Thursday, 19 June 2025

வல்லவனுக்கு வல்லவன் இவ்வையகத்தில் உண்டு!!

 

வல்லவனுக்கு வல்லவன் இவ்வையகத்தில் உண்டு!!

ரஷியா-உக்ரைன் போர் நடைபெற்று வரும்போது  மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டதாக சொல்லப்பட்டது. 

தற்போது ஈரான் - இஸ்ரேல் இடையே போர் நடைபெறும் சூழலில் மீண்டும் மூன்றாம் உலகப் போர் தொடங்கி விட்டதாக சொல்லப்படுகிறது.

மொத்தத்தில் மூன்றாம் உலகப் போரின் மீதான கவனக் குவிப்பு சர்வதேச அளவில் மக்களிடையே ஏற்பட்டிருப்பதை காணமுடிகிறது.

இந்த நிலையில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் ஈரானின் மீது தாக்குதல் நடத்தியது.

ட்ரம்ப்பின் ஒப்புதலின்றி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருக்க முடியாது. 

இந்த தாக்குதலின் பின்னணியில் மிகப் பெரிய திட்டம் இருப்பதை யூகிக்க முடிகிறது.

சிரியா எப்படி போரில் சிக்கி 15 ஆண்டுகள் நாசமானதோ, அதேபோல் ஈரானை சிக்க வைக்க இஸ்ரேலும், அமெரிக்காவும் நினைக்கின்றன.” 

இஸ்ரேல் - ஈரான் போர் தொடர்பான சமீபத்தில் நடந்த ஜி-7 உச்சி மாநாட்டின் தீர்மானத்தில், 'பிராந்தியத்தில் ஈரான் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தன்னை தற்காத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உள்ளது. இருப்பினும் இரு தரப்பும் தாக்குதலை குறைக்க வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது. மேலும், எந்த நிலையிலும், ஈரானுக்கு அணு ஆயுதம் கிடைக்கக்கூடாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் முகமாக அசுர பலத்துடன் ஈரானும் எதிர் தாக்குதல் நடத்தியது.

இஸ்ரேலும் ஈரானும் பதிலுக்கு பதில் தாக்குதல் நடத்தி போரில் ஈடுபட்டு வரும் இந்த நேரத்தில் இஸ்ரேல் ஈரானிடம் தோற்க வேண்டும் என்ற எண்ணம் சர்வதேச அளவில் அனைத்து தரப்பினரும் விரும்பும் அளவுக்கு இருந்து வருவதை சோஷியல் மீடியாவின் ஊடாக நாம் பார்த்து வருகின்றோம்.

குறிப்பாக சர்வதேச அளவில் வாழும் முஸ்லிம்களும் விரும்புவதையும் புரிந்து கொள்ள முடிகிறது.

ஈரான் இஸ்ரேலைத் தாக்குவதால் முஸ்லிம்கள் மகிழ்ச்சியடையலாமா?

கொள்கையால் இஸ்லாமிய மையப் பகுதியில் இருந்து வெகுதூரம் விலகி நிற்கும் நாடு ஈரான். ஈரானுடைய இஸ்ரேலுக்கு எதிரான போர் நிலைப்பாட்டை இன்று சர்வதேச அளவிலான பெரும்பாலான முஸ்லிம் சமூகம் கொண்டாடி வரும் நிலையில் இந்த கேள்வி முன் வைக்கப்படுகிறது.

1)     அநியாயத்திற்கெதிரான போரில் நியாயத்தை தழுவி நிற்கும் ஒரு நாடு வெற்றி பெற வேண்டும் என்று ஆசை வைப்பதும், அவர்கள் வெற்றி பெற்றால் அந்த வெற்றியை மகிழ்ச்சியோடு வரவேற்பதும், கொண்டாடுவதும் குர்ஆன் ஸுன்னாவிற்கு முரணாணது அல்ல.

,الم غُلِبَتِ الرُّومُ, فِي أَدْنَى الْأَرْضِ وَهُمْ مِنْ بَعْدِ غَلَبِهِمْ سَيَغْلِبُونَ, فِي بِضْعِ سِنِينَ لِلَّهِ الْأَمْرُ مِنْ قَبْلُ وَمِنْ بَعْدُ وَيَوْمَئِذٍ يَفْرَحُ الْمُؤْمِنُونَ (القرآن 30: 1-4)  

 

'அலிஃப் லாம் மீம், ரோம் (பாரசீகர்களால்) வெற்றிகொள்ளப்பட்டுவிட்டது. அருகிலுள்ள பூமியில் அவர்(ரோமர்)கள் தங்களுடைய தோல்விக்குப்பின் விரைவில் வெற்றியடைவார்கள்.  சில வருடங்களிலேயே அவர்கள் (வெற்றிகொள்வார்கள்) (வெற்றி-தோல்வி அளிக்கும்) அதிகாரம் (இதற்கு) முன்னரும், (இதற்குப்) பின்னரும் அல்லஹ்வுக்கே உரியது. (ரோமர்கள் வெற்றியடையும்) நாளில் முஃமீன்கள் மகிழ்ச்சியடைவார்கள்'. ( அல்குர்ஆன் 30: 1-4 )

பெருமானார் (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் வழங்கப்பட்ட ஆரம்ப கால மக்கா வாழ்க்கையின் போது ரோமர்கள் பாரசீகர்கள் இடையே நடைபெற்ற ஒரு யுத்தத்தில் பாரசீகர்களிடம் ரோம் தோற்றுப் போகும். வேதக்காரர்களாக இருந்த ரோமர்கள் நெருப்பு வணங்கிகளாக இருந்த பாரசீகர்களிடம் தோற்றுப் போனது முஸ்லிம்களுக்கு வருத்தத்தை தந்தது. அப்போது தான் இந்த வசனங்கள் மாநபி (ஸல்) அவர்களுக்கு இறக்கியருளப்பட்டது. 

