தார்கள்.
ஒரு படைபிரிவுக்கு
அபூ உபைதா (ரலி) தளபதி,
இன்னொரு படைப்பிரிவுக்கு காலித் இப்னு வலீத் (ரலி) தளபதி, இன்னொரு படைப்பிரிவுக்கு ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) தளபதி, இன்னுமொரு படைப்பிரிவுக்கு முகர்ரின் (ரலி) தளபதி.
இப்படியாக ஸஅத்
(ரலி) அவர்கள் தலைமையில் பாரசீகம் சென்ற படைப்பிரிவு வெள்ள நீரால் சூழப்பட்ட
நதியைக் கடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
ஆனால், நதியைக் கடந்து அக்கரைக்குச் செல்ல எந்த வழியும் இல்லாத போது பிஸ்மில்லாஹ்
என்ற ஒற்றை வார்த்தையைக் கூறி தளபதி ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) ஒட்டு மொத்த
படைப்பிரிவையும் தண்ணீரின் மீது நடத்திக் கூட்டிப் போனார். அந்த படைப்பிரிவில்
வீரராக பங்கு கொண்ட அபூஹுரைரா (ரலி) அவர்கள் உளூ செய்ய பயன்படுத்தும் என் கூஜா
கீழே விழுந்தது நான் வாகனத்தில் இருந்து இறங்கி எடுத்தேன். நான் நீரின் மீது தான்
நிற்கிறோம் என்கிற எந்த உணர்வையும் பெறவில்லை. மாறாக, ஏதோ ஒரு பாதையில் பயணிப்பது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது என்றார்கள். ( நூல்:
இதே போன்று
அபூமுஸ்லிமுல் கவ்லானி (ரஹ்) அவர்கள் ரோமை நோக்கி ஒரு படைப்பிரிவை அழைத்துச்
செல்கிற போது நதி குறிக்கிட்ட போது “பிஸ்மில்லாஹ் கூறி பனூ
இஸ்ரவேலர்களை நதியைப் பிளந்து அழைத்துச் சென்றவனே! இதோ உன்னுடைய மார்க்கத்தை
மேலோங்கச் செய்ய நாங்கள் போருக்கு சென்று கொண்டிருக்கின்றோம். எங்களையும் நீ இந்த நீரின் மீது அழைத்துச் செல்” என்று துஆச் செய்து நீரின் மீது நடந்து சென்று படைப்பிரிவை அக்கரைக்கு
அழைத்துச் சென்றார்கள்.
இதே போன்றே அலாஅல்
ஹள்ரமீ (ரலி) அவர்களும் நான்காயிரம் படை வீரர்களோடு பிஸ்மில்லாஹ் என்ற ஒற்றை
வார்த்தையைக் கூறி நதியைக் கடந்து சென்றதாக வரலாற்று ஆசிரியர்கள் பதிவு
செய்திருக்கின்றார்கள். ( நூல்: இப்னு கஸீர், தாரீகே திமிஷ்க், பிதாயா வன் நிஹாயா )
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமது
ரமழான் நோன்பையும், இரவு வணக்கங்களையும் மாநபி {ஸல்} அவர்களின் விருப்பத்திற்கிணங்க
அமைத்துக் கொள்வதற்கு அருள் புரிவானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!
மாஷா அல்லாஹ் அருமையான பதிவு அல்லாஹுத்தஆலா தங்களுக்கு ஈருலகிலும் நற்பாக்கியங்களை தருவானாக ஆமீன்
ReplyDelete