'அர்ரூம்' என்று அல்குர்ஆன் குறிப்பிடும் இந்த ரோமர்கள் யார் என்றால் கிழக்கு ரோமர்களான அன்றைய பைஸாந்தியரைக் குறிக்கிறது. அரபியாவை ஒட்டி மத்திய கிழக்கு நாடுகளில் மாபெரும் பேரரசை நிறுவி ஆட்சி புரிந்து வந்த இவர்கள், வேதக்காரர்களான 'கிறித்தவர்கள்' ஆவர்.

"அர்ரூம்" என்பது ஹழ்ரத் இப்ராஹீம் (அலை) அவர்களது புதல்வாரன ஹழ்ரத் இஸ்ஹாக் (அலை) அவர்களது பேரரான ரூம் என்பவரது சந்ததியினர் அனைவரையும் குறிக்கும். 'ரூம்' என்பவரது தந்தையின் பெயர் 'ஐஸ்' என்பதாகும். இவர் ஹளரத் யாகூப் (அலை) அவர்களது சகோதரர் ஆவார். 

இவருக்கு முன்னரும்  'ரூம்' என்ற பெயர் உள்ளவராக ஒருவர் இருந்தார். அவர் ஹழ்ரத் நூஹ் (அலை) அவர்களது புதல்வாரன 'யாபிது' என்பவரின் பேரர் ஆவார். இவரது தந்தையின் பெயர் 'யூனான்' என்பதாகும். 

தற்போதைய கிரீஸ் நாட்டிற்கு 'யூனான்' என்று பெயர். ஹளரத் நூஹ் (அலை) அவர்களது பேரரான 'யூனான்' என்பவர் இங்கு குடியேறி வாழ்ந்ததால் இவரது பெயர் இந்நாட்டுக்கு ஏற்பட்டது போலும்.  இந்நாட்டில் வாழ்கின்ற அனைவருக்கும் 'ரோமர்' என்றும் 'யூனானியர்' என்றும் பொதுப்பெயர் உண்டு. ( நூல்: தஃப்ஸீருல் ஹமீது ஃபீ தஃப்ஸீரில் குர்ஆனில் மஜீத்) 

கி.பி. 610-ஆம் ஆண்டில் கிழக்கு ரோமர்கள் மீது பாரசீகர்கள் போர் தொடுத்து வந்து அன்றைய கிழக்கு ரோம் (பைஸாந்திய) நாட்டின் பல பகுதிகளை கைப்பற்றிவிட்டனர்.

கிழக்கு ரோமர்கள் அப்போதைக்கு பாரசீகர்களால் தோற்கடிக்கப்பட்டு விட்டாலும், இன்னும் சில ஆண்டுகளில் ரோமர்கள் வெற்றிவாகை சூடுவார்கள் என்பதே அல்குர்ஆன் குறிப்பிடும் அந்த வெற்றி அறிவிப்பாகும்.

فَلَمَّا أَنْزَلَ اللَّهُ تَعَالَى هَذِهِ الْآيَةَ خَرَجَ أَبُو بَكْرٍ الصِّدِّيقُ رَضِيَ اللَّهُ عَنْهُ يَصِيحُ فِي نَوَاحِي مَكَّةَ {الم غُلِبَتْ الرُّومُ فِي أَدْنَى الْأَرْضِ وَهُمْ مِنْ بَعْدِ غَلَبِهِمْ سَيَغْلِبُونَ فِي بِضْعِ سِنِينَ} قَالَ نَاسٌ مِنْ قُرَيْشٍ لِأَبِي بَكْرٍ فَذَلِكَ بَيْنَنَا وَبَيْنَكُمْ زَعَمَ صَاحِبُكَ أَنَّ الرُّومَ سَتَغْلِبُ فَارِسَ فِي بِضْعِ سِنِينَ أَفَلَا نُرَاهِنُكَ عَلَى ذَلِكَ قَالَ بَلَى وَذَلِكَ قَبْلَ تَحْرِيمِ الرِّهَانِ فَارْتَهَنَ أَبُو بَكْرٍ وَالْمُشْرِكُونَ وَتَوَاضَعُوا الرِّهَانَ وَقَالُوا لِأَبِي بَكْرٍ كَمْ تَجْعَلُ الْبِضْعُ ثَلَاثُ سِنِينَ إِلَى تِسْعِ سِنِينَ فَسَمِّ بَيْنَنَا وَبَيْنَكَ وَسَطًا تَنْتَهِي إِلَيْهِ قَالَ فَسَمَّوْا بَيْنَهُمْ سِتَّ سِنِينَ قَالَ فَمَضَتْ السِّتُّ سِنِينَ قَبْلَ أَنْ يَظْهَرُوا فَأَخَذَ الْمُشْرِكُونَ رَهْنَ أَبِي بَكْرٍ فَلَمَّا دَخَلَتْ السَّنَةُ السَّابِعَةُ ظَهَرَتْ الرُّومُ عَلَى فَارِسَ فَعَابَ الْمُسْلِمُونَ عَلَى أَبِي بَكْرٍ تَسْمِيَةَ سِتِّ سِنِينَ لِأَنَّ اللَّهَ تَعَالَى قَالَ فِي بِضْعِ سِنِينَ وَأَسْلَمَ عِنْدَ ذَلِكَ نَاسٌ كَثِيرٌ (رواه الترمذى – 3194)

இந்த வசனத்தை அல்லாஹ் இறக்கியருளிய போது, அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் வெளியே வந்து, மக்காவின் பகுதியில், இந்த வசனங்களை சப்தமிட்டு ஓதிக்காட்டினார்கள்.

அப்போது அங்கிருந்த குரைஷிகள் சிலர், அபூபக்கரே! உமது தோழர், நிச்சயமாக ரோம் பாரஸீகத்தை சில ஆண்டுகளில் வெற்றிக்கொள்ளும் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார். இது விஷயத்தில் நமக்கு மத்தியில் ஒரு தவணையை ஏற்படுத்துவீராக! அதனை குறித்து நாம் ஒரு பந்தயம் வைத்துக்கொள்ளலாமே? என்றனர். அதற்கு அபூபக்கர் (ரலி) அவர்கள் சம்மதம் தெரிவித்தார்(சரி என்றார்)கள். 

இந்த நிகழ்வு யாவும் "பந்தயம் கட்டுதல்"  ஹராமாக்கப்படுவதற்கு முன்பு நடந்ததாகும். அபூபக்கர் (ரலி) அவர்களும் மக்கா குரைஷிகளும் பந்தயம் கட்டினார்கள். 

அபூபக்கர் (ரலி) அவர்களிடம் 'பிள்வு' (சில ஆண்டு) என்பதற்கு எத்துணை ஆண்டு என்றார்கள். அதற்கு அபூபக்கர் (ரளி) மூன்றிலிருந்து ஒன்பது ஆண்டுகள் என்றார்கள். அதற்கவர்கள், நமக்கு மத்தியில் நடுநிலையான ஒரு ஆண்டை பந்தயமாக வைப்பீராக! என்றனர். அதற்கு அபூபக்கர் (ரலி) அவர்கள் (சரி) ஆறு ஆண்டை பந்தயமாக கணக்கு வைத்துக்கொள்ளலாம் என்றார்கள். ஆறு ஆண்டுகள் முடிந்தவுடன் குரைஷிகள் பந்தயமாக கட்டப்பட்டதை எடுத்துக்கொண்டார்கள்.

இந்த பந்தய விஷயத்தில் முஸ்லிகளில் சிலர் "அல்லாஹ் 'பிள்வு சினீன்'-சில ஆண்டுகள் என்றுதான் சொல்கிறான். ஏன் அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆறு ஆண்டு என்று நிரணயித்தார்கள்" என்று பேசிக் கொண்டனர். 

ஏழாம் ஆண்டு துவங்கியது, ரோமானியர்கள் பாரசீகத்தை (கி.பி. 624-ல்) வெற்றிகொண்டு விட்டனர். (ஆகவே, நபி ஸல் அவர்களுக்கு இறக்கியருளப்பட்ட வசனத்தின் அடிப்படையில் வெற்றி உண்மையானதால்) பலர் அப்போது இஸ்லாத்தை ஏற்றார்கள். ( நூல்: திர்மிதி ) 

திர்மிதீ ஷரீஃபில் இடம் பெருகிற இன்னொரு அறிவிப்பு இன்னும் சற்று கூடுதலான தகவல்களுடன் விரிவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى هَذِهِ الْآيَاتِ، فَخَرَجَ أَبُو بَكْرٍ الصِّدِّيقُ إِلَى الْكُفَّارِ، فَقَالَ: فَرِحْتُمْ بِظُهُورِ إِخْوَانِكُمْ، فَلَا تَفْرَحُوا فَوَاللَّهِ لَيُظْهِرُنَّ عَلَى فَارِسَ عَلَى مَا أَخْبَرَنَا بِذَلِكَ نَبِيُّنَا، فَقَامَ إِلَيْهِ أُبَيُّ بْنُ خَلَفٍ الْجُمَحِيُّ فَقَالَ: كَذَبْتَ، فَقَالَ: أَنْتَ أَكْذَبُ يَا عَدُوَّ اللَّهِ، فَقَالَ: اجْعَلْ بَيْنَنَا أَجَلًا أُنَاحِبُكَ عَلَيْهِ -وَالْمُنَاحَبَةُ: الْمُرَاهَنَةُ-عَلَى عَشْرِ قَلَائِصَ مِنِّي وَعَشْرِ قَلَائِصَ مِنْكَ، فَإِنْ ظَهَرَتِ الرُّومُ عَلَى فَارِسَ غَرِمْتُ، وَإِنْ ظَهَرَتْ فَارِسُ غَرِمْتَ فَفَعَلُوا وَجَعَلُوا الْأَجَلَ ثَلَاثَ سِنِينَ فَجَاءَ أَبُو بَكْرٍ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرَهُ بِذَلِكَ، وَذَلِكَ قَبْلَ تَحْرِيمِ الْقِمَارِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: 'مَا هَكَذَا ذَكَرْتُ إِنَّمَا الْبِضْعُ مَا بَيْنَ الثَّلَاثَةِ إِلَى التِّسْعِ، فَزَايِدْهُ فِي الْخَطَرِ وَمَادِّهِ فِي الْأَجَلِ، فَخَرَجَ أَبُو بَكْرٍ وَلَقِيَ أُبَيًّا، فَقَالَ: لَعَلَّكَ نَدِمْتَ؟ قَالَ: لَا فَتَعَالَ أُزَايِدُكَ فِي الْخَطَرِ وَأُمَادُّكَ فِي الْأَجَلِ، فَاجْعَلْهَا مِائَةَ قَلُوصٍ وَمِائَةُ قَلُوصٍ إِلَى تِسْعِ سِنِينَ، وَقِيلَ إِلَى سَبْعِ سِنِينَ، قَالَ قَدْ فَعَلْتُ: فَلَمَّا خَشِيَ أُبَيُّ بْنُ خَلَفٍ أَنْ يَخْرُجَ أَبُو بَكْرٍ مِنْ مَكَّةَ أَتَاهُ فَلَزِمَهُ، وَقَالَ: إِنِّي أَخَافُ أَنْ تَخْرُجَ مِنْ مَكَّةَ فَأَقِمْ لِي كَفِيلًا فَكَفَلَ لَهُ ابْنَهُ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي بَكْرٍ، فَلَمَّا أَرَادَ أُبَيُّ بْنُ خَلَفٍ أَنْ يخرج إلى احد أَتَاهُ عَبْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرٍ فَلَزِمَهُ، فَقَالَ: لَا وَاللَّهِ لَا أَدَعُكَ حَتَّى تُعْطِيَنِي كَفِيلًا فَأَعْطَاهُ كَفِيلًا. ثُمَّ خَرَجَ إِلَى أُحُدٍ ثُمَّ رَجَعَ أُبَيُّ بْنُ خَلَفٍ فَمَاتَ بِمَكَّةَ مِنْ جِرَاحَتِهِ الَّتِي جَرَحَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ بَارَزَهُ، وَظَهَرَتِ الرُّومُ عَلَى فَارِسَ يَوْمَ الْحُدَيْبِيَةِ، وَذَلِكَ عِنْدَ رَأْسِ سَبْعِ سِنِينَ مِنْ مُنَاحَبَتِهِمْ. (تفسير البغوى – للامام الطيبى)

இந்த வசனங்களை  இறைவன் மாநபி ஸல் அவர்களுக்கு இறக்கியருளிய போதுஹழ்ரத் அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்கள் "மக்காவின் இறைநிராகரிப்பாளர்களிடம் சென்று, "உங்கள் சகோதரர்(பாரசீகர்)கள் (ரோமார்களை) வென்றுவிட்டார்கள் என்று சந்தோசப்படுகிறீர்கள். (அளவுகடந்து) சந்தோசப்படாதீர்கள்! 

எங்கள் நபியவர்கள் சொன்னது போல இறைவனின் மீது ஆணையாக! (விரைவில் ரோமர்கள்) பாரசீகர்களை வீழ்த்துவார்கள் என்று கூறினார்கள். 

அப்பொழுது, உபை பின் கலஃப் அல் ஜுஹமீ என்பவன் 'பொய்யுரைக்கிறீர்! என்றான். 

அதற்கு, அபூபக்ர் (ரலி) அவர்கள், 'அல்லாஹ்வின் விராதியே! நீதான் மிகப் பெரிய பொய்யன் என்றார்கள். நமக்கிடையில் ஒரு தவணையை ஏற்படுத்துவீராக! அதனைக் குறித்து நான் உம்மிடம் பந்தயம் கட்டுகிறேன்' என்றான். அதன்படி நம் இருவருக்கு மத்தியில் பத்து வாலிபமான ஒட்டகைகளை, தோற்றவர் வென்றவருக்குக் கொடுக்க வேண்டும் என பந்தயம் வைத்து, மூன்று வருடம் என்பதாக தவணையையும் ஏற்படுத்தினார்கள்.

பின்னர், ஹளரத் அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் விஷயத்ததை அறிவித்த பொழுது, 'பிள்வுன்' என்பது, மூன்றுக்கும் ஒன்பதுக்கும் இடையில் உள்ளது. இத்தகைய சந்தேகமான சந்தர்ப்பங்களில் இவற்றில் நீளமானதை தவணையாக்க வேண்டும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  

எனவே, அபூபக்ர் (ரலி) அவர்கள், உபை பின் கலஃபை சந்தித்த போது, என்ன தோற்றிவிட்டீர் போல் தெறிகிறதே என்றான். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் இல்லை, பந்தயத்தின் கால அவகாசத்ததையும் பரிசின் எண்ணிக்கையையும் சற்று அதிகமாக்க நாடுகிறேன் என்றார்கள். அதன்படி, ஒன்பது வருட தவணையும் நூறு ஒட்டகைகளும் பரிசு என்பதாகப் பந்தயங் (மாற்றிக்) கட்டப்பட்டது. பின்னர், ஹளர் அபூபக்ர் (ரலி) அவர்கள் திருமக்காவை ஹிஜ்ரத் செய்து புறப்பட்ட பொழுது, இப்பந்தயம் வீணாகிவிடுமென உபை பின் கலஃப் பயந்தான். அப்பொழுது, ஹளரத் அபூபக்ர் (ரலி) அவர்களது புதல்வாரன அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் தங்களது தந்தைக்குப் பதிலாக பொறுப்பேற்றுக் கொண்டார்கள். பின்னர், உஹதுக் போருக்கு காஃபிர்கள் புறப்பட்டனர். அப்பொழுது, அபூபக்ர் (ரலி) அவர்களின் புதல்வாரன அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அவனி(உபை பின் கலஃபி)டம் சென்று பந்தயத்தைக்கூறித் இறைவன் மீதாணையாக! உன்னை விடமாட்டேன் என தடுக்கவே, அப்பந்தயத்துக்கு வேறொருவனைப் பிணையேற்கச் செய்து விட்டு, உஹதுப் போருக்கு சென்றான். அந்தப் போரில் நபி (ஸல்) அவர்களால் அவன் காயம் அடைந்து திரும்ப வந்து மரணித்தான். 

பின்னர் இந்த வசனங்கள் அருளப்பட்டு, ஏழாமாண்டின் ஆரம்பத்தில் ரோமர்களுக்கும் பாரசீகர்களுக்கும் மீண்டும் யுத்தம் தொடங்கி ஹுதைபிய்யா நாளில் பாரசீகர்களை ரோமர்கள் வீழ்த்தி வெற்றிவாகை சூடினார்கள். ( நூல்: தஃப்ஸீருல் பஃகவீ )

2) இறைவனின் நியதியை விளங்கிக் கொண்ட சமூகமாக இருப்பதால் ஈரானின் இந்த செயல்பாட்டைக் கண்டு முஸ்லிம்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

இந்த உலகில் வெல்லவே முடியாது என்று எதுவும் இல்லை. வெற்றி வாகை  சூடிக் கொண்டே இருக்கும் ஒன்று இவ்வுலகில் இல்லை.

 نا عَبْدُ اللَّهِ بْنُ بَكْرٍ ، نا حُمَيْدٌ ، عَنْ أَنَسٍ ، قَالَ : كَانَتْ نَاقَةٌ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تُسَمَّى الْعَضْبَاءُ وَكَانَتْ لا تُسْبَقُ فَجَاءَ أَعْرَابِيٌّ عَلَى قُعُودٍ فَسَبَقَهَا فَشَقَّ ذَلِكَ عَلَى الْمُسْلِمِينَ فَلَمَّا رَأَى مَا فِي وُجُوهِهِمْ قَالُوا : يَا رَسُولَ اللَّهِ سُبِقَتِ الْعَضْبَاءُ فَقَالَ

 " إِنَّ حَقًّا عَلَى اللَّهِ أَنْ لا يَرْفَعَ مِنَ الدُّنْيَا شَيْئًا إِلا وَضَعَهُ "

அள்பாஃ இது அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் ஒட்டகைகளில் ஒன்று. நபி {ஸல்} அவர்கள் தங்களது இருதிப் பேருரையை இதன் மீது அமர்ந்து தான் ஆற்றினார்கள் என்ற ஒரு வரலாற்று தகவலும் உண்டு.

அன்றைய அரபுலகத்தின் அனைத்துப் பந்தயங்களிலும் பங்கு கொண்டு முதல் இடத்தை தட்டிச் செல்லும் செல்வாக்கும் துடிப்பும் நிறைந்த ஒட்டகம் அது.

ஒரு சந்தர்ப்பத்தில்  கிராமவாசி ஒருவரின் ஒட்டகையிடம் தோற்றுப் போய் இரண்டாமிடத்திற்கு வந்தது அள்பாஃ, நபித்தோழர்களால் இதைத் தாங்கிக் கொள்ள இயலவில்லை. உணர்ச்சி வசப்பட்டார்கள் நபித்தோழர்கள்.

 

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் நபித்தோழர்களின் முகங்களில் காணப்பட்ட கவலை ரேகைகளை அறிந்து கொண்டு, என்ன? எல்லோரும் முகம் வாடியவர்களாக இருக்கின்றீர்கள்? காரணம் என்னவென்று கேட்டார்கள்.

அதற்கு நபித்தோழர்கள், அல்லாஹ்வின் தூதரே! ஒரு கிராமவாசியின் ஒட்டகம் தங்களது அள்பாஃவை முந்திவிட்டது. அது தான் எங்களின் முக வாட்டத்திற்கு காரணம் என்று உணர்ச்சி மேலிடக் கூறினார்கள்.

அப்போது, அண்ணல் நபி {ஸல்} அவர்கள் தோழர்களை நோக்கி உலகில் தோற்றுப் போகிற எந்த ஒன்றையும் அல்லாஹ் உயரிய வெற்றிக்கு சொந்தமானதாக ஆக்காமல் இருப்பதில்லை. இது அல்லாஹ் தன் மீது விதியாக்கிக் கொண்ட ஒன்றாகும். இப்போது அந்த கிராமவாசியின் ஒட்டகம் வெற்றி பெரும் முறையாகும்.என்று பதில் கூறினார்கள். ( நூல்: புகாரி )

3) வல்லவன் ஒருவன் வையகத்தில் உண்டு என்ற உண்மையை உணர்ந்த சமூகமாக இருப்பதால் ஈரானின் இந்த செயல்பாட்டைக் கண்டு முஸ்லிம்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

"வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு" என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒன்று. 

ஒருவர் ஒரு துறையில் எவ்வளவு பெரிய வல்லவராக விளங்கினாலும், அவரை விடச் சிறப்பாகவும், துல்லியமாகவும் ஒரு செயலைச் செய்யக் கூடிய வல்லமை உடையவர்கள் அந்த துறையில்  நிச்சயம் இருப்பார்கள். 

அந்த வகையில் இஸ்ரேல் வான்வெளியில் அயர்ன் டோம் என்ற கட்டமைப்பை ஏற்படுத்தி இந்த உலகில் எவரும் எங்களை நெருங்க முடியாது. வீழ்த்த முடியாது என்று கர்வம் கொண்டிருந்த வேளையில் ஈரான் அந்த கர்வத்தை அதை விட நுட்பமான தொழில்நுட்பம் ஒன்றை வைத்து இஸ்ரேலுக்கு உள்ளே மிசல்ஸ் ஏவுகணைகளை, ட்ரோன்களை அனுப்பி அந்த நாட்டின் நகரங்களை, அமெரிக்க தூதரகத்தை, டெல் அவிவ் நகரத்தை பதம் பார்த்துள்ளது.

ஈரானின் கட்டுப்பாட்டில் இஸ்ரேலின் முழு வான்வெளியும் வந்து விட்டதாக ஈரான் சொல்கிறது.

وَفَوْقَ كُلِّ ذِىْ عِلْمٍ عَلِيْمٌ‏

"கல்வி அறிவுடைய ஒவ்வொருவருக்கும் மேலானஅறிந்த ஒருவன் இருக்கவே செய்கிறான்! ( அல்குர்ஆன்: 12: 76 )

4) அநீதம் இழைக்கப்பட்டோர்களின் பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்பட்டதாக முழு முஸ்லிம்களும் முழுமையாக நம்புவதால் ஈரானின் இந்த செயல்பாட்டைக் கண்டு முஸ்லிம்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

 عن ابن عباس -رضي الله عنهما- أن رسول الله -صلى الله عليه وسلم- قال لمعاذ بن جبل حين بعثه إلى اليمن واتق دعوة المظلوم، فإنه ليس بينها وبين الله حجاب.

 

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்களை யமனுக்கு அனுப்பும் போது முஆதே! அநீதி இழைக்கப்பட்டவனின் முறையீட்டை அஞ்சிக்கொள்ளுங்கள்! ஏனெனில், அவனுக்கும் அல்லாஹ்விற்கும் மத்தியில் எவ்வித திரையும் கிடையாதுஎன்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.   ( நூல்: புகாரி )

وعن أبي هريرة -رضي الله عنه- عن النبي -صلى الله عليه وسلم-: (وَدَعْوَةُ الْمَظْلُومِ تُحْمَلُ على الْغَمَامِ وَتُفْتَحُ لها أَبْوَابُ السماء

وَيَقُولُ الرَّبُّ عز وجل وعزتي لأَنْصُرَنَّكِ وَلَوْ بَعْدَ حِين).

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: அநீதி இழைக்கப்பட்டவனின் முறையீடு உடனடியாக மேகத்தைக் கடக்கிறது. அதற்காக வானலோகத்தின் வாசல்களும் திறக்கப்படுகிறது. அந்த முறையீட்டுக்குப் பதில் தரும் முகமாக அல்லாஹ் என் கண்ணியத்தின் மீது ஆணையாக! இதோ இப்போதே உன் முறையீட்டுக்குப் பதில் தருகின்றேன்என்று கூறுவதாக, நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                                  ( நூல்: முஸ்தத்ரக் அல் ஹாக்கிம் )

وعن أبي هريرة -رضي الله عنه- أن النبي -صلى الله عليه وسلم- قال: (دعوة المظلوم مستجابة وإن كان فاجرا ففجوره على نفسه).

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: அநீதி இழைக்கப்பட்டவனின் முறையீட்டை அல்லாஹ் உடனடியாக ஏற்றுக் கொள்கின்றான். அவன் பாவியாக இருந்தாலும் சரியே!என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                                                     ( நூல்: தப்ரானீ )

பன்னெடுங்காலமாக இஸ்ரேலின் கோரத் தாண்டவத்திற்கு இரையாகிக் கொண்டிருக்கும் ஒரு சமூகமாக ஃபலஸ்தீன் முஸ்லிம் சமூகம் இருந்து வருகிறது.

அதிலும் குறிப்பாக கடந்த இரண்டு வருடங்களாக சொந்த நாட்டில் அகதிகளாக, குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் என ஒட்டுமொத்த காஸாவின் மக்களும் உண்ண உணவின்றி, உடுத்த உடையின்றி, ஓய்வெடுக்க இடமின்றி, மின்சாரம் இல்லாமல், தவித்த வாய்க்கு தண்ணீர் கிடைக்காமல் இடிபாடுகளுக்குள் தங்களுடைய வாழ்க்கையை கழித்துக் கொண்டிருக்கும் நிராயுதபாணிகளான ஃபலஸ்தீன முஸ்லிம் சமூகத்தின் அசைக்க முடியாத ஈமானிய உரத்துடன் எழுப்பப்பட்ட பிரார்த்தனைகளின் வெளிப்பாடாகவே ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் இன்றைய ஈரானின் செயல்பாட்டைக் கண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது.

5) படைத்தவன் அநியாயங்களை பார்த்துக் கொண்டிருக்க மாட்டான். அநியாயம் செய்பவர்களை விட்டு வைக்கவும் மாட்டான்.

وَلَا تَحْسَبَنَّ اللَّهَ غَافِلًا عَمَّا يَعْمَلُ الظَّالِمُونَ إِنَّمَا يُؤَخِّرُهُمْ لِيَوْمٍ تَشْخَصُ فِيهِ الْأَبْصَارُ

அநியாயக்காரர்கள் செய்கின்றவற்றை விட்டும் அல்லாஹ் பாராமுகமாக இருக்கின்றான் என்று நீங்கள் எண்ணாதீர்கள். அவர்களைத் தண்டிக்காமல் தமதப்படுத்துவதெல்லாம் கண்கள் அந்த தண்டனையை பார்த்து நிலை குலைந்து நிற்குமே அந்த ஒரு நாளுக்காகத் தான்”. ( அல்குர்ஆன்: 14: 42 )

إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ

நிச்சயமாக அல்லாஹ் அநியாயக் காரர்களுக்கு ஒரு போதும் நேர்வழியில் செலுத்த மாட்டான். ”                                                                                      ( அல்குர்ஆன்: 5:51 )

مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلٰىؕ‏

உம்முடைய இறைவன் உம்மைக் கை விடவுமில்லை; அவன் (உம்மை) வெறுக்கவுமில்லை. ( அல்குர்ஆன்: 93: 3 )

கலீஃபா உஸ்மான் (ரலி) அவர்களுடைய வீட்டை கலகக்காரர்கள் முற்றுகையிட்டனர். உணவையும் தண்ணீரையும் தடுத்தனர்.

நபிகளாரின் துணவி உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் உணவையும் தண்ணீரையும் எடுத்துக்கொண்டு கோவேறுக் கழுதையில் உஸ்மான் (ரலி) அவர்களுடைய வீட்டுக்குச் சென்றார். கலகக்காரர்கள் தடுத்தனர்.

"உள்ளே விடமுடியாது'' என்றனர். "உணவுதான் கொண்டு செல்கிறேன்'' என்றார். "முடியாது'' என்று பிடிவாதமாகக் கூறி, கழுதையை ஓங்கி மிதித்தனர். அது விரண்டு ஓடியது. அதன் மீதிருந்த நமது தாயார் கீழே விழப்பார்த்தார்கள். அச்சத்துடன் அங்கிருந்து திரும்பிவிட்டார்.

வீட்டுக்குள் கலீஃபா உஸ்மான் (ரலி) பசியுடன் குர்ஆன் ஓதிக்கொண்டிருக்கிறார். அன்று நோன்பு வைத்திருந்தார். பசியால் தூக்கம் மேலிட, கனவு காண்கிறார். கனவில் நபிகளாரைக் காண்கிறார்.

وقال ابن أبي الدنيا: حدثنا إسحاق بن إسماعيل، ثنا يزيد بن هارون، عن فرج بن فضالة، عن مروان بن أبي أمية، عن عبد الله بن سلام. قال: أتيت عثمان لأسلم عليه وهو محصور فدخلت عليه فقال: مرحبا بأخي، رأيت رسول الله ﷺ الليلة في هذه الخوخة - قال: وخوخة في البيت - فقال: « يا عثمان حصروك؟ قلت: نعم! قال: عطشوك؟ قلت: نعم، فأدلى دلوا فيه ماء فشربت حتى رويت، إني لأجد برده بين ثديي وبين كتفي، وقال لي: إن شئت نصرت عليهم، وإن شئت أفطرت عندنا » فاخترت أن أفطر عنده، فقتل ذلك اليوم.

நபி (ஸல்): "உஸ்மான்! உமக்கு அவர்கள் உணவை தடுத்து விட்டார்களா?''

உஸ்மான் (ரலி): "ஆம். அல்லாஹ்வின் தூதரே!'

நபி (ஸல்): "அவர்கள் தண்ணீரையும் தடுத்துவிட்டார்களா உஸ்மான்?''

உஸ்மான் (ரலி): "ஆம். அல்லாஹ்வின் தூதரே!''

நபி (ஸல்): "இன்று நோன்பு வைத்திருக்கின்றீர்களா?''

உஸ்மான் (ரலி): "ஆம். அல்லாஹ்வின் தூதரே!''

நபி (ஸல்): "இன்றைய நோன்பை எங்களுடன் திறக்கின்றீர்களா, உஸ்மான்?''

மகிழ்ச்சியுடன் விழித்து எழுந்து, கண்ட கனவை மனைவியிடம் கூறினார் உஸ்மான் (ரலி).

கலகக்காரர்கள் வீட்டை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்தனர். உஸ்மான் (ரலி) தொடர்ந்து குர்ஆன் ஓதிக்கொண்டிருந்தார்.

காஃபிகி பின் ஹர்ப் எனும் கேடு கெட்டவன் ஓதிக்கொண்டிருந்த உஸ்மான் (ரலி) அவர்களை எட்டி உதைத்தான். உஸ்மானும் குர்ஆனும் தூரப்போய் விழுந்தனர். தடுக்க வந்த மனைவி நாயிலா (ரலி) அவர்களின் கை விரல்களை வெட்டினான். ரத்தம் பீறிட்டது. 

உஸ்மான் (ரலி) அவர்களின் புஜத்தில் குறுவாளால் குத்தினான். ரத்தம் பீறிட்டது. ஓதிக்கொண்டிருந்த குர்ஆன் வசனத்தில் ரத்தத் துளிகள் பட்டுத் தெறித்தன.

அது என்ன வசனம் தெரியுமா? "அவர்களுக்கு எதிராக உமக்குத் துணைசெய்ய அல்லாஹ் போதுமானவன் (என்று உறுதியுடன் நிம்மதியாய் இருங்கள்)'' (2:137)

எவ்வளவு பொருத்தமான வசனங்கள்..! ரத்தம் தோய்ந்த அந்தக் குர்ஆன் பிரதி காலத்தின் சாட்சியாய் இஸ்தான்புல் அருங்காட்சியத்தில் இன்றும் உள்ளது.

ஆச்சரியம் என்னவென்றால், அந்தக் கொலையில் பங்குகெடுத்த ஒருவர்கூட பிற்காலத்தில் இயற்கையாக மரணிக்கவில்லை. அனைவரும் ஒன்றன்பின் ஒன்றாக கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.

ஃபலஸ்தீன மக்களை இஸ்ரேல் கொடூரமாக கொலை செய்தது. செய்கிறது, செய்து கொண்டே இருக்கிறது.

பச்சிளம் குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள், கர்ப்பிணிப் பெண்கள், பெண்கள், முதியோர்கள் என லட்சக்கணக்கான மக்களை ஊனமாக்கியுள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்துள்ளது.

மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், வீடுகள், வியாபார நிறுவனங்கள் என பல்லாயிரக்கணக்கான கட்டிடங்களை நிர்மூலமாக்கி இருக்கிறது.

இத்தனை அநியாயங்களையும் வல்லரசு அமெரிக்காவின் கைப்பாவையாக இருந்து இஸ்ரேல் செய்துள்ளது.

எனவே, அநியாயம் செய்து கொண்டிருந்த இஸ்ரேலுக்கு எதிராக அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஈரானை சாட்டி இருக்கின்றான்.

6) அல்லாஹ்வின் உதவி சில போது முஸ்லிம் உம்மத்துக்கு பாவிகளைக் கொண்டு கூட கிடைக்கும்.

ஈரான் இஸ்லாமிய கொள்கை கோட்பாடுகளின் மையப் பகுதியில் இருந்து தூர விலகிச் சென்றிருந்தாலும், ஈரானின் சித்தாந்தங்களில் முரண்பாடுகள் இருந்தாலும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவர்களைக் கொண்டு அல்லது அவர்களை காரணமாக்கி இந்த உம்மத்துக்கு உதவி செய்ய மாட்டான் என்று யார் சொன்னது?

وفي أَصْحَابِ رَسولِ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ رَجُلٌ لا يَدَعُ لهمْ شَاذَّةً ولَا فَاذَّةً، إلَّا اتَّبَعَهَا يَضْرِبُهَا بسَيْفِهِ، فَقالَ: ما أَجْزَأَ مِنَّا اليومَ أَحَدٌ كما أَجْزَأَ فُلَانٌ، فَقالَ رَسولُ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ: أَمَا إنَّه مِن أَهْلِ النَّارِ. فَقالَ رَجُلٌ مِنَ القَوْمِ: أَنَا صَاحِبُهُ، قالَ: فَخَرَجَ معهُ؛ كُلَّما وقَفَ وقَفَ معهُ، وإذَا أَسْرَعَ أَسْرَعَ معهُ، قالَ: فَجُرِحَ الرَّجُلُ جُرْحًا شَدِيدًا، فَاسْتَعْجَلَ المَوْتَ، فَوَضَعَ نَصْلَ سَيْفِهِ بالأرْضِ، وذُبَابَهُ بيْنَ ثَدْيَيْهِ، ثُمَّ تَحَامَلَ علَى سَيْفِهِ، فَقَتَلَ نَفْسَهُ

நபி (ஸல்) அவர்களோடு கைபர் போரில் கலந்து கொண்டவர்களில் முஸ்லிம்களின் அணியைச் சேர்ந்த குஸ்மான்என்பவரின் வீரதீரச் செயற்பாடு குறித்து இன்றைய தினம் இன்னார் உத்வேகத்துடன் போரிட்டது போன்று வேறெவரும் நம்மில் செயற்படவில்லை என்று மக்களால் பேசப்பட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள் அவர் நரகவாசிகளில் ஒருவர் என்று கூறினார்கள். அப்போது மக்களில் அக்ஸம் பின் அபில் ஜவ்ள் என்ற ஒருவர் அடுத்த நாள் போரின் போது குஸ்மானைப்பின் தொடர்ந்து சென்றார். அப்போது குஸ்மான்போரின் ஒரு கட்டத்தில் கடுமையாகக் காயப்படுத் தப்பட்டார். அதன் வேதனை தாங்காமல் அவசர மாக இறந்துவிட விரும்பி தனது வாளின் அடிப் பகுதியை நிலத்தில் நட்டு வைத்து அதன் கூரான மேல் பகுதியைத் தனது மார்புகளுக்கிடையில் வைத்து அழுத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். 

 فَأُخْبِرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِذَلِكَ فَقَالَ اللَّهُ أَكْبَرُ أَشْهَدُ أَنِّي عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ ثُمَّ أَمَرَ بِلَالًا فَنَادَى بِالنَّاسِ إِنَّهُ لَا يَدْخُلُ الْجَنَّةَ إِلَّا نَفْسٌ مُسْلِمَةٌ وَإِنَّ اللَّهَ لَيُؤَيِّدُ هَذَا الدِّينَ بِالرَّجُلِ الْفَاجِرِ

நபி(ஸல்) அவர்களிடம் இவ்விபரம் அறிவிக்கப்பட்டபோது அவர்கள் "அல்லாஹ் மிகப் பெரியவன்; நான் அல்லாஹ்வின் அடியாரும் அவனது தூதருமாவேன் என்பதற்கு நானே சாட்சி கூறுகின்றேன் என்று சொல்லிவிட்டு, பிறகு பிலால்(ரழி) அவர்களை அனைத்து முஸ்லிமான ஆன்மாதான் சொர்க்கத்திற்குச் செல்ல முடியும். மேலும் அல்லாஹ் இந்த மார்க்கத்திற்குப் பாவியான மனித னின் மூலமாகவும் வலுவூட்டுகின்றான்என்று மக்களிடையே பொது அறிவிப்புச் செய்யும்படி ஏவினார்கள். (சுருக்கம்) அறிவிப்பாளர்கள்: அபூஹுரைரா (ரலி), சஹ்ல் பின் சஅத் (ரலி), ( நூல்: புகாரி )

யாஅல்லாஹ் காஸாவின் மக்களை காத்தருள்வாயாக! யாஅல்லாஹ் ஈரானுக்கு வெற்றியை வழங்குவாயாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!!

2 comments:

  1. 2:251 (குர்ஆன்) பொருத்தமாக இருக்கும்

    ReplyDelete